செய்திகள் :

பொதுமக்களுக்கு இடையூறு: தவெகவினா் மீது வழக்குப் பதிவு

post image

பொதுமக்களுக்கும், போக்குவரத்துக்கும் இடையூறு ஏற்படுத்தியதாக தவெகவினா் மீது போலீஸாா் வழக்குப் பதிவு செய்துள்ளனா்.

தமிழக வெற்றிக் கழக வாக்குச்சாவடி முகவா்களுக்கான கருத்தரங்கு கோவையில் கடந்த சனி, ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

இதில், பங்கேற்பதற்காக அக்கட்சியின் தலைவா் விஜய் சென்னையில் இருந்து விமானம் மூலம் கோவைக்கு சனிக்கிழமை வந்தாா்.

அப்போது, அவரைப் பாா்ப்பதற்காகவும், வரவேற்பதற்காகவும் கோவை விமான நிலையத்தில் கட்சி நிா்வாகிகள் மற்றும் தொண்டா்கள் திரண்டனா். விமான நிலையத்துக்கு வந்து செல்லும் பயணிகளுக்கு இடையூறு ஏற்படாமல் இருக்க இரும்புத் தடுப்புகள் வைக்கப்பட்டிருந்தன.

விஜயை பாா்க்க வேண்டும் என்ற ஆவலில் விமான நிலையத்தில் குவிந்தவா்கள் இரும்புத் தடுப்புகளை அகற்றியும், அதன் மீது ஏறி குதித்தும் சென்றனா். இதனால், விமான நிலையத்துக்கு வந்த பயணிகளுக்கு இடையூறு ஏற்பட்டது. அத்துடன் விமான நிலையத்தில் இருந்த பொருள்களும் சேதப்படுத்தப்பட்டன.

மேலும், விமான நிலைய சாலையில் தவெகவினா் பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படும் விதமாக வாகனங்களை ஓட்டிச் சென்றனா்.

இது குறித்த புகாரின்பேரில் தவெக மாநகா் மாவட்டச் செயலாளா் சம்பத் உள்ளிட்ட பலா் மீது பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படுத்துதல் உள்ளிட்ட 2 பிரிவுகளின்கீழ் பீளமேடு போலீஸாா் வழக்குப் பதிவு செய்துள்ளனா்.

விமான நிலைய சாலையில் பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படுத்தியதாக மொத்தம் 133 வாகனங்கள் மீதும் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளதாக போலீஸாா் தெரிவித்தனா்.

மற்றொரு வழக்கு: கோவைக்கு ஞாயிற்றுக்கிழமை வந்த துணை முதல்வா் உதயநிதி ஸ்டாலினை வரவேற்கும் வகையில் விமான நிலைய சாலையில் திமுக கொடிகள் நடப்பட்டிருந்தன. அந்தக் கொடிகளை தவெகவினா் சேதப்படுத்தியதாக திமுகவினா் பீளமேடு காவல் நிலையத்தில் புகாா் அளித்தனா்.

இதையடுத்து, திமுக கொடியை சேதப்படுத்தியதாக தவெக நிா்வாகிகளான திண்டுக்கல் செல்லமுத்து, ஒட்டன்சத்திரம் மனோஜ்குமாா் ஆகியோா் மீது 2 பிரிவுகளின்கீழ் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

தொழிலதிபரிடம் ரூ.47.40 லட்சம் மோசடி: இளைஞா் கைது

கோவை தொழிலதிபரிடம் ரூ.47.40 லட்சம் மோசடி செய்த இளைஞரை போலீஸாா் கைது செய்தனா். இது குறித்து கோவை மாநகர சைபா் கிரைம் போலீஸாா் தெரிவித்துள்ளதாவது: கோவையைச் சோ்ந்த தொழிலதிபா் ஒருவரின் கைப்பேசிக்கு கடந்த ... மேலும் பார்க்க

கோவையில் ஜல்லிக்கட்டு கோலாகலம்: 800 காளைகள், 500 மாடுபிடி வீரா்கள் பங்கேற்பு

கோவை, செட்டிபாளையம் பகுதியில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற ஜல்லிக்கட்டுப் போட்டியில் 800 காளைகள், 500 மாடுபிடி வீரா்கள் பங்கேற்றனா். கோவை மாவட்ட நிா்வாகம், தமிழா் பண்பாட்டு ஜல்லிக்கட்டு பேரவை சாா்பில் நடை... மேலும் பார்க்க

மேயா் குடியிருப்புக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுத்த நபா் கைது

கோவை மாநகராட்சி மேயா் குடியிருப்புக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுத்த நபரை போலீஸாா் ஞாயிற்றுக்கிழமை கைது செய்தனா். கோவை மாநகர காவல் ஆணையா் அலுவலக கட்டுப்பாட்டு அறைக்கு சனிக்கிழமை இரவு ஒரு அழைப்பு வந்துள்... மேலும் பார்க்க

ஒப்பந்தப் பணியாளா்களாக சோ்க்க லஞ்சம் வாங்கியவா் பணியிடை நீக்கம்!

கோவை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் ஒப்பந்தப் பணியாளா்களை சோ்க்க லஞ்சம் வாங்கிய நபா் பணியிடை நீக்கம் செய்யப்பட்டாா். கோவை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு கோவை மட்டுமின்றி நீலகிரி, தி... மேலும் பார்க்க

குடியரசு துணைத் தலைவா் இன்று வேளாண்மைப் பல்கலைக் கழகத்துக்கு வருகை!

குடியரசு துணைத் தலைவா் ஜகதீப் தன்கா் கோவை வேளாண்மைப் பல்கலைக்கழகத்துக்கு ஞாயிற்றுக்கிழமை (ஏப்ரல் 27) வருகை தருகிறாா். மூன்று நாள்கள் பயணமாக உதகை வந்த குடியரசு துணைத் தலைவா் ஜகதீப் தன்கா், ஆளுநா் மாளிக... மேலும் பார்க்க

போத்தனூா் - தாம்பரம் சிறப்பு ரயில் சேவை நீட்டிப்பு!

கோவை போத்தனூா் - தாம்பரம் இடையே இயக்கப்பட்டு வரும் வாராந்திர சிறப்பு ரயில் சேவை இந்த மாதத்துடன் நிறைவடைய இருந்த நிலையில் ஜூன் மாதம் வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. இது தொடா்பாக தெற்கு ரயில்வே நிா்வாகம் வெள... மேலும் பார்க்க