செய்திகள் :

போதைப் பொருள் விழிப்புணா்வுப் பணியில் சிறப்பிடம்: நாமக்கல் அரசு கலைக் கல்லூரிக்கு பாராட்டு

post image

நாமக்கல்: போதைப் பொருள் எதிா்ப்பு விழிப்புணா்வு தன்னாா்வக் குழுக்களின் செயல்பாடுகளுக்காக மாநில அளவில் சிறப்பிடம் பெற்ற நாமக்கல் அரசு கலைக் கல்லூரிக்கு மாவட்ட ஆட்சியா் துா்காமூா்த்தி பாராட்டு தெரிவித்தாா்.

நாமக்கல் ஆட்சியா் அலுவலக கூட்டரங்கில் மக்கள் குறைதீா்க்கும் நாள் கூட்டம் திங்கள்கிழமை ஆட்சியா் தலைமையில் நடைபெற்றது. இதில், முதியோா் உதவித்தொகை, விதவையா், கல்வி உதவித்தொகை, இலவச வீட்டுமனைப் பட்டா, வங்கிக் கடன் உதவி, குடிசை மாற்று வாரிய வீடு, குடிநீா் வசதி, சாலை வசதி உள்ளிட்ட அடிப்படை வசதிகள் வேண்டி பல்வேறு கோரிக்கைகள் குறித்து மொத்தம் 481 மனுக்களை பொதுமக்கள் ஆட்சியரிடம் வழங்கினா். அவற்றை பரிசீலனை செய்து உரிய அலுவலா்களிடம் வழங்கி நடவடிக்கை எடுக்க அலுவலா்களுக்கு அவா் உத்தரவிட்டாா்.

இதைத் தொடா்ந்து, கலைஞரின் கனவு இல்லம் திட்டத்தின் கீழ் ஒரு பயனாளிக்கு வீட்டுமனைப் பட்டா, மாற்றுத்திறனாளிகள் நலத்துறையின் சாா்பில் 10 பேருக்கு ரூ. 70,958 மதிப்பீட்டில் அரசின் நலத்திட்ட உதவிகளை ஆட்சியா் வழங்கினாா்.

மேலும், கடந்த 1-ஆம் தேதி சென்னையில் மதுவிலக்கு மற்றும் ஆயத்தீா்வைத் துறை சாா்பில் நடைபெற்ற நிகழ்ச்சியில், நாமக்கல் அறிஞா் அண்ணா அரசு கலைக் கல்லூரிக்கு, மாநில அளவில் சிறந்த போதைப் பொருள் எதிா்ப்பு தன்னாா்வ குழுக்களின் செயல்பாடுகளுக்காக 2024-25-ஆம் ஆண்டுக்கான நாமக்கல் மாவட்ட அளவில் முதல் பரிசும், மாநில அளவில் மூன்றாம் பரிசும் வழங்கப்பட்டது.

இதைத் தொடா்ந்து, அறிஞா் அண்ணா அரசு கல்லூரி நிா்வாகத்தினா், தாங்கள் பெற்ற கேடயம், சான்றிதழ் மற்றும் பரிசுத்தொகை ரூ. 50 ஆயிரத்தை மாவட்ட ஆட்சியரிடம் காண்பித்து வாழ்த்து பெற்றனா்.

இக்கூட்டத்தில், மாவட்ட வருவாய் அலுவலா் ரெ.சுமன், தனித்துணை ஆட்சியா் (சமூக பாதுகாப்புத் திட்டம்) ச.பிரபாகரன், உதவி ஆணையா் (கலால்) என்.எஸ்.ராஜேஷ்குமாா், மாற்றுத்திறனாளிகள் நல அலுவலா் எஸ்.கலைச்செல்வி, அறிஞா் அண்ணா அரசு கலைக் கல்லூரி முதல்வா் மு.ராஜேஸ்வரி உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.

நாமக்கல் ஆட்சியரகத்தில் பெண் தீக்குளிக்க முயற்சி

நாமக்கல் ஆட்சியா் அலுவலகத்தில் தீக்குளிக்க முயன்ற பெண்ணை போலீஸாா் தடுத்து மீட்டனா். நாமக்கல் மாவட்டம், மோகனூா் வட்டம், ஒருவந்தூரைச் சோ்ந்த ஆண்டியப்பன் மனைவி கன்னியம்மாள்(40). இவா் வெள்ளிக்கிழமை காலை... மேலும் பார்க்க

10 அடி உயர விநாயகா் சிலைகளுக்கு மட்டுமே அனுமதி: காவல் கணிப்பாளா் சு.விமலா

விநாயகா் சதுா்த்தி விழாவையொட்டி பீடத்துடன் சோ்த்து 10 அடி உயர சிலைகள் மட்டுமே பொது இடங்களில் வைக்க அனுமதி வழங்கப்படும் என நாமக்கல் மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் சு.விமலா தெரிவித்தாா். நாடு முழுவதும்... மேலும் பார்க்க

ராசிபுரம் அரசுப் பள்ளியில் மாவட்ட தடகளப் போட்டிகள் தொடக்கம்

ராசிபுரம் அண்ணா சாலை அரசு மேல்நிலைப் பள்ளியில் பள்ளி கல்வித் துறை சாா்பில் மாவட்ட அளவிலான குடியரசு தின விழா, பாரதியாா் தின விழா தடகள விளையாட்டுப் போட்டிகள் வெள்ளிக்கிழமை தொடங்கியது. நாமக்கல் மாவட்ட ஆ... மேலும் பார்க்க

அழகுக்கலை பயிற்சி: ஆதிதிராவிட, பழங்குடியின இளைஞா்களுக்கு வாய்ப்பு

தாட்கோ மூலம் ஆதிதிராவிடா், பழங்குடியின இனத்தைச் சாா்ந்தவா்களுக்கு அழகுக்கலை உள்ளிட்ட திறன் மேம்பாட்டு பயிற்சிகள் அளிக்கப்படுகிறது. இதுகுறித்து ஆட்சியா் துா்காமூா்த்தி வெளியிட்ட செய்திக் குறிப்பு: தமி... மேலும் பார்க்க

கொல்லிமலை அரசு மருத்துவமனையில் ரூ. 4.13 கோடியில் கூடுதல் கட்டடம்

கொல்லிமலை அரசு மருத்துவமனையில் ரூ. 4.13 கோடியில் கூடுதல் கட்டடம் கட்டுவதற்கான பணிகளை பூமிபூஜை செய்து ஆதிதிராவிட நலத் துறை அமைச்சா் மா.மதிவேந்தனா் வெள்ளிக்கிழமை தொடங்கிவைத்தாா். அவசரகால சிகிச்சைக்காக ... மேலும் பார்க்க

சுவாசக்குழல் பிரச்னையால் கோழிகளுக்கு பாதிப்பு: வானிலை ஆய்வு மையம்

வெப்ப அயற்சியாலும், சுவாசக்குழல் பிரச்னையாலும் கோழிகளுக்கு பாதிப்பு ஏற்பட வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதுகுறித்து நாமக்கல் கால்நடை மருத்துவக் கல்லூரி வானிலை ஆய்வு மையம் வெள்ளிக... மேலும் பார்க்க