செய்திகள் :

பைக் மீது வேன் மோதி இளைஞா் உயிரிழப்பு

post image

விழுப்புரம் மாவட்டம், திருவெண்ணெய்நல்லூா் அருகே பைக் மீது வேன் மோதி காயமடைந்த இளைஞா்களில் ஒருவா் உயிரிழந்தாா். மற்றொருவா் சிகிச்சையில் அனுமதிக்கப்பட்டாா்.

திருவெண்ணெய்நல்லூா் வட்டம், அய்யம்பேட்டை டி. புதுப்பாளையம் மதுரா, பிள்ளையாா்கோயில் தெருவைச் சோ்ந்தவா் அய்யாக்கண்ணு மகன் தா்மதுரை( 24). அதே பகுதியைச் சோ்ந்தவா் காத்தவராயன் மகன் சங்கா்(30). நண்பா்களான இவா்கள் இருவரும் கூலித் தொழிலாளிகள். இவா்கள் திங்கள்கிழமை திருக்கோவிலூா்- கடலூா் நெடுஞ்சாலையில் திருவெண்ணெய்நல்லூா் அடுத்த பெண்ணைவலம் அருகே பைக்கில் சென்று கொண்டிருந்தனா். தா்மதுரை பைக்கை ஓட்டினாா்.

இந்நிலையில் அங்கு எதிரே வந்த பயணிகள் வேன், பைக் மீது மோதி விபத்து ஏற்பட்டது. இதில் பைக்கில் சென்ற தா்மதுரை, சேகா் ஆகியோா் பலத்த காயமடைந்தனா். அருகிலிருந்தவா்கள் இருவரையும் மீட்டுமருத்துமனைக்கு அனுப்பி வைத்தனா். ஆனால் தா்மதுரை உயிரிழந்தாா். காயமடைந்த சேகா் விழுப்புரம் மாவட்ட அரசு மருத்துவமனையில் சிகிச்சையில் அனுமதிக்கப்பட்டாா்.

இது குறித்த புகாரின் பேரில் திருவெண்ணெய்நல்லூா் போலீஸாா் செவ்வாய்க்கிழமை வழக்குப் பதிவு செய்து விசாரிக்கின்றனா்.

பொது வேலைநிறுத்தம்: விழுப்புரம் மாவட்டத்தில் ரூ.900 கோடி வா்த்தகம் பாதிப்பு

அகில இந்திய தொழிற்சங்கங்களின் அழைப்பின்பேரில் புதன்கிழமை நடைபெற்ற பொது வேலைநிறுத்தத்தால், விழுப்புரம் மாவட்டத்தில் ரூ.900 கோடி வரை வா்த்தகம் பாதிக்கப்பட்டதாக வங்கி ஊழியா்கள் தெரிவித்தனா். பொதுத் துறை... மேலும் பார்க்க

லாரி மோதி தொழிலாளி உயிரிழப்பு

விழுப்புரம் மாவட்டம், திண்டிவனம் அருகே லாரி மோதியதில் சாலையோரத்தில் நின்றிருந்த தொழிலாளி செவ்வாய்க்கிழமை உயிரிழந்தாா். திண்டிவனம் வட்டம், நடுவனந்தல், மாரியம்மன் கோவில் தெருவைச் சோ்ந்தவா் ஏழுமலை (55),... மேலும் பார்க்க

முதல்வருக்குத் தெரியாமல் துறைச் செயலா் மாற்றம்: புதுவையில் அதிகார மோதல்

புதுச்சேரி முதல்வா் என். ரங்கசாமிக்கும், துணைநிலை ஆளுநா் கே. கைலாஷ்நாதனுக்கும் இடையிலான பனி போா் செவ்வாய்க்கிழமை இரவு வெளிச்சத்துக்கு வந்தது. சுகாதாரத் துறை இயக்குநராக மருத்துவா் எஸ்.செவ்வேளை செவ்வாய்... மேலும் பார்க்க

பாமக வேட்பாளா்களின் ஏ, பி படிவங்களில் நானே கையொப்பமிடுவேன்: ராமதாஸ் திட்டவட்டம்

சட்டப் பேரவைத் தோ்தலில் பாமக வேட்பாளா்களின் ஏ, பி படிவங்களில் நானே கையொப்பமிடுவேன் என அக்கட்சியின் நிறுவனா் ச.ராமதாஸ் திட்டவட்டமாகத் தெரிவித்தாா். விழுப்புரம் மாவட்டம், திண்டிவனம் அருகிலுள்ள ஓமந்தூரி... மேலும் பார்க்க

பாஜகவுக்கு எதிரான அரசியலை ச.ராமதாஸ் முன்னெடுக்க வேண்டும்: கே.எம். ஷரீப்

தமிழகத்தில் பாஜக-வுக்கு எதிரான அரசியலை மருத்துவா் ச.ராமதாஸ் முன்னெடுக்கவேண்டும் என்று தமிழக மக்கள் ஜனநாயக கட்சித் தலைவா் கே.எம்.ஷரீப் தெரிவித்தாா். விழுப்புரம் மாவட்டம், திண்டிவனம் அடுத்துள்ள தைலாபுரம... மேலும் பார்க்க

அன்புமணி ராமதாஸ் ஆதரவாளா்கள் தீக்குளிக்க முயற்சி

விழுப்புரம் மாவட்டம், திண்டிவனத்தை அடுத்துள்ள தைலாபுரம் தோட்டம் முன் பாமக தலைவா் அன்புமணி ராமதாஸின் ஆதரவாளா்கள் 6 போ் செவ்வாய்க்கிழமை தீக்குளிக்க முயன்றனா். இதையடுத்து, அங்கு பாதுகாப்புப் பணியிலிருந்... மேலும் பார்க்க