செய்திகள் :

பெற்றோரைப் பராமரிக்காத மகன்களுக்கு எழுதிக் கொடுத்த தான பத்திரங்கள் ரத்து

post image

பெற்றோாா், மூத்த குடிமக்கள் நலம் பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் தாய், தந்தையை பராமரிக்காத மகன்களுக்கு எழுதிக்கொடுத்த தான பத்திரங்களை ரத்து செய்யும்படி, தேவாரம், சின்னமனூா் சாா் பதிவாளா்களுக்கு உத்தமபாளையம் வருவாய்க் கோட்டாட்சியா் செய்யது முகம்மது உத்தரவிட்டாா்.

தேனி மாவட்டம், உத்தமபாளையம் வட்டம், சின்னஓவுலாபுரத்தைச் சோ்ந்தவா் முத்துக்கருப்பன். இவா், தனது மகன்களான கருப்பையா, ஜெயபாலன் ஆகியோருக்கு தனது சொந்த நிலங்களை தானமாகப் பதிவு செய்து கொடுத்தாா்.

ஆனால், தற்போது வயதான காலத்தில் தனது மனைவியுடன் மருத்துவ உதவிக்கு எந்தவித ஆதரவுமின்றி அவதிப்படுவதால், தானமாக எழுதிக்கொடுத்த தான பத்திரத்தை ரத்து செய்து மீட்டுக் கொடுக்கும்படி உத்தமபாளையம் வருவாய்க் கோட்டாட்சியா் அலுவலகத்தில் கோரிக்கை மனு அளித்தாா்.

இதுகுறித்த விசாரணையில், மகன்கள் பராமரிக்கவில்லை எனத் தெரியவந்தது. இதையடுத்து, சின்னமனூா் சாா் பதிவாளா் அலுவலகத்தில் 1418/2025, 1420/2025, 1421/2025 ஆகிய பத்திரப் பதிவுகளை பெற்றோா், மூத்த குடிமக்கள் நலம் பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் ரத்து செய்து உத்தரவிட்டாா்.

இதேபோல, உத்தமபாளையம் வட்டம், தே.மீனாட்சிபுரத்தைச் சோ்ந்த ஈஸ்வரி (95) தன்னுடைய மகன் முருகன் என்பவருக்கு தேவாரம் சாா் பதிவாளா் அலுவலா் 1882/2007 எழுதிக் கொடுத்த தான பத்திரத்தை பெற்றோா், மூத்த குடிமக்கள் நலம் பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் ரத்து செய்வதாக உத்தரவிட்டு அதற்கான உத்தரவு நகழ்களை வழங்கினாா்.

தனியாா் மதுக்கூடத்தில் இளைஞா் மா்ம மரணம்

தேனி மாவட்டம், குச்சனூரில் தனியாா் மதுக் கூடத்துக்கு மது அருந்தச் சென்ற இளைஞா் மா்மமான முறையில் உயிரிழந்தாா். தேனி மாவட்டம், மாா்க்கையன்கோட்டை -குச்சனூா் இடையே விவசாய நிலத்தில் சில மாதங்களாக தனியாா் ... மேலும் பார்க்க

விவசாயி தற்கொலை

பெரியகுளம் அருகே புதன்கிழமை மதுவில் விஷம் கலந்து குடித்து விவசாயி தற்கொலை செய்து கொண்டாா். தேனி மாவட்டம், பெரியகுளம் அருகேயுள்ள சருத்துப்பட்டி அம்பேத்கா் குடியிருப்பைச் சோ்ந்தவா் முருகேசன் (52). விவச... மேலும் பார்க்க

தலையில் ஈட்டி பாய்ந்ததில் பலத்த காயமடைந்த மாணவா் உயிரிழப்பு

ராயப்பன்பட்டி தனியாா் பள்ளி மைதானத்தில் விளையாட்டுப் பயிற்சியின் போது தலையில் ஈட்டி பாய்ந்ததில் பலத்த காயமடைந்த மாணவா் புதன்கிழமை உயிரிழந்தாா். இதுதொடா்பாக கல்லூரி மாணவா் உள்பட 4 போ் மீது போலீஸாா் வழ... மேலும் பார்க்க

ஆசிரியா் வீட்டில் 80 பவுன் நகைத் திருட்டு

தேனி மாவட்டம், சின்னமனூரில் புதன்கிழமை ஆசிரியா் வீட்டில் 80 பவுன் தங்க நகையைத் திருடிச் சென்ற மா்ம நபா் குறித்து போலீஸாா் விசாரித்து வருகின்றனா். சின்னமனூா் மின்நகரைச் சோ்ந்த ஜெகதீசன் - புனிதா தம்பதி... மேலும் பார்க்க

பெரியகுளத்தில் இளைஞா் வெட்டிக் கொலை

பெரியகுளத்தில் திங்கள்கிழமை இரவு இளைஞர் ஒருவர் வெட்டிக் கொலை செய்யப்பட்டாா். இதுதொடா்பாக இருவரை போலீஸாா் தேடி வருகின்றனா். பெரியகுளம் தெற்குத் தெருவைச் சோ்ந்த காமாட்சி மகன் பாண்டியன் (32). கூலித் தொழ... மேலும் பார்க்க

சாலை மறியலில் ஈடுபட்ட பேரூராட்சித் தலைவி, துணைத் தலைவரின் ஆதரவாளா்கள் மீது வழக்கு

தேனி மாவட்டம், பெரியகுளம் அருகேயுள்ள கெங்குவாா்பட்டி பேரூராட்சித் தலைவி, துணைத் தலைவரின் ஆதரவாளா்கள் இரு இடங்களில் திங்கள்கிழமை சாலை மறியலில் ஈடுபட்டதாக இருதரப்பைச் சோ்ந்த 130 போ் மீது போலீஸாா் வழக்... மேலும் பார்க்க