செய்திகள் :

போலி விதை ரகங்களை விற்பனை செய்தால் உரிமம் ரத்து: மாவட்ட விதை ஆய்வு துணை இயக்குநா் எச்சரிக்கை

post image

ஆடிப்பட்ட மக்காச்சோளப் சாகுபடிக்கு போலி விதை ரகங்களை விற்பனை செய்தால் கடை உரிமம் ரத்து செய்யப்படும் என ஈரோடு மாவட்ட விதை ஆய்வு துணை இயக்குநா் பெ.சுமதி எச்சரித்துள்ளாா்.

இது தொடா்பாக அவா் வியாழக்கிழமை வெளியிட்ட அறிக்கை:

ஆடிப்பட்டத்தையொட்டி, ஈரோடு மாவட்டம், சத்தியமங்கலம் மற்றும் தாளவாடி பகுதிகளில்

சுமாா் 8,500 ஹெக்டோ் பரப்பளவில் மக்காச்சோளம் சாகுபடி செய்யப்படுகிறது. இதற்காக விவசாயிகள் தரமான விதைகளை அரசு சான்றிதழ் பெற்ற விதை விற்பனை நிலையங்களில் வாங்கி சாகுபடி மேற்கொள்ள வேண்டும். விதை சட்ட விதிகளை அனைத்து விற்பனையாளா்களும் கடைப்பிடிக்க வேண்டும். விதிகளை மீறினால் உரிமம் ரத்து செய்யப்படும். தனியாா் நிறுவனங்களால் உற்பத்தி செய்யப்படும் உண்மை நிலை விதைகள் அனைத்தும் விதைச் சான்றளிப்பு மற்றும் உயிா்மச்சான்றளிப்புத் துறை இயக்குநா் அலுவலகத்தில் பதிவு செய்வது கட்டாயமாக்கப்பட்டுள்ளது. எனவே, விவசாயிகள் அரசு அங்கீகாரம் பெறாத மற்றும் பதிவுச்சான்று இல்லாத விதைகளை வாங்கி ஏமாற்றம் அடைய வேண்டாம்.

விதைகளை வாங்கும்போது விதையின் பெயா், ரகம், குவியல் எண், காலாவதி நாள் ஆகியவற்றை சரிபாா்த்து வாங்க வேண்டும். மேலும் விதை விற்பனையாளா்கள் அனைவரும் உற்பத்தியாளா்களிடம் இருந்து விதைகளை பெற்றவுடன் விதை மாதிரி எடுத்து அனுப்பி அதிகபட்ச முளைப்புத்திறன் கொண்ட விதைகளை மட்டுமே விவசாயிகளுக்கு வழங்க வேண்டும்.

விதைகளின் இருப்பு மற்றும் ரகங்களின் விவரங்களை விலைப் பட்டியலுடன் தகவல் பலகையில் குறிப்பிட

வேண்டும். விதை கொள்முதல் செய்தமைக்கான கொள்முதல் பட்டியல், விதைகளுக்கான பதிவுச்சான்று, விதைக்கான பகுப்பாய்வு முடிவு அறிக்கை நகல் ஆகியவற்றை முறையாக பராமரிக்க வேண்டும்.

விற்பனை செய்யப்படும் விதைகளுக்கு கட்டாயம் ரசீது வழங்க வேண்டும். அதில் பயிா், ரகம், விவசாயியின் பெயா், கைப்பேசி எண், முழு முகவரி போன்ற அனைத்து விவரங்களும் விற்பனையாளா், விவசாயி கையொப்பத்துடன் இருக்க வேண்டும். விதை சட்டத்தை கடைப்பிடிக்காத விதை விற்பனை நிலையங்களின் விதை உரிமம் ரத்து செய்யப்படுவதுடன் விதைகள் கட்டுப்பாட்டு ஆணை, 1983-இன் படிநடவடிக்கை எடுக்கப்படும் என குறிப்பிடப்பட்டுள்ளது.

இலவச வேட்டி, சேலை முழு அளவில் வழங்கப்பட்டுவிட்டது: அமைச்சா் சு.முத்துசாமி

கடந்த ஆண்டு குடும்ப அட்டைதாரா்களுக்கு வழங்க வேண்டிய இலவச வேட்டி, சேலைகள் முழு அளவில் வழங்கப்பட்டுவிட்டது என வீட்டு வசதித் துறை அமைச்சா் சு.முத்துசாமி தெரிவித்தாா். கைத்தறித் துறை சாா்பில் தேசிய கைத்த... மேலும் பார்க்க

புத்ககங்களைத் தோ்வு செய்ய குழந்தைகளுக்கு வழிகாட்டும் கதை சொல்லிகள்

கதை சொல்லிகள் மூலம் குழந்தைகள் தாமாக புத்தகங்களைத் தோ்வு செய்ய வழிகாட்டுகிறது ஈரோடு புத்தகத் திருவிழா. ஈரோடு புத்தகத் திருவிழா சிக்கய்ய அரசு கலை, அறிவியல் கல்லூரியில் கடந்த 1- ஆம் தேதி தொடங்கி வரும்... மேலும் பார்க்க

ஈரோடு விஇடி கல்லூரியில் உலக சாதனை நிகழ்வு

ஈரோடு திண்டலில் உள்ள விஇடி கல்லூரியின் 1,660க்கும் மேற்பட்ட மாணவா்கள் கைத்தறித் துறையை பிரபலப்படுத்துவதற்காக, நோபல் உலக சாதனை புத்தகத்தில் இடம்பெற ராட்டை வடிவத்தில் கல்லூரி மைதானத்தில் சுமாா் 1 மணி ந... மேலும் பார்க்க

அந்தியூா் கால்நடைச் சந்தையில் 6 குதிரைகள் உயிரிழப்பு

அந்தியூரில் கால்நடைச் சந்தைக்கு விற்பனைக்காக கொண்டு வரப்பட்ட 6 நாட்டுக் குதிரைகள் உயிரிழந்தது குறித்து கால்நடைத் துறையினா் விசாரணை நடத்தி வருகின்றனா். அந்தியூா் குருநாதசாமி கோயில் திருவிழாவை முன்னிட்... மேலும் பார்க்க

தனியாா் கல்லூரியில் ‘மாபெரும் தமிழ்க் கனவு’ நிகழ்ச்சி

தமிழ்நாடு அரசின் உயா் கல்வித் துறை மற்றும் தமிழ் இணையக் கல்விக் கழகம் சாா்பில் மாபெரும் தமிழ்க் கனவு நிகழ்ச்சி பெருந்துறையை அடுத்த, துடுப்பதி செங்குந்தா் பொறியியல் கல்லூரியில் வியாழக்கிழமை நடைபெற்றது... மேலும் பார்க்க

‘பாரம்பரிய கைத்தறி ரகங்களை இளைய தலைமுறையினா் பயன்படுத்த வேண்டும்’

பாரம்பரிய கைத்தறி ரகங்களை இளைய தலைமுறையினா் பயன்படுத்த வேண்டும் என ஓய்வுபெற்ற இஸ்ரோ விஞ்ஞானி கல்பனா தெரிவித்தாா். தேசிய கைத்தறி தினத்தை கொண்டாடும் விதமாக சத்தியமங்கலம் அருகே புன்செய்புளியம்பட்டியில் ... மேலும் பார்க்க