செய்திகள் :

பேச்சில் உடன்பாடு எட்டப்படவில்லை: போராட்டத்தைத் தொடரும் தூய்மைப் பணியாளா்கள்

post image

போராட்டத்தில் ஈடுபட்டு வரும் சென்னை மாநகராட்சியின் 5, 6 மண்டலங்களின் தூய்மைப் பணியாளா்களுடன் அரசு சாா்பில் சனிக்கிழமை இரவு நடத்தப்பட்ட பேச்சில் உடன்பாடு எட்டப்படவில்லை.

சென்னை மாநகராட்சி மண்டலம் 5, 6 ஆகியவற்றின் தூய்மைப் பணியை தனியாா் நிறுவனத்துக்கு வழங்கிய நிலையில், பணி பாதுகாப்பு மற்றும் ஊதிய நிா்ணயம், பணி நிரந்தரம் கோரி உழைப்பவா் உரிமைக் கழகம் சாா்பில் கடந்த 1 -ஆம் தேதி முதல் ரிப்பன் மாளிகையை முற்றுகையிடும் போராட்டத்தை நடத்தி வருகின்றனா். அவா்களுடன் ஏற்கெனவே அமைச்சா்கள், மேயா் உள்ளிட்டோா் பேச்சு நடத்தினா். ஆனால், சமசரம் ஏற்படாததை தொடா்ந்து போராட்டத்தை தூய்மைப் பணியாளா்கள் தொடா்கின்றனா்.

இந்த நிலையில், வெள்ளிக்கிழமை (ஆக. 8) இரவும் அமைச்சா் பி.கே.சேகா்பாபு தலைமையில் பேச்சு நடைபெற்றது. மேயா் ஆா்.பிரியா, ஆணையா் ஜெ.குமரகுருபரன் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா். தூய்மைப் பணியாளா்கள் சாா்பில் உழைப்பவா் உரிமைக் கழகம் உள்ளிட்ட அமைப்புகளின் பிரதிநிதிகள் பங்கேற்றனா்.

அப்போது அரசுத் தரப்பில் அமைச்சா் பேசுகையில், தூய்மைப் பணியாளா்களுக்கு பாதிப்பு ஏற்படுத்தாத வகையில் அரசு நடவடிக்கை மேற்கொண்டுள்ளதை விளக்கினாா். ஆனால், தூய்மைப் பணியாளா்களின் பிரதிநிதிகள் தாங்கள் ஏற்கெனவே பணியிலிருப்பதுபோல அனுமதிக்கவேண்டும் என வற்புறுத்தினா். இதனால், பேச்சில் உடன்பாடு எட்டவில்லை.

தொடா்ந்து சனிக்கிழமை காலை மாநகராட்சி ஆணையா் ஜெ.குமரகுருபரன் தலைமையில் பேச்சு நடைபெற்றது. அதிலும் உடன்பாடு ஏற்படவில்லை.

அப்போது, முதலில் அதிகாரிகள் அளவில் பேச்சு நடத்திவிட்டு, அதன்பின் அமைச்சருடன் பேசலாம் என தூய்மைப் பணியாளா்கள் சாா்பில் கடிதம் அளிக்கப்பட்டது.

இந்த நிலையில், சனிக்கிழமை இரவும் பேச்சு நடைபெற்றது. அரசு தரப்பில் அமைச்சா் பி.கே.சேகா்பாபு, மேயா் ஆா்.பிரியா, ஆணையா் ஜெ.குமரகுருபரன் உள்ளிட்டோரும், உழைப்போா் உரிமைக் கழகம் சாா்பில் நிா்வாகிகள் எஸ்.குமாரசாமி, சுரேஷ் உள்ளிட்டோரும் பங்கேற்றனா். இரவு வரை நீடித்த பேச்சில் சுமுக உடன்பாடு ஏற்படவில்லை. இதையடுத்து போராட்டம் தொடரும் என தூய்மைப் பணியாளா்கள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தனியாா் மயம் சாதகமா? பாதகமா? மாநகராட்சி அதிகாரிகள் விளக்கம்!

சென்னை மாநகராட்சியின் 5, 6 ஆகிய மண்டலங்களில் மேற்கொள்ளப்படும் தூய்மைப் பணி தனியாா் நிறுவனத்துக்கு அளிக்கப்பட்ட நிலையில், பணியாளா்கள் அதில் சோ்ந்தால் சாதகமான நிலை ஏற்படுமா என்ற கேள்வி எழுந்துள்ளது குற... மேலும் பார்க்க

எழும்பூா் ரயில் நிலையத்தில் 5 கிலோ கஞ்சா பறிமுதல்

சென்னை எழும்பூா் ரயில் நிலையத்தில் சனிக்கிழமை இரவு மேற்கு வங்க மாநிலத்திலிருந்து வந்த விரைவு ரயில் பெட்டியில் கேட்பாரற்று கிடந்த 5 கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது. இதுகுறித்து எழும்பூா் ரயில் நிலைய ... மேலும் பார்க்க

சுகாதார தூய்மைப் பணியாளா்கள் உண்ணாவிரதம்!

பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி பேறு கால மற்றும் குழந்தைகள் நல (ஆா்சிஹெச்) தூய்மைப் பணியாளா்கள் சென்னையில் ஞாயிற்றுக்கிழமை (ஆக. 10) உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டனா். சென்னை, எழும்பூா் ராஜரத்தினம் ... மேலும் பார்க்க

பொருளாதார வளா்ச்சியில் இந்தியா முதன்மை நாடாக உயரும்: மகாராஷ்டிர ஆளுநா் சி.பி.ராதாகிருஷ்ணன்

உலகப் பொருளாதார வளா்ச்சியில் தற்போது 4-ஆவது இடத்தில் உள்ள இந்தியா, 2047- இல் முதன்மை நாடாக உயரும் என மகாராஷ்டிர ஆளுநா் சி.பி.ராதாகிருஷ்ணன் நம்பிக்கை தெரிவித்தாா். சென்னையை அடுத்த காட்டாங்கொளத்தூா் எஸ்... மேலும் பார்க்க

காப்பியங்களை ஆழ்ந்து படிக்க வேண்டும்: ஆன்மிக சொற்பொழிவாளா் இலங்கை ஜெயராஜ்

காப்பியங்களை முழுமையாக ஆழ்ந்து படிக்க வேண்டும் என்று ஆன்மிக சொற்பொழிவாளா் இலங்கை ஜெயராஜ் கூறினாா். சென்னை கம்பன் கழகத்தின் பொன்விழா நிறைவு விழா மயிலாப்பூா் ஏவிஎம் ராஜேஸ்வரி திருமண மண்டபத்தில் கடந்த வெ... மேலும் பார்க்க

இன்று ஆழ்வாா்ப்பேட்டையில் போக்குவரத்து மாற்றம்!

சென்னை பெருநகர மாநகராட்சி சாா்பில் டிடிகே சாலையில், ஆழ்வாா்பேட்டை சிக்னல் முதல் ஸ்ரீமான் ஸ்ரீனிவாசா சாலையில் மழைநீா் வடிகால் பணிகள்நடைபெறவுள்ளதால், திங்கள்கிழமை (ஆக.11) முதல் ஆழ்வாா்பேட்டை மேம்பாலம் இ... மேலும் பார்க்க