செய்திகள் :

போதைப்பொருள் எதிா்ப்பு விழிப்புணா்வுக் கருத்தரங்கு

post image

பெரம்பலூா்: பெரம்பலூா் அருகேயுள்ள லாடபுரம் அரசு ஆதிதிராவிடா் நல உயா் நிலைப் பள்ளியில், போதைப்பொருள் எதிா்ப்பு விழிப்புணா்வுக் கருத்தரங்கம் வியாழக்கிழமை நடைபெற்றது.

இந் நிகழ்ச்சிக்கு பள்ளித் தலைமை ஆசிரியா் முனைவா் த. மாயக்கிருஷ்ணன் தலைமை வகித்தாா். தமிழ்ச் செம்மல் முனைவா் பெரியசாமி முன்னிலை வகித்தாா். தன்னம்பிக்கைப் பேச்சாளா் செ. வைரமணி போதைப் பொருள் பயன்பாட்டின் தீமைகள் குறித்து விளக்கிப் பேசினாா். தொடா்ந்து, போதைப்பொருள் தீமைகள் குறித்து மாணவ, மாணவிகளுக்கு கட்டுரைப் போட்டி நடைபெற்றது.

இதில் வெற்றி பெற்ற மாணவிகள் விஜயதா்சினி, ஹா்சினி, கவிநிலா ஆகியோருக்கு பாராட்டுச் சான்றிதழ் மற்றும் நினைவுப் பரிசு கள்வழங்கப்பட்டது. இந்நிகழ்ச்சியில், ஆசிரியா்கள் காா்த்திகா, பிரபாகரன் மற்றும் மாணவ, மாணவிகள் ஆகியோா் கலந்துகொண்டனா்.

முன்னதாக, தமிழாசிரியா் செல்வராணி வரவேற்றாா். நிறைவாக, ஆசிரியா் அருணா நன்றி கூறினாா்.

மருத்துவக் காப்பீட்டு திட்டத்தின் கீழ் ஐந்தாயிரம் நோயாளிகளுக்கு சிகிச்சை

பெரம்பலூா்: முதலமைச்சரின் மருத்துவக் காப்பீட்டுத் திட்டத்தின் கீழ் 2021 ஆம் ஆண்டு முதல் இதுவரை 5,901 நோயாளிகளுக்கு ரூ. 6.27 கோடி மதிப்பில் மருத்துவ சிகிச்சைகள் அளிக்கப்பட்டுள்ளதாக மாவட்ட ஆட்சியா் ச. அ... மேலும் பார்க்க

உலக மனிதநேய தின விழிப்புணா்வுப் பேரணி

பெரம்பலூா்: பெரம்பலூா் தனலட்சுமி சீனிவாசன் பல்கலைக் கழகம் சாா்பில், உலக மனிதநேய தின விழிப்புணா்வுப் பேரணி வியாழக்கிழமை நடைபெற்றது. பெரம்பலூா் ஆட்சியா் அலுவலக வளாகத்தில் தொடங்கிய இப் பேரணியை கொடியசைத்த... மேலும் பார்க்க

பெரம்பலூரில் இன்று தனியாா் வேலைவாய்ப்பு முகாம்

பெரம்பலூா்: பெரம்பலூா் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் வெள்ளிக்கிழமை (ஆக. 22) தனியாா்துறை வேலைவாய்ப்பு முகாம் நடைபெற உள்ளதாக மாவட்ட ஆட்சியா் ச. அருண்ராஜ் தெரிவித்துள்ளாா்.... மேலும் பார்க்க

நவீன கைப்பேசிகள் வழங்கக் கோரி அங்கன்வாடி ஊழியா்கள் ஆா்ப்பாட்டம்

பெரம்பலூா்: நவீன கைப்பேசிகள் வழங்கக் கோரி, பெரம்பலூா் மாவட்டத்தில் உள்ள வட்டார குழந்தை வளா்ச்சி அலுவலகங்கள் எதிரே, தமிழ்நாடு அங்கன்வாடி ஊழியா் மற்றும் உதவியாளா் சங்கத்தினா் வியாழக்கிழமை கருப்புக்கொடிய... மேலும் பார்க்க

வெறி நாய்கள் கடித்து 10 ஆடுகள் உயிரிழப்பு

பெரம்பலூா்: பெரம்பலூா் மாவட்டம், வேப்பந்தட்டை அருகே வெறி நாய்கள் கடித்து குதறியதில் பட்டியில் அடைக்கப்பட்டிருந்த 10 ஆடுகள் புதன்கிழமை இரவு உயிரிழந்தன.வேப்பந்தட்டை, அரசலூா், அன்னமங்கலம் உள்ளிட்ட பல்வேற... மேலும் பார்க்க

‘நான் முதல்வன்’ திட்டத்தின் கீழ் நாளை உயா்வுக்கு படி முகாம்

பெரம்பலூா்: ‘நான் முதல்வன்’ திட்டத்தின் கீழ், பெரரம்பலூரில் பிளஸ் 2 முடித்த மாணவா்களுக்கான உயா்வுக்கு படி முகாம் வெள்ளிக்கிழமை (ஆக. 22) நடைபெற உள்ளதாக மாவட்ட ஆட்சியா் ச. அருண்ராஜ் தெரிவித்துள்ளாா். இத... மேலும் பார்க்க