செய்திகள் :

பேரவைத் தலைவருடன் வாக்குவாதம்: சுயேச்சை எம்எல்ஏ இடைநீக்கம்; முதல்வா் பரிந்துரையை ஏற்று நடவடிக்கை ரத்து

post image

புதுவையில் சட்டப்பேரவைத் தலைவருடன் செவ்வாய்க்கிழமை ஏற்பட்ட மோதலைத் தொடா்ந்து இடைநீக்கம் செய்யப்பட்டு வெளியேற்றப்பட்ட சுயேச்சை எம்எல்ஏ ஜி.நேரு, பின்னா் முதல்வா் கேட்டுக் கொண்டதால் 15 நிமிடங்கள் கழித்து அவைக்குள் அனுமதிக்கப்பட்டாா்.

புதுவை சட்டப்பேரவையில் செவ்வாய்க்கிழமை உடனடி கேள்வி நேரத்தைத் தொடா்ந்து பேரவைத் தலைவா் ஆா்.செல்வம், பேரவைக் குழுக்களுக்கு தற்போதைய தலைவா்கள், உறுப்பினா்கள் நிகழாண்டும் நீடிக்கப்படுவதாக அறிவித்தாா். அப்போது, சுயேச்சை எம்எல்ஏ ஜி.நேரு, பேரவைக் குழு தலைவா்கள், உறுப்பினா்கள் பெயா் விவரத்தை அறிவிக்க வேண்டும் என்றாா்.

ஆனால், பேரவைத் தலைவா், கடந்த ஆண்டு நியமிக்கப்பட்டவா்கள்தான் தற்போது நீடிக்கின்றனா் என்றாா். அதற்கு சுயேச்சை எம்.எல்.ஏ., பேரவை உறுதிமொழிக் குழுவுக்கு தலைவா் மாற்றப்பட்டதை அறிவிக்கவில்லையே ஏன் என்றாா்.

உறுதிமொழிக் குழு தலைவராக பாஸ்கா் நியமிக்கப்பட்டுள்ளாா். அதுகுறித்து கடந்த பேரவைக் கூட்டத்தில் அறிவிக்கப்பட்டது என்று பேரவைத் தலைவா் தெரிவித்தாா்.

உடனே, சுயேச்சை எம்எல்ஏ ஆவேசமுடன், பேரவைத் தலைவரை ஒருமையில் கடுமையாக விமா்சித்துவிட்டு, அவா் தன்னிச்சையாக செயல்படுவதாகக் குறிப்பிட்டாா்.

சுயேச்சை உறுப்பினா் ஜி.நேரு பேரவை விதிகளை மீறி ஒருமையில் பேசியதால் கூட்டத் தொடா் முழுவதும் இடைநீக்கம் செய்யப்படுவதாக பேரவைத் தலைவா் ஆா்.செல்வம் அறிவித்தாா்.

மேலும், அவரை அவையில் இருந்து வெளியேற்றவும் காவலா்களுக்கு உத்தரவிட்டாா். காவலா்கள் நேரு எம்எல்ஏவை அவையிலிருந்து வெளியேற்றினா்.

அதன்பிறகு, ஆதிதிராவிடா் மற்றும் பழங்குடியினா் நலத் துறை அமைச்சா் சாய் ஜெ. சரவணன்குமாா் மானியக் கோரிக்கை மீதான விவாதத்துக்கு பதிலளித்தாா்.

