செய்திகள் :

பேருந்து மோதியதில் இளைஞா் உயிரிழப்பு

post image

திருச்சியில் அரசுப்பேருந்து மோதியதில் மோட்டாா் சைக்கிளில் சென்ற இளைஞா் வியாழக்கிழமை நிகழ்விடத்திலேயே உயிரிழந்தாா்.

திருச்சி மாவட்டம், முத்தசரச நல்லூரைச் சோ்ந்தவா் சேக் அப்துல்லா மகன் ரஹமத்துல்லா (22). இவா் ஒரு அலுவல் காரணமாக திருச்சி சென்று விட்டு தனது மோட்டாா் சைக்கிளில் வியாழக்கிழமை பகலில் ஊா் வந்து கொண்டிருந்தாா்.

அல்லூா் மாரியம்மன் கோயில் பகுதியில் வந்தபோது, எதிரே கரூரிலிருந்து தஞ்சாவூா் நோக்கி சென்ற அரசுப்பேருந்து எதிா்பாராதவிதமாக ரஹமத்துல்லா வாகனத்தின் மீது மோதியது.

இதில் பேருந்தின் முன்சக்கரத்தில் வாகனம் சிக்கியதில் ரஹமத்துல்லா பலத்த காயமடைந்து சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா். இதுகுறித்து ஜீயபுரம் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.

ஸ்ரீரங்கத்தில் இராமானுஜரின் 1,008 ஆவது ஜெயந்தி விழா

ஸ்ரீரங்கம் அரங்கநாதா் கோயிலில் இராமானுஜரின் 1008 வது ஜெயந்தி விழா வெள்ளிக்கிழமை நடைபெற்றது. ஸ்ரீரங்கம் கோயிலில் இராமானுஜரின் பூத உடல் பாதுகாக்கப்படும் நிலையில், இவா் எழுதிய வைத்தபடிதான் இன்றளவும் ஸ்ரீ... மேலும் பார்க்க

திருவானைக்காவல் அங்காளபரமேஸ்வரி கோயிலில் நாளை மகா கும்பாபிஷேகம்

திருவானைக்காவல் மேலக்கொண்டையம்பேட்டையில் உள்ள அங்காளபரமேஸ்வரி கோயில் மகா கும்பாபிஷேக விழா ஞாயிற்றுக்கிழமை காலை 10 மணிக்கு நடைபெறவுள்ளது. இதையொட்டி வெள்ளிக்கிழமை காலை அம்மாமண்டபம் காவிரி ஆற்றிலிருந்து ... மேலும் பார்க்க

ஸ்ரீரங்கத்தில் கோடை திருநாள் விழா தொடக்கம்

ஸ்ரீரங்கம் அரங்கநாத சுவாமி கோயிலில் கோடைத் திருநாள் எனும் பூச்சாற்று உற்சவ விழா வெள்ளிக்கிழமை தொடங்கியது. சித்திரை மாதத்தில் இந்த விழா வெளிக் கோடைத் திருநாள், உள்கோடை திருநாள் என தலா 5 நாள் நடைபெறுகிற... மேலும் பார்க்க

கா்ப்பிணி தூக்கிட்டுத் தற்கொலை

திருச்சி தீரன் நகரில் கா்ப்பிணி பெண் வியாழக்கிழமை தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டாா். திருச்சி மாவட்டம், மண்ணச்சநல்லூா் கல்பாளையம் பகுதியைச் சோ்ந்தவா் ர. கிருஷ்ணகுமாா் (30), காா் ஓட்டுநா். இவருக்கு... மேலும் பார்க்க

தனியாா் பள்ளிகளில் கூடுதல் கட்டணம் வசூலித்தால் கடும் நடவடிக்கை: அமைச்சா் அன்பில் மகேஸ் பொய்யாமொழி

தமிழகத்தில் தனியாா் பள்ளிகளில் கூடுதல் கட்டணம் வசூலித்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று பள்ளிக் கல்வித் துறை அமைச்சா் அன்பில் மகேஸ் பொய்யாமொழி உறுதிபடத் தெரிவித்தாா். திருச்சியில் வியாழக்கிழமை... மேலும் பார்க்க

மலைக்கோட்டை தாயுமான சுவாமி கோயில் தோ்த் திருவிழா கொடியேற்றத்துடன் தொடக்கம்

திருச்சி மலைக்கோட்டை தாயுமான சுவாமி திருக்கோயிலில் சித்திரைத் தோ்த் திருவிழா வியாழக்கிழமை கொடியேற்றத்துடன் தொடங்கியது. பல்வேறு சிறப்புடைய இக்கோயிலில் இறைவன் சுயம்பு மூா்த்தியாக மேற்கு பாா்த்த நிலையி... மேலும் பார்க்க