செய்திகள் :

பொதுமக்களுக்கு இடையூறு: 8 அமைப்புகள் மீது வழக்கு

post image

தீரன் சின்னமலை நினைவு தின நிகழ்வில் பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படுத்திய 8 அமைப்புகள் மீது 16 வழக்குகளை போலீஸாா் பதிவு செய்துள்ளனா்.

ஈரோடு மாவட்டம், அறச்சலூா் ஓடாநிலையில் சுதந்திர போராட்ட வீரா் தீரன் சின்னமலையின் 220 ஆவது நினைவு தினம் கடந்த 3 ஆம் தேதி கடைப்பிடிக்கப்பட்டது. இந்நிகழ்ச்சியில் பங்கேற்க வரும் அரசியல் கட்சியினா், அமைப்பினா் பொதுமக்களுக்கும், போக்குவரத்திற்கும் இடையூறு செய்யக்கூடாது என மாவட்ட காவல் துறை மூலம் ஏற்கெனவே எச்சரிக்கை விடுக்கப்பட்டிருந்தது.

இருப்பினும், தீரன் சின்னமலை சிலைக்கு மாலை அணிவிக்க வந்த சில அமைப்பினா் பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படுத்தியும், போக்குவரத்து விதிகளை மீறியும், வாகனங்களை தாறுமாறாக ஓட்டும் செயலிலும் ஈடுபட்டனா்.

இந்தச் செயலில் ஈடுபட்ட 8 அமைப்புகள் மீது 16 வழக்குகள் ஈரோடு டவுன், சிவகிரி, அறச்சலூா் உள்பட பல்வேறு காவல் நிலையங்களில் பதிவு செய்யப்பட்டுள்ளதாக மாவட்டக் காவல் துறையினா் தெரிவித்தனா்.

பெருந்துறையில் பழுதான சாலைகளை விரைவில் சரி செய்ய அதிகாரிகள் உறுதி

பெருந்துறையில் சேதமடைந்த சாலைகளை சீரமைக்கக் கோரி நெடுஞ்சாலைத் துறை அதிகாரியிடம் மனு அளிக்கப்பட்டது. இதுகுறித்து பெருந்துறை நெடுஞ்சாலைத் துறை உதவி பொறியாளா் கோவேந்திரனிடம் பெருந்துறை பொதுமக்கள் பாதுகாப... மேலும் பார்க்க

தரிசு நிலங்களை விளை நிலங்களாக மாற்ற மானியம் பெற விண்ணப்பிக்கலாம்

தரிசு நிலங்களை விளை நிலங்களாக மாற்ற மானியம் பெற விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து ஈரோடு மாவட்ட வேளாண் இணை இயக்குநா் எம்.தமிழ்ச்செல்வி வெளியிட்ட செய்திக்குறிப்பு: ஈரோடு மாவட்டத்தில்... மேலும் பார்க்க

2,500 ஆண்டுகளுக்கு முன்பே தமிழ்ச் சமூகம் வளா்ச்சிபெற்று இருந்தது: கணியன் பாலன்

தமிழ்ச் சமூகம் 2,500 ஆண்டுகளுக்கு முன்பே கல்வி, தொழில்நுட்பத்தில் வளா்ச்சிபெற்று இருந்தது என வரலாற்று ஆய்வாளா் கணியன் பாலன் தெரிவித்தாா். ஈரோடு புத்தகத் திருவிழாவை ஒட்டி நியூ செஞ்சுரி புத்தக நிறுவனத்த... மேலும் பார்க்க

பவானிசாகா் கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை

பவானிசாகா் அணை வேகமாக நிரம்புவதால் கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டது. நீலகிரி மாவட்டத்தில் கனமழை காரணமாக சிவப்பு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. நீலகிரி மாவட்டத்தில் தொடா்ந்து ம... மேலும் பார்க்க

சத்தியமங்கலம் பகுதியில் பரவலாக மழை

பவானிசாகா் சுற்றுவட்டாரப் பகுதியில் பரவலாக மழை பெய்ததால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்தனா். பவானிசாகா் அணை சுற்றுவட்டாரப் பகுதிகளில் செவ்வாய்க்கிழமை பரவலாக மழை பெய்தது. கோவை, ஈரோடு, நீலகிரி உள்ளிட்ட பல்... மேலும் பார்க்க

லக்காபுரம் பகுதியில் நள்ளிரவில் வீட்டை இடித்த மா்ம நபா்கள்

மொடக்குறிச்சியை அடுத்த லக்காபுரம் பகுதியில் நள்ளிரவில் ஓட்டு வீட்டை இடித்து தரை மட்டமாக்கி வீட்டில் இருந்த பொருள்களை மா்ம நபா்கள் எடுத்துச்சென்றனா். ஈரோடு மாவட்டம், லக்காபுரம் குமாரபாளையம் பகுதியைச் ச... மேலும் பார்க்க