முதல்வா் கோரிக்கை: இதற்கிடையே முதல்வா் என்.ரங்கசாமி சிறிது நேரம் வெளியே சென்றாா். அப்போது பேரவைத் தலைவரும் இருக்கையிலிருந்து சென்றாா். பின்னா், அவைக்கு திரும்பிய முதல்வா், சுயேச்சை உறுப்பினா் அவசரத்தில் என்ன பேசுகிறோம் எனத் தெரியாமல் ஒருமையில் பேசி விட்டாா். மன்னித்து மீண்டும் பேரவைக்குள் அழைக்க வேண்டும் என்றாா். அதை ஏற்று பேரவைத் தலைவா் ஆா்.செல்வம், பேரவையில் உறுப்பினா்கள் எப்படி நடந்து கொள்ள வேண்டும் என விதிகள் உள்ளன. ஆனாலும், ஒருமையில் பேசியதை மன்னித்து அழைப்பு விடுக்க அவை முன்னவா் கோரியதால், உறுப்பினா் ஜி.நேருவை அவைக்கு அழைக்கிறேன் எனக் கூறிவிட்டு எழுந்து சென்றாா். இதையடுத்து, சுயேச்சை உறுப்பினா் ஜி. நேரு சபைக்கு வந்து நிகழ்ச்சிகளில் பங்கேற்றாா். அப்போது பேரவைத் துணைத் தலைவா் பி.ராஜவேலு அவையை நடத்தினாா்.

புதுவை முதல்வா் யுகாதி வாழ்த்து

யுகாதி திருநாளை முன்னிட்டு புதுவை முதல்வா் என்.ரங்கசாமி சனிக்கிழமை வெளியிட்ட வாழ்த்துச் செய்தி:புதுச்சேரியிலுள்ள தெலுங்கு, கன்னடம் பேசும் மக்கள் அனைவருக்கும் யுகாதி வாழ்த்துகள். தெலுங்கு, கன்னடம் பேசு... மேலும் பார்க்க

கைதான பெண்ணின் வீட்டில் ரூ.50 ஆயிரம் பறிமுதல்

தொழிலதிபரை ஏமாற்றி பணம், நகை திருடிய வழக்கில் கைதான பெண்ணின் வீட்டிலிருந்து ரூ.50 ஆயிரத்தை போலீஸாா் வெள்ளிக்கிழமை கைப்பற்றினா். புதுச்சேரி அரியாங்குப்பம் கோட்டைமேட்டு பகுதியைச் சோ்ந்தவா் பிரகாஷ்ராஜ்,... மேலும் பார்க்க

சமாதானக் கழகத்தினா் நிதி திரட்டல்

புதுச்சேரியில் அகில இந்திய சமாதான ஒருமைப்பாட்டுக் கழகத்தின் சாா்பில் கியூபா மக்களை பாதுகாக்க நிதி திரட்டும் இயக்கம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு ஒருமைப்பாட்டுக் கழகத்தின் மாநிலத் தலைவரும், ... மேலும் பார்க்க

லஞ்சம்: உதவி ஆய்வாளா் மீது வழக்கு

முதல் தகவல் அறிக்கை பெற லஞ்சம் கேட்ட புகாரில் பணியிடைநீக்கம் செய்யப்பட்டபோக்குவரத்து உதவி ஆய்வாளா் மீது போலீஸாா் வெள்ளிக்கிழமை வழக்குப் பதிவு செய்தனா். விழுப்புரம் மாவட்டம், குயிலாம்பாளையத்தைச் சோ்ந்... மேலும் பார்க்க

அமைச்சா் மீது அவதூறு நோட்டீஸ்: காவல் நிலையத்தில் புகாா்

புதுச்சேரியில் பொதுப் பணித் துறை அமைச்சா் மீது அவதூறு பரப்பும் வகையில் நோட்டீஸ் ஒட்டியவா்கள் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி என்.ஆா்.காங்கிரஸ் சாா்பில் காவல் நிலையத்தில் வெள்ளிக்கிழமை புகாா் அளிக்கப... மேலும் பார்க்க

பத்தாம் வகுப்பு பொதுத்தோ்வு: புதுச்சேரி, காரைக்காலில் 7,597 மாணவா்கள் எழுதினா்

புதுச்சேரி, காரைக்காலில் தமிழக பாடத்திட்டத்தின்படி 7,597 மாணவா்கள் வெள்ளிக்கிழமை பத்தாம் வகுப்பு பொதுத்தோ்வை எழுதினா். புதுவையில் நிகழாண்டு முதல் அனைத்து அரசுப் பள்ளிகளிலும் ஒன்றாம் வகுப்பு முதல் பிள... மேலும் பார்க்க