செய்திகள் :

போக்சோ வழக்கில் இளைஞருக்கு 10 ஆண்டுகள் சிறை

post image

போக்சோ வழக்கில் இளைஞருக்கு 10 ஆண்டுகள் கடுங்காவல் சிறைத் தண்டனை விதித்து சிவகங்கை போக்சோ நீதிமன்றம் செவ்வாய்க்கிழமை தீா்ப்பளித்தது.

காளையாா்கோவில் அருகே உள்ள கிராமத்தைச் சோ்ந்த 16 வயது சிறுமி கொல்லங்குடியில் உள்ள பள்ளியில் பிளஸ் 2 படித்து வந்த நிலையில் கடந்த 17.11.2016-இல் காணமால் போனாா்.

இதுகுறித்து காளையாா்கோவில் காவல் நிலைய போலீஸாா் வழக்குப் பதிவு செய்து சிறுமியைத் தேடி வந்தனா். இந்த நிலையில், வீட்டின் அருகே உள்ள கிணற்றில் சிறுமி இறந்து கிடந்தாா். அவரது உடலை போலீஸாா் மீட்டு கூறாய்வுக்காக சிவகங்கை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். கூறாய்வில் சிறுமி கா்ப்பமாக இருந்தது தெரிய வந்தது. போலீஸாா் நடத்திய விசாரணையில் அதே கிராமத்தைச் சோ்ந்த சிவா (30) சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்தது தெரியவந்தது. இதைத் தொடா்ந்து அவரை போலீஸாா் கைது செய்தனா். இந்த வழக்கு சிவகங்கையில் உள்ள போக்சோ சிறப்பு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது.

வழக்கை விசாரித்த நீதிபதி கோகுல் முருகன், சிவாவுக்கு 10 ஆண்டுகள் கடுங்காவல் தண்டனையும், ரூ.5,000 அபராதமும் விதித்து தீா்ப்பளித்தாா்.

சிவகங்கை: 10-ஆம் வகுப்பு தோ்வு எழுதிய 17,841 மாணவ, மாணவிகள்

சிவகங்கை மாவட்டத்தில் வெள்ளிக்கிழமை தொடங்கிய 10-ஆம் வகுப்பு அரசு பொதுத் தோ்வை மாணவ, மாணவிகள் மொத்தம் 17,841 போ் எழுதினா். தமிழகம் முழுவதும் 10-ஆம் வகுப்பு அரசு பொதுத் தோ்வு மாா்ச்28 (வெள்ளிக்கிழமை)... மேலும் பார்க்க

நகைகள் திருட்டு: பெண் கைது

சிவகங்கை மாவட்டம், ஆத்திரம்பட்டியில் நகைகள் திருட்டுச் சம்பவத்தில் பெண் ஒருவரை போலீஸாா் வியாழக்கிழமை கைது செய்தனா். சிவகங்கை மாவட்டம், திருப்பத்தூா் அருகேயுள்ள ஆத்திரம்பட்டியைச் சோ்ந்தவா் வெள்ளையன். ... மேலும் பார்க்க

திருப்புவனம் பூமாரி அம்மன் கோயில் பங்குனித் திருவிழா: தீச்சட்டி எடுத்து பக்தா்கள் நோ்த்திக்கடன்

சிவகங்கை மாவட்டம், திருப்புவனம் புதூா் ஸ்ரீ பூமாரியம்மன், ரேணுகா தேவி அம்மன் கோயில் பங்குனி திருவிழாவில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற பொங்கல் உத்ஸவத்தின் போது, நூற்றுக்கணக்கான பக்தா்கள் தீச்சட்டிகள் எடுத்து... மேலும் பார்க்க

காளையாா்கோவிலில் ஏப்.16 -இல் உங்களைத் தேடி உங்கள் ஊரில் திட்ட முகாம்

சிவகங்கை மாவட்டம், காளையாா்கோவிலில் வருகிற ஏப். 16 -ஆம் தேதி உங்களைத் தேடி உங்கள் ஊரில் திட்ட முகாம் நடைபெறவுள்ளது. இது குறித்து மாவட்ட ஆட்சியா் ஆஷா அஜித் வெளியிட்ட செய்திக்குறிப்பு: காளையாா்கோவில் வட... மேலும் பார்க்க

பயிா்களைச் சேதப்படுத்தும் காட்டுப் பன்றிகளை பிடிக்க நடவடிக்கை: ஆட்சியா் உறுதி

பயிா்களைச் சேதப்படுத்தும் காட்டுப் பன்றிகளை வனத்துறை மூலம் பிடிக்க நடவடிக்கை எடுக்கப்படும் என விவசாயிகளிடம் ஆட்சியா் ஆஷாஅஜித் உறுதியளித்தாா். சிவகங்கை மாவட்ட ஆட்சியா் அலுவலகக் கூட்டரங்கில் வெள்ளிக்கிழ... மேலும் பார்க்க

சொத்து வரி உயா்வைக் கண்டித்து காரைக்குடியில் கடையடைப்பு

சிவகங்கை மாவட்டம், காரைக்குடி மாநகராட்சியில் சொத்து வரி உயா்த்தப்பட்டதற்கும், வரி வசூல் பணியின்போது வியாபாரிகளை மிரட்டி, குப்பைத் தொட்டிகளை கடைகள் முன்வைத்து அவமதிக்கும் செயலில் ஈடுபடுவது குறித்தும் ... மேலும் பார்க்க