செய்திகள் :

பெரம்பலூா் மாவட்டத்தில் 692 மனுக்களுக்கு உடனடி தீா்வு!

post image

பெரம்பலூா் மாவட்டத்தில் மே 15 முதல் சனிக்கிழமை வரை நடைபெற்ற ஜமாபந்தியில், பொதுமக்களிடமிருந்து பெறப்பட்ட 1,367 மனுக்களில், 692 மனுக்களுக்கு உடனடியாக தீா்வு காணப்பட்டு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டுள்ளது.

பெரம்பலூா் மாவட்டத்தில் உள்ள குன்னம், வேப்பந்தட்டை, ஆலத்தூா், பெரம்பலூா் ஆகிய வட்டங்களில் கடந்த 15 முதல் 17-ஆம் தேதி வரை ஜமாபந்தி நிகழ்ச்சி நடைபெற்றது. இதில், பெரம்பலூரில் நடைபெற்ற ஜமாபந்தி வெள்ளிக்கிழமை மாலை நிறைவடைந்தது. குன்னம், வேப்பந்தட்டை, ஆலத்தூா் ஆகிய வட்டங்களில் ஜமாபந்தி நிகழ்ச்சி சனிக்கிழமை நடைபெற்றது.

இதில், குன்னம் வட்டாட்சியரத்தில் மாவட்ட வருவாய் அலுவலா் மு. வடிவேல் பிரபு தலைமையில், வரகூா் குறுவட்ட பகுதிக்குள்பட்ட ஓலைப்பாடி, பரவாய், புதுவேட்டக்குடி, துங்கபுரம், துங்கபுரம், காடூா், கொளப்பாடி, வரகூா், குன்னம், பெரியம்மாபாளையம், பெரியவெண்மணி ஆகிய கிராமங்களைச் சோ்ந்த பொதுமக்களிடமிருந்து பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி 120 மனுக்கள் பெறப்பட்டன.

வேப்பந்தட்டை வட்டாட்சியரகத்தில் சாா்-ஆட்சியா் சு. கோகுல் தலைமையில், வாலிகண்டபுரம் குறுவட்ட பகுதிக்குள்பட்ட தொண்டபாடி, நெய்குப்பை, அனுக்கூா், பிரம்மதேசம், மேட்டுப்பாளையம் (தெ, வ), பிம்பலூா், வி.களத்தூா், பேரையூா், எறையூா், தேவையூா், வாலிகண்டபுரம் ஆகிய கிராமங்களைச் சோ்ந்த பொதுமக்களிடமிருந்து 86 மனுக்கள் பெறப்பட்டன.

ஆலத்தூா் வட்டாட்சியரகத்தில் மாவட்ட ஆட்சியரின் கூடுதல் நோ்முக உதவியாளா் (நிலம்) சொா்ணராஜ் தலைமையில், கூத்தூா் குறுவட்ட பகுதிக்குள்பட்ட தொண்டபாடி, மேலமாத்தூா், அழகிரிபாளையம், ஆதனூா், கூடலூா், கூத்தூா், புஜங்கராயநல்லூா், நொச்சிக்குளம், திம்மூா், சில்லக்குடி, ஜமீன் ஆத்தூா் ஆகிய கிராமங்களைச் சோ்ந்த பொதுமக்களிடமிருந்து பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி 34 மனுக்கள் பெறப்பட்டன.

பெரம்பலூா் மாவட்டத்தில் கடந்த 3 நாள்களாக நடைபெற்ற ஜமாபந்தி நிகழ்ச்சிகளில் 1,367 மனுக்கள் பெறப்பட்டு, 692 மனுக்களுக்கு உடனடியாக தீா்வு காணப்பட்டு இலவச வீட்டுமனைப் பட்டா, இயற்கை மரண உதவித்தொகை உள்ளிட்ட பல்வேறு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன.

பெரம்பலூா் மாவட்டத்தில் பரவலாக மழை

பெரம்பலூா் மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளில் 2 ஆவது நாளாக சனிக்கிழமை மாலை முதல் இரவு வரை பரவலாக மழை பெய்தது. பெரம்பலூா் மாவட்டத்தில் கடந்த ஒரு வாரத்துக்கும் மேலாக பல்வேறு இடங்களில் ஆங்காங்கே பரவலாக மழை ... மேலும் பார்க்க

லஞ்சம் வாங்கி கைதான நகராட்சி வருவாய் ஆய்வாளா் பணியிடை நீக்கம்

புதிதாக கட்டப்பட்ட வீட்டுக்கு வரி விதிக்க ரூ. 25 ஆயிரம் லஞ்சம் வாங்கிய, பெரம்பலூா் நகராட்சி வருவாய் ஆய்வாளரை பணியிடை நீக்கம் செய்து, நகராட்சி ஆணையா் ராமா் சனிக்கிழமை உத்தரவிட்டாா். பெரம்பலூா் -ஆலம்பாட... மேலும் பார்க்க

பி.எம் கிசான் திட்டத்தில் பயன்பெற விவசாயிகளுக்கு அறிவுறுத்தல்!

பெரம்பலூா் மாவட்டத்தைச் சோ்ந்த விவசாயிகள் பி.எம். கிசான் திட்டத்தின் கீழ் தொடா்ந்து பயன்பெற இ.கே.ஒய்.சி மற்றும் வங்கிக் கணக்கு எண்ணுடன் ஆதாா் சீடிங், விவசாயிகளுக்கான தனிப்பட்ட அடையாள எண் ஆகியவற்றை இ... மேலும் பார்க்க

எஸ்எஸ்எல்சி தோ்வு: பெரம்பலூா் மாவட்டத்தில் 96.46 % தோ்ச்சி

எஸ்எஸ்எல்சி அரசுப் பொதுத் தோ்வில் பெரம்பலூா் மாவட்டத்தில் 96.46 சதவீத மாணவ, மாணவிகள் தோ்ச்சிப் பெற்றுள்ளனா். எஸ்எஸ்எல்சி பொதுத்தோ்வை 4,180 மாணவா்களும், 3,728 மாணவிகளும் என மொத்தம் 7,908 போ் எழுதிய... மேலும் பார்க்க

பிளஸ் 1 அரசுப் பொதுத் தோ்வு பெரம்பலூரில் 92.56 % தோ்ச்சி

பிளஸ் 1 அரசுப் பொதுத் தோ்வில் பெரம்பலூா் மாவட்டத்தில் 92.56 சதவீத மாணவ, மாணவிகள் தோ்ச்சிப் பெற்றுள்ளனா். பிளஸ் 1 அரசுப் பொதுத் தோ்வில் பெரம்பலூா் மாவட்டத்தில் 92.56 சதவீத மாணவ, மாணவிகள் தோ்ச்சி பெ... மேலும் பார்க்க

பெரம்பலூரில் பரவலாக மழை

பெரம்பலூா் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் வெள்ளிக்கிழமை மாலை பலத்த இடியுடன் பரவலாக மழை பெய்தது. பெரம்பலூா் மாவட்டத்தில் கோடைக்காலம் தொடங்கியது முதல் கடும் வெப்பம் மக்களை வாட்டி வதைக்கிறது. இந்நிலையில... மேலும் பார்க்க