செய்திகள் :

போலி விண்வெளி வீரரின் காதலில் விழுந்த மூதாட்டி! ரூ. 6 லட்சத்தை இழந்தார்!

post image

ஜப்பானைச் சேர்ந்த 80 வயது மூதாட்டி, விண்வெளி வீரர் எனக் கூறியவரிடம் ரூ. 6 லட்சம் பணத்தை இழந்தார்.

ஹொக்கைடோ மாகாணத்தைச் சேர்ந்த 80 வயது பெண்ணுடன் மர்ம நபர் ஒருவர் கடந்த ஜூலை மாதம் சமூக ஊடகம் மூலம் தொடர்புகொண்டு நட்பாகியுள்ளார்.

தொடர்ந்து, அந்த பெண்ணுடன் பேசிவந்த நபர், தான் ஒரு விண்வெளி வீரர் என்று கூறி காதல் வலையில் சிக்கவைத்துள்ளார்.

பின்னர், தான் தாக்குதலுக்கு உள்ளாகி விண்வெளியில் விண்கலத்துக்குள் சிக்கிக் கொண்டதாகவும், ஆக்ஸிஜன் வாங்குவதற்கு உடனடியாகப் பணம் தேவை என்றும் அந்த பெண்ணிடம் கேட்டுள்ளார்.

மர்ம நபரின் கதையை நம்பிய பெண், தான் சேர்த்து வைத்திருந்த 10 லட்சம் யென் (இந்திய மதிப்பின்படி ரூ. 5.95 லட்சம்) பணத்தை அவர் கூறிய கணக்குக்கு அனுப்பியுள்ளார்.

அதன்பிறகு, மர்ம நபர் அந்த பெண்ணைத் தொடர்புகொள்ளாத நிலையில், தான் ஏமாற்றப்பட்டதை உணர்ந்தவர், குடும்பத்தினரிடம் நடந்ததைக் கூறியுள்ளார்.

உடனடியாக காவல்துறையில் புகார் அளிக்கப்பட்டு மர்ம நபரைத் தேடும் பணி தீவிரமாக நடைபெற்று வருகின்றது.

இந்த சம்பவம் குறித்து காவல்துறையினர் கூறுகையில்,

”தனிமையில் இருக்கும் வயதான பெண்கள் அல்லது ஆண்களைக் குறிவைத்து அவர்களை காதல் வலையில் சிக்க வைக்கும் கும்பல், சில நாள்களில் அவர்களிடம் இருந்து பணத்தை மோசடி செய்கின்றனர். இதுபோன்ற மோசடிகளில் சிக்காமல் விழிப்புணர்வுடன் இருக்க வேண்டும்” எனத் தெரிவித்துள்ளனர்.

கடந்த 2023 ஆம் ஆண்டு மட்டும் வயதானவர்களைக் காதலிப்பது போல் நடித்து சுமார் 1,000 கோடி டாலர்கள் மோசடி செய்திருப்பதாக அமெரிக்க வர்த்தக ஆணையம் தெரிவித்துள்ளது.

An 80-year-old woman from Japan lost Rs. 6 lakh to a man who claimed to be an astronaut.

இதையும் படிக்க : ஜிஎஸ்டி: இறுதியில் ராகுலின் ஆலோசனையைப் பின்பற்றிய பாஜக அரசு! - காங்கிரஸ்

பின்லேடனுக்காக அனுப்பப்பட்ட அதே குழுதான் வடகொரியாவுக்கும்? 2019-ல் அமெரிக்காவின் செயல்!

2019 ஆம் ஆண்டில் வடகொரியாவில் உளவு தொடர்பாக அமெரிக்கா முயற்சி செய்ததாக அமெரிக்க செய்தி ஊடகம் தெரிவித்துள்ளது.2019 ஆம் ஆண்டில் வடகொரியாவில் உளவுபார்ப்பு சாதனத்தைப் பொருத்த அமெரிக்காவின் சீல் குழு 6 (US... மேலும் பார்க்க

உக்ரைன் - ரஷியா சண்டைக்கு விரைவில் முடிவு: பிரான்ஸ் அதிபருடன் பிரதமர் மோடி பேச்சு!

உக்ரைன் - ரஷியா சண்டைக்கு விரைவில் முடிவு எட்டப்படும் என்று பிரான்ஸ் அதிபருடனான தொலைபேசி உரையாடலுக்குப் பின், பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்தார்.இது குறித்து பிரதமர் மோடி தமது எக்ஸ் தளப் பக்கத்தில் இன... மேலும் பார்க்க

காஸா மக்களுக்கு இஸ்ரேல் எச்சரிக்கை! கைப்பற்றும் நடவடிக்கையா?

காஸா மக்களை தெற்கு நோக்கிச் செல்லுமாறு இஸ்ரேல் ராணுவம் எச்சரிக்கை விடுத்துள்ளது.காஸாவில் இஸ்ரேல் படை தொடர்ந்து தாக்குதல் நடத்தி வரும்நிலையில், 15 மாடிகள்கொண்ட கட்டடத்தின் மீது தாக்குதல் நடத்தியது. ஹமா... மேலும் பார்க்க

பிரிட்டனின் முதல் முஸ்லிம் பெண் உள்துறைச் செயலர்! யார் இந்த ஷபானா மஹ்மூத்?

பிரிட்டன் நாட்டின் புதிய உள்துறைச் செயலாளராக ஷபானா மஹ்மூத் என்பவர் நியமிக்கப்பட்டுள்ளார். இவர் பிரிட்டன் நாட்டின் முதல் முஸ்லிம் பெண் உள்துறைச் செயலாளர் என்ற பெருமையைப் பெற்றுள்ளார். பிரிட்டனில் தொழில... மேலும் பார்க்க

ஏஐ வருகை! 2030-க்குள் 90% வேலை காலி - ஆய்வாளர்கள் எச்சரிக்கை!

செயற்கை நுண்ணறிவு பயன்பாட்டால், வரும் காலங்களில் 90 சதவிகிதத்தினர் வேலையிழப்பைச் சந்திக்க நேரிடும்.பல்வேறு நிறுவனங்களில் செயற்கை நுண்ணறிவு பயன்பாட்டின் அதிகரிப்பால், 2030 ஆம் ஆண்டுக்குள் 90 சதவிகித தொ... மேலும் பார்க்க

ஞாயிறு இரவு நிகழும் சந்திரகிரகணம்: சிவப்பு நிலா பற்றிய முழு விவரம்

செப்டம்பர் 7ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை இரவு முழு சந்திர கிரகணம் நிகழவிருக்கிறது. இதில் இந்தியாவில் பல்வேறு பகுதிகளில் தெரிய வரும் என்றும், சந்திரகிரணத்தின்போது நிலவு ரத்தச் சிவப்பாகக் காட்சி தரும் என்று... மேலும் பார்க்க