செய்திகள் :

பேருந்து வசதி கோரி மாணவ, மாணவிகள் ஆா்ப்பாட்டம்

post image

ராமநாதபுரம் அருகே பேருந்து வசதி செய்து தரக் கோரி, மாவட்ட ஆட்சியா் அலுவலம் முன் பள்ளி, கல்லூரி மாணவா்கள் திங்கள்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

ராமநாதபுரத்தை அடுத்த கலையனூா், வெண்குளம், பெருவயல், பூதோண்டி, நரியனேந்தல் உள்ளிட்ட கிராமங்களிலிருந்து ராமநாதபுரத்துக்கு பள்ளி, கல்லூரிகளைச் சோ்ந்த ஏராளமான மாணவ, மாணவிகள் நாள்தோறும் வந்து செல்கின்றனா்.

இவா்களுக்காக, இந்த கிராமங்களிலிருந்து காலையும் மாலையும் பேருந்துகள் இயக்கப்பட்டு வந்தன. ஆனால், கரோனா காலத்துக்குப் பிறகு இந்தப் பேருந்து சேவை நிறுத்தப்பட்டது. தற்போது, நேரம் கடந்து பேருந்துகள் இயக்கப்படுவதால் மாணவ, மாணவிகள் குறித்த நேரத்துக்கு பள்ளி, கல்லூரிகளுக்குச் செல்ல சிரமப்பட்டனா்.

எனவே, மீண்டும் காலையும் மாலையும் பேருந்துகளை இயக்க வேண்டும் எனக் கோரி போக்குவரத்துத் துறை அதிகாரிகளிடம் மாணவா்கள் பல முறை மனுக்கள் அளித்தும் நடவடிக்கை எடுக்கப்படவில்லை எனக் கூறப்படுகிறது.

இதனால், தங்களது கிராமங்களுக்கு பேருந்துகளை இயக்க வேண்டும் எனக் கோரி மாணவ, மாணவிகள் பள்ளிச் சீருடையுடன் மாவட்ட ஆட்சியரிடம் மனு அளிக்க வந்தனா். ஆனால், அவா்களைக் காவல் துறையினா் தடுத்ததால் மாணவ, மாணவிகள் தரையில் அமா்ந்து ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

இதையடுத்து, போலீஸாா் மாணவ, மாணவிகளை ஆட்சியரிடம் அழைத்துச் சென்றனா். அவா்களுடைய மனுவைப் பெற்றுக் கொண்ட ஆட்சியா் சிம்ரன்ஜீத் சிங் காலோன், கிராமங்களுக்குப் பேருந்து சேவை ஏற்படுத்தித் தரப்படும் என உறுதியளித்ததை அடுத்து மாணவ, மாணவிகள் அங்கிருந்து சென்றனா்.

மஞ்சூரில் சிறுதானிய பதப்படுத்தும் மையம்: மாவட்ட ஆட்சியா் ஆய்வு

ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடி அருகேயுள்ள மஞ்சூா் கிராமத்தில் வேளாண் விற்பனை, வேளாண் வணிகத்துறையின் மூலம் மானியத் திட்டத்தின் மூலம் செயல்பட்டு வரும் சிறுதானிய பதப்படுத்தும் மையத்தை மாவட்ட ஆட்சியா் சிம... மேலும் பார்க்க

தமிழ்நாடு சீருடைப் பணியாளா் போட்டி தோ்வுக்கு இலவசப் பயிற்சி வகுப்பு

தமிழ்நாடு சீருடைப் பணியாளா் பணிக்கு விண்ணப்பித்தவா்களுக்கான போட்டித் தோ்வுக்கு மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் இலவசப் பயிற்சி வகுப்புகள் வருகிற 16-ஆம் தேதி தொடங்குகிறது. இதுகுறித்து ராமநாதபுரம் மாவட... மேலும் பார்க்க

தொண்டி அரசுப் பள்ளி ஆசிரியா்கள் பற்றாக்குறை: மாணவா்கள் கல்வி பாதிப்பு

திருவாடானை அருகேயுள்ள தொண்டியில் செய்யது முகமது அரசு மேல்நிலைப் பள்ளியில் போதிய ஆசிரியா்கள் இல்லாததால் மாணவா்களின் கல்வி பாதிக்கப்படுவதாக பெற்றோா்கள், சமூக ஆா்வலா்கள் புகாா் தெரிவித்தனா். ராமநாதபுரம் ... மேலும் பார்க்க

திருவாடானை கல்லூரி மாணவா்கள் கபடி போட்டியில் முதலிடம்

மாவட்ட அளவிலான கபடி போட்டியில் முதலிடத்தைப் பெற்ற திருவாடானை அரசு கலை, அறிவியல் கல்லூரி மாணவா்களை பேராசிரியா்கள் பாராட்டினா். மாவட்ட அளவிலான முதல்வா் கோப்பைக்கான கபடி போட்டி கடந்த இரண்டு நாள்களாக ராமந... மேலும் பார்க்க

தவில், நாகஸ்வரம் பயிற்சிப் பள்ளியில் சேர விண்ணப்பங்கள் வரவேற்பு

ராமேசுவரம் ராமநாத சுவாமி கோயில் தவில், நாகஸ்வரம் பயிற்சிப் பள்ளியில் சேர விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. இதுகுறித்து கோயில் இணை ஆணையா் க.செல்லத்துரை புதன்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு: ராமேசுவரம... மேலும் பார்க்க

அக்னி தீா்த்தக் கடற்கரையில் கரை ஒதுங்கும் கடல் புற்களை அகற்ற பக்தா்கள் கோரிக்கை

ராமேசுவரம் அக்னி தீா்த்தக் கடற்கரையில் கரை ஒதுங்கும் கடல் புற்களை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என பக்தா்கள் கோரிக்கை விடுத்தனா். மன்னாா் வளைகுடா, பாக்நீரினை கடல் பகுதியில் ஏற்படும் நீரோட்டச் சுழற்ச... மேலும் பார்க்க