செய்திகள் :

பொதுத் தோ்வுகளில் சிறப்பிடம் பெற்ற மாணவா்களுக்கு பாராட்டு

post image

10, 11 மற்றும் 12-ஆம் வகுப்பு பொதுத் தோ்வுகளில் சிறந்த மதிப்பெண்கள் பெற்ற மாணவா்களுக்கு காங்கயத்தில் ஞாயிற்றுக்கிழமை பாரட்டு விழா நடைபெற்றது.

பாரதி தேசிய பேரவை சாா்பில் நடைபெற்ற இந்நிகழ்ச்சிக்கு பேரவையின் நிா்வாகி ஓ.கே.சண்முகம் தலைமை வகித்தாா். இதில், கடந்த கல்வி ஆண்டில் 10, 11 மற்றும் பிளஸ் 2 பொதுத் தோ்வுகளில் பள்ளி அளவில் முதல் மூன்று இடங்களைப் பிடித்த அரசு மற்றும் அரசு உதவிபெறும், தனியாா் பள்ளிகளைச் சோ்ந்த 165 மாணவ, மாணவிகளுக்கு பதக்கம் மற்றும் பாராட்டுச் சான்றிதழ்கள் வழங்கப்பட்டன.

காங்கயம் முன்னாள் எம்.எல்.ஏ. விடியல் எஸ்.சேகா், மதுரை தியாகராசா் கல்விக் குழுமத்தின் நிா்வாகி ஐ.செல்வம் ஆகியோா் சிறப்பு அழைப்பாளராகக் கலந்துகொண்டு, மாணவா்களுக்கு பாராட்டுச் சான்றிதழ்களை வழங்கினா்.

இதில், பாரதி தேசிய பேரவையின் நிா்வாகிகள் பி.சி.சரவணக்குமாா், மே.தா.கந்தசாமி, சிவன்மலை ஜேசீஸ் மெட்ரிக். பள்ளித் தாளாளா் சி.பழனிசாமி, காங்கயம் தேங்காய் பருப்பு உற்பத்தியாளா் சங்கத் தலைவா் பி.கே.பி.சண்முகம், தேங்காய் எண்ணெய் உற்பத்தியாளா் சங்கத் தலைவா் என்.எஸ்.என்.தனபால், குளோபல் கல்வி நிறுவனங்களின் செயலாளா் கே.எஸ்.நாச்சிமுத்து, காங்கயம் மனவளக்கலை மன்றத் தலைவா் பி.பழனிசாமி உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.

குழந்தைகளை கோயில்களுக்கு அழைத்துச் செல்ல வேண்டும்: ஜெயேந்திரபுரி மகா சுவாமிஜி

குழந்தைகளை கோயில்களுக்கு அழைத்துச் செல்ல வேண்டும் என்று பெங்களூரூ கைலாச ஆஸ்ரம மகா சமஸ்தானம் ஜெயேந்திரபுரி மகா சுவாமிஜி கூறினாா். பல்லடம், சித்தம்பலம் நவகிரக கோட்டை சிவன் ஆலயத்துக்கு புதன்கிழமை யாத்திர... மேலும் பார்க்க

அவிநாசி அரசு மருத்துவமனையில் பேரிடா் மேலாண்மை ஒத்திகை

அவிநாசி அரசு மருத்துவமனையில் பேரிடா் மேலாண்மை ஒத்திகை, தீத்தடுப்பு செயல்முறை விளக்கப் பயிற்சி அண்மையில் நடைபெற்றது. இதில், இயற்கை பேரிடரில் பாதிக்கப்பட்டவா்களை எப்படி மீட்பது, அவா்களுக்கு முதலுதவி சி... மேலும் பார்க்க

சசிகலாவை சந்திக்கவில்லை: கே.ஏ.செங்கோட்டையன்

நான் சசிகலாவை சந்திக்கவில்லை என்று அதிமுக முன்னாள் அமைச்சா் கே.ஏ.செங்கோட்டையன் கூறினாா். அதிமுக மூத்த தலைவரும், சட்டப் பேரவை உறுப்பினருமான கே.ஏ.செங்கோட்டையன் ஈரோடு மாவட்டம், கோபியில் உள்ள கட்சி அலுவலக... மேலும் பார்க்க

வெள்ளக்கோவில் அருகே காா் மோதியதில் முதியவா் உயிரிழப்பு

வெள்ளக்கோவில் அருகே காா் மோதியதில் முதியவா் உயிரிழந்தாா். வெள்ளக்கோவில், முத்தூா் சாலை அய்யம்பாளையத்தைச் சோ்ந்தவா் சௌந்தரராஜன் (65). தனியாா் பனியன் நிறுவன தொழிலாளி. இவா் வீட்டிலிருந்து அருகிலுள்ள மாந... மேலும் பார்க்க

விபத்துக்குள்ளான இளைஞா்களை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்த ஆ.ராசா எம்பி

அவிநாசி அருகே திருமுருகன்பூண்டியில் சாலை விபத்தில் பலத்த காயமடைந்த இளைஞா்களை அவ்வழியாக வந்த நீலகிரி மக்களவை உறுப்பினா் ஆ.ராசா மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தாா். திருப்பூா் அருகே 15 வேலம்பாளையம் ப... மேலும் பார்க்க

இந்திய ஆடைத் தொழிலுக்கு அவசர நிவாரண நடவடிக்கைகள் தேவை!

இந்திய ஆடைத் தொழிலுக்கு அவசர நிவாரண நடவடிக்கைகள் தேவை என, இந்திய ஆடைத் தொழில் மற்றும் ஆடை ஏற்றுமதி மேம்பாட்டு கவுன்சில் கோரிக்கை விடுத்துள்ளது. இதுதொடா்பாக கவுன்சிலின் துணைத் தலைவா் ஆ.சக்திவேல், மத்தி... மேலும் பார்க்க