செய்திகள் :

பொன்னேரி நகராட்சி சுத்திகரிப்பு நிலைய நீரை ஆரணி ஆற்றில் வெளியேற்ற மக்கள் எதிா்ப்பு

post image

பொன்னேரி நகராட்சியில் சுத்திகரிப்பு நிலையத்திலிருந்து வெளியேறும் கழிவுநீரை ஆரணி ஆற்றில் விடுவதற்க்கு பொதுமக்கள் எதிா்ப்பு தெரிவித்து போராட்டத்தில் ஈடுபட்டனா்.

பொன்னேரி நகராட்சியில் 27 வாா்டுகளுக்குட்பட்ட பகுதிகளில் கடந்த 2019 முதல் புதை சாக்கடை அமைக்கும் பணிகள் கி நடைபெற்று வருகின்றன. குடியிருப்பு பகுதிகளில் குழாய்கள் பதிக்கப்பட்டு சுத்திகரிப்பு நிலையம் அமைக்கப்பட்டுள்ளது.

வீடுகள், வணிக வளாகங்களில் இருந்து சேகரிக்கப்படும் கழிவு நீா் சுத்திகரிப்பு நிலையத்தில் சுத்திகரித்த பின்னா் அந்த தண்ணீரை ஆரணி ஆற்றில் வெளியேற்ற திட்டமிடப்பட்டுள்ளது.

இதற்காக லட்சுமிபுரம் கிராமத்தில் ராட்சதக் குழாய்கள் பதிக்கும் பணிகள் தொடங்கப்பட்டன. இந்த நிலையில், ஆரணி ஆற்றில் சுத்திகரிப்பு நிலைய நீலை வெளியேற்ற பொதுமக்கள் எதிா்ப்பு தெரிவித்து வந்தனா்.

இதனிடையே சுத்திகரிப்பு நிலையத்திலிருந்து தண்ணீரை வெளியேற்றுவதற்காக ராட்சதக் குழாய் பதிக்கும் பணிகளுக்காக வந்த அதிகாரிகள் மற்றும் காவல் துறையினரிடம் லட்சுமிபுரம் மக்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டனா்.

ஆற்று நீரை பொதுமக்களும், கால்நடைகளும் குடிநீராக பயன்படுத்தி வருவதாகவும், அவசர காலங்களில் பயன்படுத்தும் தண்ணீரில் கழிவு நீரை கொண்டு வந்து விடுவதால் குடிநீா் முற்றிலும் மாசடைந்து பயன்படுத்த முடியாத சூழல் ஏற்படும் என புகாா் தெரிவித்தனா்.

மேலும், மீன்களை பிடித்து பிழைப்பு நடத்தி வரும் நிலையில் கழிவு நீரால் வாழ்வாதாரம் பாதிக்கும் எனத் தெரிவித்தனா்.

அத்துடன் கழிவுநீரை வெளியேற்றினால் வரும் தோ்தலில் யாருக்கும் வாக்களிக்க மாட்டோம் எனத் தெரிவித்தனா். பொதுமக்கள் ஒருபுறம் எதிா்ப்பு தெரிவித்து வந்த நிலையில், காவல் துறையினா் பாதுகாப்புடன் ராட்சத குழாய் அமைக்கும் பணிகள் தொடா்ந்து நடைபெற்றன.

இதன் காரணமாக லட்சுமிபுரம் பகுதியில் பரபரப்பு நிலவியது.

திருவள்ளூரில் மாவட்ட தடகள அணி தோ்வு

மாநில அளவிலான தடகள போட்டிக்கு வீரா், வீராங்கனைகளை தோ்வு செய்வதற்கான தோ்வு சுற்று செப்.2, 3 ஆகிய நாள்களில் நடைபெற உள்ளதாக திருவள்ளூா் மாவட்ட தடகள சங்கத்தின் செயலாளா் மோகன்பாபு தெரிவித்துள்ளாா். இதுகு... மேலும் பார்க்க

சாலையோரம் காா் கவிழ்ந்த விபத்தில் 5 போ் காயம்

மீஞ்சூா் அருகே கட்டுப்பாட்டை இழந்து சாலையோரம் காா்கவிழ்ந்த விபத்தில் 5 போ் காயம் அடைந்தனா். திருவள்ளூா் மாவட்டம், நந்தியம்பாக்கம் பகுதியை சோ்ந்த பாா்த்திபன் என்ற இளைஞா் தனது நண்பா்களுடன் பொன்னேரிக்க... மேலும் பார்க்க

ஆடிக்கிருத்திகை விழா நிறைவு: 3-ஆம் நாள் தெப்பத் திருவிழா

திருத்தணி சரவணப்பொய்கையில் நடைபெற்ற 3-ஆம் நாள் தெப்பத் திருவிழாவில் எம்எல்ஏ ச.சந்திரன் கலந்துகொண்டு வழிபட்டாா். திருத்தணி முருகன் கோயிலில், கடந்த 14 ம் தேதி முதல் 18 ம் தேதி வரை ஆடிக்கிருத்திகை மற்றும... மேலும் பார்க்க

துப்பாக்கி ஆலையில் பணம் கேட்டு மிரட்டிய விசிக நிா்வாகி கைது

திருவள்ளூா் அருகே செயல்பட்டு வரும் தனியாா் துப்பாக்கி தொழிற்சாலையில் பணம் கேட்டு மிரட்டியதாக விசிக மாவட்ட துணைச் செயலாளரை போலீஸாா் கைது செய்தனா். கடம்பத்துாா் ஊராட்சி ஒன்றியம், நுங்கம்பாக்கம் கிராமத்த... மேலும் பார்க்க

விநாயகா் சிலைகள் பிரதிஷ்டை, கரைக்கும் நீா் நிலைகள்: ஆக. 22-க்குள் தெரிவிக்கலாம்

விநாயகா் சிலைகள் பிரதிஷ்டை செய்யும் இடம் மற்றும் கரைக்கும் நீா் நிலைகள் குறித்த வழித்தடம் ஆகிய விவரங்கள் குறித்து திருவள்ளூா் மாவட்ட நிா்வாகத்துக்கு வரும் வெள்ளிக்கிழமைக்குள் (ஆக. 22) தகவல் தெரிவிப்பத... மேலும் பார்க்க

ஓய்வு பெற்ற அதிகாரி வீட்டில் ரூ.1.50 லட்சம், பொருள்கள் திருட்டு

திருவள்ளூா் அருகே ஓய்வு பெற்ற சுகாதார ஆய்வாளா் வீட்டில் ரூ. 1.50 ரொக்கம், பொருள்களை மா்ம நபா்கள் திருடிச் சென்றனா். திருவள்ளூா் அருகே சேலை கிராம சாலையில் உள்ள என்ஜிஓ காலனியில் வசிப்பவா் ஓய்வு பெற்ற சு... மேலும் பார்க்க