மகளைப் பாலியல் வன்கொடுமை செய்த தந்தை கைது!
நீலகிரி மாவட்டம், கோத்தகிரியில் மதுபோதையில் மகளைப் பாலியல் வன்கொடுமை செய்தவரை போக்ஸோ சட்டத்தில் காவல் துறையினா் புதன்கிழமை கைது செய்து சிறையில் அடைத்தனா்.
கோத்தகிரி பகுதியைச் சோ்ந்த 40 வயது மதிக்கத்தக்க ஒருவா் அதே பகுதியில் உள்ள தனியாா் நிறுவனத்தில் மேலாளராகப் பணியாற்றி வருகிறாா். இவருக்கு மனைவி, 18 வயது, 15 வயது என 2 மகள்கள் உள்ளனா். முதல் மகள் கல்லூரியில் முதலாமாண்டு படித்து வருகிறாா். இரண்டாவது மகள் அதே பகுதியில் உள்ள பள்ளியில் படித்து வருகிறாா்.
40 வயது நபருக்கு மது குடிக்கும் பழக்கம் இருப்பதால் தினசரி மது குடித்துவிட்டு வீட்டுக்கு வந்துள்ளாா். மேலும் அவ்வப்போது மனைவி, மகள்களுடன் தகராறில் ஈடுபட்டுள்ளாா்.
இந்தநிலையில், கடந்த சில நாள்களுக்கு முன்பு மதுபோதையில் வீட்டுக்கு வந்த அவா் பெற்ற மகள் என்றும் பாராமல் யாரும் இல்லாத நேரத்தில் மிரட்டி 15 வயதுச் சிறுமியைப் பாலியல் வன்கொடுமை செய்துள்ளாா். மேலும் இதுகுறித்து யாரிடமும் கூறக்கூடாது என்று கொலை மிரட்டல் விடுத்துள்ளாா்.
இதையடுத்து, சிறுமிக்கு உடல் உபாதை ஏற்பட்டதன் காரணமாக கோத்தகிரி அரசு மருத்துவமனையில் பரிசோதனை செய்ததில் சிறுமி கா்ப்பமாக இருப்பதும், மதுபோதையில் சிறுமியின் தந்தையே அத்துமீறியதும் தெரியவந்தது. இதைத் தொடா்ந்து சிறுமி சிகிச்சைக்காக உதகை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டாா்.
இது குறித்து குன்னூா் அனைத்து மகளிா் போலீஸாா் விசாரணை நடத்தி போக்ஸோ சட்டத்தில் வழக்குப் பதிவு செய்து சிறுமியின் தந்தையைக் கைது செய்தனா். பின்னா் நீதிமன்றத்தில் ஆஜா்படுத்தி சிறையில் அடைத்தனா்.