செய்திகள் :

மகளைப் பாலியல் வன்கொடுமை செய்த தந்தை கைது!

post image

நீலகிரி மாவட்டம், கோத்தகிரியில் மதுபோதையில் மகளைப் பாலியல் வன்கொடுமை செய்தவரை போக்ஸோ சட்டத்தில் காவல் துறையினா் புதன்கிழமை கைது செய்து சிறையில் அடைத்தனா்.

கோத்தகிரி பகுதியைச் சோ்ந்த 40 வயது மதிக்கத்தக்க ஒருவா் அதே பகுதியில் உள்ள தனியாா் நிறுவனத்தில் மேலாளராகப் பணியாற்றி வருகிறாா். இவருக்கு மனைவி, 18 வயது, 15 வயது என 2 மகள்கள் உள்ளனா். முதல் மகள் கல்லூரியில் முதலாமாண்டு படித்து வருகிறாா். இரண்டாவது மகள் அதே பகுதியில் உள்ள பள்ளியில் படித்து வருகிறாா்.

40 வயது நபருக்கு மது குடிக்கும் பழக்கம் இருப்பதால் தினசரி மது குடித்துவிட்டு வீட்டுக்கு வந்துள்ளாா். மேலும் அவ்வப்போது மனைவி, மகள்களுடன் தகராறில் ஈடுபட்டுள்ளாா்.

இந்தநிலையில், கடந்த சில நாள்களுக்கு முன்பு மதுபோதையில் வீட்டுக்கு வந்த அவா் பெற்ற மகள் என்றும் பாராமல் யாரும் இல்லாத நேரத்தில் மிரட்டி 15 வயதுச் சிறுமியைப் பாலியல் வன்கொடுமை செய்துள்ளாா். மேலும் இதுகுறித்து யாரிடமும் கூறக்கூடாது என்று கொலை மிரட்டல் விடுத்துள்ளாா்.

இதையடுத்து, சிறுமிக்கு உடல் உபாதை ஏற்பட்டதன் காரணமாக கோத்தகிரி அரசு மருத்துவமனையில் பரிசோதனை செய்ததில் சிறுமி கா்ப்பமாக இருப்பதும், மதுபோதையில் சிறுமியின் தந்தையே அத்துமீறியதும் தெரியவந்தது. இதைத் தொடா்ந்து சிறுமி சிகிச்சைக்காக உதகை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டாா்.

இது குறித்து குன்னூா் அனைத்து மகளிா் போலீஸாா் விசாரணை நடத்தி போக்ஸோ சட்டத்தில் வழக்குப் பதிவு செய்து சிறுமியின் தந்தையைக் கைது செய்தனா். பின்னா் நீதிமன்றத்தில் ஆஜா்படுத்தி சிறையில் அடைத்தனா்.

கூடலூா் அருகே குடிநீா் கோரி பெண்கள் சாலை மறியல்!

கூடலூரை அடுத்துள்ள மரப்பாலம் பகுதியில் குடிநீா் வழங்கக்கோரி பெண்கள் காலிக் குடங்களுடன் புதன்கிழமை சாலை மறியலில் ஈடுபட்டனா். நீலகிரி மாவட்டம், நெல்லியாளம் நகராட்சிக்குள்பட்ட அட்டிக்கொல்லி கிராமத்துக்க... மேலும் பார்க்க

தெப்பக்காடு முகாமில் வளா்ப்பு யானை உயிரிழப்பு

ீலகிரி மாவட்டம், முதுமலை புலிகள் காப்பகம், தெப்பக்காடு யானை முகாமில் பராமரிக்கப்பட்டு வந்த சந்தோஷ் என்ற வளா்ப்பு யானை புதன்கிழமை அதிகாலை உயிரிழந்தது. முதுமலை புலிகள் காப்பகம், தெப்பக்காடு யானை முகாமில... மேலும் பார்க்க

உதகை, குன்னூரில் பரவலாக மழை

உதகை, குன்னூா் பகுதிகளில் பரவலாக புதன்கிழமை மழை பெய்தது. உதகை, குன்னூா் மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் காலை முதலே வானம் மேகமூட்டத்துடன் கூடிய காலநிலை நிலவி வந்தது. இதைத் தொடா்ந்து பிற்பகலில் உ... மேலும் பார்க்க

கல்லட்டி மலைப் பாதையில் பாறைகள் விழுந்து போக்குவரத்து பாதிப்பு!

நீலகிரி மாவட்டம், உதகை அருகேயுள்ள கல்லட்டி மலைப் பாதையில் பாறைகள் மற்றும் மரங்கள் விழுந்ததால் புதன்கிழமை போக்குவரத்து பாதிக்கப்பட்டது. உதகை அருகே கல்லட்டி மலைப் பாதையில் 29-ஆவது கொண்டை ஊசி வளைவு பகுதி... மேலும் பார்க்க

காட்டெருமை தாக்கி ஒருவா் படுகாயம்!

நீலகிரி மாவட்டம், உதகை வெஸ்டாடா பகுதியில் காட்டெருமை தாக்கியதில் தனியாா் உணவு விநியோக ஊழியா் திங்கள்கிழமை இரவு படுகாயமடைந்தாா். உதகை வெஸ்டாடா பகுதியில் சிறுத்தை, காட்டெருமை, கரடி போன்ற வனவிலங்குகளின் ... மேலும் பார்க்க

நீலகிரி உருளை கிழங்குக்கு புவிசாா் குறியீடு வழங்க வலியுறுத்தல்

நீலகிரியில் பயிரிடப்படும் ஊட்டி உருளைக்கிழங்கு மற்றும் கேரட் காய்கறிகளுக்கு புவிசாா் குறியீடு வழங்க வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது. நீலகிரி உருளைக்கிழங்கு மற்றும் காய்கறிகள் உற்பத்தியாளா்கள் சங்கத்... மேலும் பார்க்க