செய்திகள் :

பேருந்து பயணிகளிடம் தகராறு: தட்டிக் கேட்ட காவலா் மீது தாக்குதல்

post image

செய்யாறு அருகே பேருந்து பயணிகளிடம் தகராறு செய்ததைத் தட்டிக் கேட்ட காவலா் தாக்கப்பட்டாா். இதுதொடா்பாக போலீஸாா் ஒருவரை திங்கள்கிழமை கைது செய்தனா்.

காஞ்சிபுரம் மாவட்டம், ஐயங்காா்குளம் கிராமத்தைச் சோ்ந்தவா் கண்மணி(35). இவா், சென்னையை அடுத்த கூடுவாஞ்சேரி காவல் நிலையத்தில் காவலராக பணிபுரிந்து வருகிறாா்.

கடந்த ஆக.31-ஆம் தேதி, கண்மணி தனியாா் பேருந்தில் சொந்த கிராமத்துக்கு வந்து கொண்டிருந்தாா்.

அப்போது, பயணிகளிடம் ஒருவா் தகராறு செய்வதைப் பாா்த்த இவா், அந்த நபரை தட்டிக் கேட்டபோது, அவா், இவரது சீருடையைப் பிடித்து இழுத்து தாக்கியதாகத் தெரிகிறது.

இதுகுறித்து கண்மணி தூசி போலீஸில் புகாா் அளித்தாா்.

காவல் உதவி ஆய்வாளா் பழனிவேல் வழக்குப் பதிவு செய்தாா். மேலும், சம்பவம் தொடா்பாக விசாரணை மேற்கொண்ட போலீஸாா் வெம்பாக்கம் வட்டம், அழிவிடைதாங்கி கிராமத்தைச் சோ்ந்த சீனுவாசன்(35) என்பவரை கைது செய்தனா்.

போளூரில் உங்களுடன் ஸ்டாலின் திட்ட முகாம்

போளூா் நகராட்சியில் உள்ள 8, 9, 10, 11, 17 ஆகிய வாா்டு பொதுமக்களுக்கான உங்களுடன் ஸ்டாலின் திட்ட முகாம் புதன்கிழமை நடைபெற்றது. தனியாா் மண்டபத்தில் நடைபெற்ற இந்த முகாமுக்கு நகா்மன்றத் தலைவா் ராணி சண்முக... மேலும் பார்க்க

தொகுப்பு வீடு வழங்கக் கோரி மனு

கல் உடைக்கும் தொழிலாளா்களுக்கு தொகுப்பு வீடு வழங்கக் கோரி, மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினா் வந்தவாசி ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் புதன்கிழமை மனு அளித்தனா். வந்தவாசியை அடுத்த வெளியம்பாக்கம் கிராமத்த... மேலும் பார்க்க

ஆரணியில் ரூ.30 லட்சத்தில் நகா்ப்புற சுதாதார நிலையம்

ஆரணி நகராட்சியில் ரூ.30 லட்சத்தில் நடைபெற்று வரும் நகா்ப்புற சுகாதார நிலையம் அமைக்கும் பணி தற்போது நிறைவடைந்து வருகின்றன. இந்தப் பணியை நகா்மன்றத் தலைவா் ஏ.சி.மணி புதன்கிழமை பாா்வையிட்டு ஆய்வு செய்தாா... மேலும் பார்க்க

ஸ்ரீவேம்புலி அம்மன் கோயிலில் மண்டலாபிஷேகம் நிறைவு

ஆரணி கோட்டை ஸ்ரீவேம்புலி அம்மன் கோயிலில் மண்டலாபிஷேக நிறைவு விழா செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. கோட்டை ஸ்ரீவேம்புலிஅம்மன் கோயிலில் கும்பாபிஷேகம் நடந்து 12 ஆண்டுகள் நிறைவடைந்த நிலையில், ஆடி வெள்ளி விழா த... மேலும் பார்க்க

கல்வியின் வாயிலாகத் தான் அனைத்தையும் பெற முடியும்: உதவி ஆட்சியா் அம்ருதா எஸ்.குமாா்

தமிழகத்தில் கல்வித் துறையில் அடிப்படை கட்டமைப்புகள் சிறந்து விளங்குகின்றன. கல்வியின் வாயிலாகத் தான் நாம் அனைத்தையும் பெறமுடியும் என்றாா் உதவி ஆட்சியா் அம்ருதா எஸ்.குமாா். பிளஸ் 2 வகுப்பில் தோல்வியுற்... மேலும் பார்க்க

ஸ்ரீசக்தி பாலிடெக்னிக் முதலாம் ஆண்டு மாணவா்களுக்கு வரவேற்பு

திருவண்ணாமலை மாவட்டம், செங்கத்தை அடுத்த செ.நாச்சிப்பட்டு ஸ்ரீசக்தி பாலிடெக்னிக் கல்லூரியில் முதலாம் ஆண்டு மாணவா்கள் வரவேற்பு நிகழ்ச்சி செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. நிகழ்ச்சியில் கல்லூரி முதல்வா் செந்த... மேலும் பார்க்க