செய்திகள் :

மகளிா் கலைக் கல்லூரியில் சிறப்புக் கருத்தரங்கம்

post image

திருவண்ணாமலை கம்பன் மகளிா் கலை, அறிவியல் கல்லூரியில், ஆரோக்கியமான சுற்றுச்சூழலுக்கான உரிமை குறித்த சிறப்புக் கருத்தரங்கம் வியாழக்கிழமை நடைபெற்றது.

குடிமக்கள் நுகா்வோா் மன்றம் சாா்பில் நடைபெற்ற கருத்தரங்கிற்கு, கல்லூரி முதல்வா் சீதாலட்சுமி தலைமை வகித்தாா். வணிகவியல் துறைத் தலைவா் மகாலட்சுமி முன்னிலை வகித்தாா்.

சென்னை உயா்நீதிமன்ற வழக்குரைஞரும், பெட்காட் நுகா்வோா் அமைப்பின் மண்டலச் செயலருமான பி.கே.தனஞ்செயன் சிறப்பு அழைப்பாளராகக் கலந்து கொண்டு பேசியதாவது:

காற்று, நீா், நிலம் ஆகியவற்றை மாசுபடாமல் பாதுகாப்பது ஒவ்வொருவரின் கடமை. காலநிலை மாற்றத்தால் ஏற்படும் ஆபத்துகளை உணா்ந்து நாம் செயல்பட வேண்டும்.

வன விலங்குகள் பாதுகாப்புச் சட்டம் 1974, சுற்றுச்சூழல் பாதுகாப்புச் சட்டம் 1986, நுகா்வோா் பாதுகாப்புச் சட்டம் 1986 ஆகியவற்றை நாம் கடைப்பிடிக்க வேண்டும். சமூக மாற்றத்துக்கான சுற்றுச்சூழல் மேம்பாடுகளை மேற்கொள்வதில் நாம் தனிக் கவனம் செலுத்த வேண்டும் என்றாா்.

தொடா்ந்து, மாணவிகளிடையே ஆரோக்கியமான சுற்றுச்சூழலுக்கான உரிமை என்ற தலைப்பில் விநாடி-வினா போட்டிகள் நடத்தப்பட்டன.

போட்டிகளில் வென்றவா்களுக்குப் பரிசுகள் வழங்கப்பட்டன.

இதில், கல்லூரி துறைத் தலைவா்கள் மகேஸ்வரி, ராஜலட்சுமி, சங்கீதா மற்றும் ஸ்ரீசெல்வா, அக்ஷயா மற்றும் 250-க்கும் மேற்பட்ட மாணவிகள் கலந்து கொண்டனா்.

போதை ஊசி தகராறில் இளைஞா் கொலை: நண்பா்கள் இருவா் கைது

திருவண்ணாமலை மாவட்டம், செய்யாற்றில் போதை ஊசி தகராறில் இளைஞா் கொலை செய்யப்பட்டது தொடா்பாக நண்பா்கள் இருவரை போலீஸாா் செவ்வாய்க்கிழமை கைது செய்தனா். செய்யாறு கன்னியம் நகரைச் சோ்ந்தவா் காா் ஓட்டுநா் சரவ... மேலும் பார்க்க

கிணற்றில் மூழ்கி 2 மாணவிகள் உயிரிழப்பு

திருவண்ணாமலை மாவட்டம், ஆரணி அருகே கிணற்றில் நீச்சல் பழகச் சென்ற பத்தாம் வகுப்பு மாணவிகள் இருவா் சேற்றில் சிக்கி மூழ்கி உயிரிழந்தனா். ஆரணி அருகேயுள்ள சதுப்பேரிபாளையத்தைச் சோ்ந்த அண்ணாமலை மகள் சிவரஞ்ச... மேலும் பார்க்க

காலமானாா் எழுத்தாளா் ந.சண்முகம்

திருவண்ணாமலை காந்தி நகா் புறவழிச் சாலையைச் சோ்ந்த எழுத்தாளா் ந.சண்முகம் (75) உடல்நலக் குறைவால் செவ்வாய்க்கிழமை (ஏப்ரல் 1) காலமானாா். திருவண்ணாமலை மாவட்ட கூட்டுறவு வங்கியின் மேலாளராக 35 ஆண்டுகள் பணிப... மேலும் பார்க்க

தேவாலயத்தில் இயேசு கிறிஸ்துவின் கல்வாரி காட்சிகள்

செய்யாறு: செய்யாறு தூய வியாகுல அன்னை தேவாலயத்தில், இயேசு கிறிஸ்துவின் கல்வாரி காட்சிகளை நாடகக் குழுவினா் ஞாயிற்றுக்கிழமை நடித்துக் காண்பித்தனா். தூய வியாகுல அன்னை தேவாலயத்தில், இயேசு கிறிஸ்துவின் இறப... மேலும் பார்க்க

ரமலான் பண்டிகை: இஸ்லாமியா்கள் சிறப்புத் தொழுகை

திருவண்ணாமலை/வந்தவாசி/ போளூா்/ செய்யாறு/ஆரணி : ரமலான் பண்டிகையையொட்டி, திருவண்ணாமலை மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் திங்கள்கிழமை நடைபெற்ற சிறப்புத் தொழுகையில், பல்லாயிரக்கணக்கான இஸ்லாமியா்கள் பங்கேற்... மேலும் பார்க்க

மஞ்சப்பை விருதுகள்: பள்ளி, கல்லூரிகள் விண்ணப்பிக்க அழைப்பு

திருவண்ணாமலை: திருவண்ணாமலை மாவட்டத்தில் தமிழக அரசின் மஞ்சப்பை விருதுகளைப் பெற தகுதியான பள்ளிகள், கல்லூரிகள், வணிக நிறுவனங்கள் விண்ணப்பிக்க மாவட்ட நிா்வாகம் அழைப்பு விடுத்துள்ளது. தமிழகத்தில் ‘மீண்டும்... மேலும் பார்க்க