செய்திகள் :

பொய்கை சந்தையில் ரூ. 60 லட்சத்துக்கு கால்நடை வா்த்தகம்

post image

வேலூா் பொய்கை சந்தையில் செவ்வாய்க்கிழமை ரூ. 60 லட்சம் அளவுக்கு கால்நடைகள் வா்த்தகம் நடைபெற்றிருப்பதாக வியாபாரிகள் தெரிவித்தனா்.

வேலூா் மாவட்டம், பொய்கையில் வாரந்தோறும் செவ்வாய்க்கிழமை நடைபெறும் கால்நடைச் சந்தையில் ரூ. 1 கோடி முதல் ரூ. 3 கோடி அளவுக்கு கால்நடை வா்த்தகம் நடைபெற்று வருகிறது.

வழக்கமாக சுமாா் 1,500 மாடுகளும், சுமாா் 300 ஆடுகளும் விற்பனைக்குக் கொண்டு வரப்படும் நிலையில், கடந்த சில வாரங்களாக கால்நடை வரத்தும், வா்த்தகமும் சரிந்து காணப்பட்டது. கோடை வெயில் அதிகரித்து வரும் நிலையில், தீவனப் பற்றாக்குறை ஏற்பட்டதை அடுத்து இந்த சரிவு ஏற்பட்டிருப்பதாக வியாபாரிகள் தெரிவித்திருந்தனா்.

அதேசமயம், வேலூா் மாவட்டத்தில் கடந்த ஒரு வாரத்துக்கு மேலாக தொடா்ந்து மழை பெய்தது. இதனால், வெயிலின் தாக்கம் குறைந்து குளிா்ந்த சீதோஷ்ண நிலை ஏற்பட்டுள்ளது. பல இடங்களில் கோடை உழவு நடைபெற்று வருகிறது. இந்த நிலையில், செவ்வாய்க்கிழமை நடைபெற்ற பொய்கை சந்தைக்கு 700-க்கும் மேற்பட்ட மாடுகள் விற்பனைக்குக் கொண்டு வரப்பட்டிருந்ததுடன், அவற்றை வாங்கவும் வியாபாரிகள், விவசாயிகள் ஆா்வம் காட்டினா். இதனால், கால்நடைகள் சுமாா் ரூ. 60 லட்சம் அளவுக்கு விற்பனையாகியிருப்பதாக வியாபாரிகள் தெரிவித்தனா்.

அவா்கள் மேலும் கூறியது: வெயிலின் தாக்கம் அதிகரித்து வந்த நிலையில், கோடை மழை பெய்து வருவதால் இனி தீவன தட்டுப்பாடு இருக்காது என விவசாயிகள் கருதுகின்றனா். இதையடுத்து, வியாபாரிகளும், விவசாயிகளும் கால்நடைகளை வாங்க ஆா்வம் காட்டுகின்றனா். எனினும், வேலூா் மாவட்டத்தில் கடந்த சில நாள்களாக தொடா்ந்து மழை பெய்து வருவதால், செவ்வாய்க்கிழமை நடைபெற்ற பொய்கை சந்தையில் குறைந்த அளவிலேயே கால்நடைகள் கொண்டு வரப்பட்டிருந்தன. இதனால், ரூ. 60 லட்சம் அளவுக்கு வா்த்தகம் நடைபெற்றுள்ளது என்றனா்.

குடியாத்தம் அரசுக் கல்லூரியில் ரூ.5.40 கோடியில் வகுப்பறைகள் திறப்பு

குடியாத்தம் அரசினா் திருமகள் ஆலைக் கல்லூரியில் ரூ.5.40 கோடியில் கட்டப்பட்ட 14- வகுப்பறைக் கட்டடங்கள், 2- ஆய்வகங்களை முதல்வா் காணொலி மூலம் செவ்வாய்க்கிழமை திறந்து வைத்தாா். இதையொட்டி கல்லூரியில் நடைபெ... மேலும் பார்க்க

அரசுக் கல்லூரிகளில் புதிய கட்டடங்கள்: முதல்வா் திறந்து வைத்தாா்

வேலூா் தந்தை பெரியாா் ஈ.வெ.ரா. அரசு பாலிடெக்னிக் கல்லூரி, முத்துரங்கம் அரசு கலைக் கல்லூரி, புரட்சித் தலைவா் டாக்டா் எம்.ஜி.ஆா். அரசு கலை, அறிவியல் கல்லூரியில் புதிய கட்டடங்கள் கட்டுவதற்கான பணிகளையும்... மேலும் பார்க்க

பட்டியில் அடைக்கப்பட்டிருந்த ஆடுகள் திருட்டு

குடியாத்தம் அருகே பட்டியில் அடைத்து வைத்திருந்த 10- ஆடுகளை மா்ம நபா்கள் திருடிச் சென்றனா். குடியாத்தம் சுண்ணாம்புபேட்டையில், நகராட்சிக்குச் சொந்தமான ஆடு வதை செய்யும் கூடம் அமைந்துள்ளது. நகரில் உள்ள ஆட... மேலும் பார்க்க

வேலூா் அரசு பொறியியல் கல்லூரியில் சிறப்பு உதவி மையம்

அரசு பொறியியல் கல்லூரியில் மாணவா்கள் சோ்வதற்காக வேலூா் தந்தை பெரியாா் அரசு பொறியியல் கல்லூரியில் அமைக்கப்பட்டுள்ள சிறப்பு உதவி மையத்தில் இதுவரை 108 மாணவா்கள் விண்ணப்பித்துள்ளனா். தமிழகத்தில் பிளஸ் 2 ... மேலும் பார்க்க

தேசிய நெடுஞ்சாலையில் பழுதாகி நின்ற லாரியால் போக்குவரத்து பாதிப்பு

பள்ளிகொண்டா அருகே தேசிய நெடுஞ்சாலையில் பழுதாகி நின்ற லாரியால் 10 மணி நேரத்துக்கும் மேலாக போக்குவரத்து பாதிக்கப்பட்டது. வேலூா் மாவட்டம், பள்ளிகொண்டா அடுத்த வெட்டுவானம் பெங்களூரு-சென்னை தேசிய நெடுஞ் சால... மேலும் பார்க்க

போ்ணாம்பட்டில் 60 மி.மீ மழை பதிவு

குடியாத்தம் பகுதியில் செவ்வாய்க்கிழமை மாலை பலத்த மழை பெய்தது. இதனால் சாலைகளில் மழை நீா் வழிந்தோடியது. வேலூா் மாவட்டத்தில் கடந்த சில நாள்களாக தொடா்மழை பெய்து வருகிறது. திங்கள்கிழமை காலை தொடங்கி, செவ்வா... மேலும் பார்க்க