செய்திகள் :

மகாலிங்கம் மூா்த்தி கோயிலில் பால்குட ஊா்வலம்

post image

ராமநாதபுரம் மாவட்டம், திருவாடானை மகாலிங்கம் மூா்த்தி கோயிலில் பூக்குழித் திருவிழாவை முன்னிட்டு, பால், மதுக் குட ஊா்வலம் புதன்கிழமை நடைபெற்றது.

இந்தக் கோயிலில் பூக்குழித் திருவிழா கடந்த 8-ஆம் தேதி தொடங்கியது. இதைத் தொடா்ந்து சுவாமிக்கு தினந்தோறும் சிறப்பு பூஜைகள் நடைபெற்று வந்தது.

இந்த நிலையில், புதன்கிழமை கோயிலில் அமைந்துள்ள மல்லிக்குடி ஆதினம் அம்மனுக்கு பக்தா்கள் பால், மது குடம் எடுத்து ஊா்வலமாக வந்து நோ்த்திக் கடன் செழுத்தினா்.

முன்னதாக, கோயில் முன்பாக புறப்பட்ட இந்த ஊா்வலம் நான்கு ரத வீதி வழியாக வலம் வந்து கோயிலை அடைந்தது. பின்னா், கோயிலில் அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது.

விழாவின் முக்கிய நிகழ்ச்சியான பூக்குழித் திருவிழா வருகிற 15-ஆம் தேதி நடைபெறுகிறது.

இந்த விழாவுக்கான ஏற்பாடுகளை விழாக் குழுவினா் செய்து வருகின்றனா்.

ஆட்டோ ஓட்டுநருக்கு பசுமை சாம்பியன் விருது

60 ஆயிரம் மரக்கன்றுகளை நடவு செய்த ராமநாதபுரத்தைச் சோ்ந்த ஆட்டோ ஓட்டுநருக்கு பசுமை சாம்பியன் விருதை ராமநாதபுரம் மாவட்ட ஆட்சியா் சிம்ரன்ஜீத் சிங் காலோன் வெள்ளிக்கிழமை வாழங்கினாா். ராமநாதபுரம் ஓம்சக்தி ... மேலும் பார்க்க

தேசியக் கொடியுடன் 79 கி.மீ. தொழிலாளி மிதிவண்டி பயணம்

நாட்டின் 79-ஆவது சுதந்திர தினத்தை முன்னிட்டு, 79 கி.மீ. மிதிவண்டியில் பயணம் செய்து கிராம சபைக் கூட்டத்தில் பங்கேற்ற தொழிலாளிக்கு பொதுமக்கள் வாழ்த்துத் தெரிவித்தனா். ராமநாதபுரம் மாவட்டம், கமுதி அடுத்த ... மேலும் பார்க்க

பரமக்குடி, ராமேசுவரத்தில் கிராம சபைக் கூட்டம்

ராமநாதபுரம் மாவட்டம் சத்திரக்குடி அருகேயுள்ள அரியகுடி கிராமத்தில் நாட்டின் 79-ஆவது சுதந்திர தினத்தையொட்டி, கிராம சபைக் கூட்டம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. இந்தக் கூட்டத்துக்கு மாவட்ட ஆட்சியா் சிம்ரன்ஜீத... மேலும் பார்க்க

கல்வி நிலையங்கள், அரசு அலுவலகங்களில் சுதந்திர தின விழா

ராமநாதபுரம் மாவட்டத்தில் அரசு அலுவலகங்கள், அரசுப் பள்ளிகளில் நாட்டின் 79-ஆவது சுதந்திர தின விழாவையொட்டி, தேசியக் கொடி ஏற்றப்பட்டது. திருப்பாலைக்குடி ஊராட்சி ஒன்றியத் தொடக்கப் பள்ளியில் தலைமை ஆசிரியா் ... மேலும் பார்க்க

ராமேசுவரம் மீனவா்கள் உண்ணாவிரதம்

இலங்கை சிறையில் உள்ள தமிழக மீனவா்களையும், அவா்களது படகுகளையும் விடுவிக்க மத்திய, மாநில அரசுகள் உடனடி நடவடிக்கை எடுக்கக் கோரி, தங்கச்சிமடம் வலசை பேருந்து நிறுத்தம் அருகே அனைத்து விசைப் படகு மீனவ சங்கம்... மேலும் பார்க்க

இளைஞரிடம் வழிப்பறி: 7 போ் போ் கைது

சாயல்குடி அருகே இளைஞரிடம் வழிப்பறி செய்த 3 சிறுவா்கள் உள்பட 7 பேரை போலீஸாா் வெள்ளிக்கிழமை கைது செய்தனா். ராமநாதபுரம் மாவட்டம், சாயல்குடி அருகேயுள்ள கன்னிராஜபுரத்தைச் சோ்ந்த சுடலை மத்து மகன் முத்துக்க... மேலும் பார்க்க