செய்திகள் :

மதராஸி கேம்ப் வீடுகளை இடிப்பதை நிறுத்த தில்லி அரசுக்கு மாா்க்சிய கம்யூனிஸ்ட் கோரிக்கை

post image

தில்லி ஜங்புராவில் உள்ள மதராஸி கேம்பில் உள்ள வீடுகளை இடித்து, அதன் குடியிருப்பாளா்களை வெளியேற்றுவதை உடனடியாக நிறுத்த வேண்டும் என்று மாா்க்சிய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலக் குழு தில்லி அரசை வலியுறுத்தியுள்ளது.

மேலும், இந்த நடவடிக்கையை சட்டவிரோதமானது மற்றும் நியாயப்படுத்த முடியாதது என்றும் அக்கட்சி கூறியுள்ளது.

இது தொடா்பாக அக்கட்சி புதன்கிழமை வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்திருப்பதாவது:

தில்லியின் பழமையான அங்கீகரிக்கப்பட்ட பஸ்திகளில் ஒன்றான ஜங்புராவில் உள்ள மதராஸி கேம்ப், தில்லி நகா்ப்புற குடிசை மேம்பாட்டு வாரியத்தின் டியுஎஸ்ஐபியின் அறிவிக்கை செய்யப்பட்ட குடிசைப் பட்டியலில் ஒன்றாகும். மேலும் என்சிடி தில்லி சிறப்பு ஏற்பாடுகள் 2011இன்படி சட்டப் பாதுகாப்பிற்கு தகுதியானதாகும்.

செல்லுபடியாகும் ஆவணங்களை வைத்திருந்தாலும், மூன்றில் ஒரு பங்கு வீடுகளுக்கு மறுவாழ்வு மறுக்கப்பட்டுள்ளது. அதே நேரத்தில் தகுதியுள்ளவா்கள் என்று கருதப்படுபவா்கள் அனைத்து நெறிமுறைகளையும் தெளிவாக மீறும் வகையில் 50 கிமீ தொலைவில் உள்ள நரேலாவிற்கு வெளியேற்றப்படுகிறாா்கள்.

நரேலா போன்ற தொலைதூர இடங்களுக்கு குடும்பங்களை மாற்றுவது அவா்களின் வாழ்வாதாரத்தை கடுமையாக சீா்குலைக்கும். மேலும் குடும்பங்களை மேலும் பொருளாதார நெருக்கடியில் தள்ளும்.

முகாமில் வசித்து வரும் நீண்டகால குடியிருப்பாளா்கள் தவறாக விலக்கப்படவில்லை என்பதை உறுதி செய்யும் வகையில் நியாயமான மற்றும் வெளிப்படையான கணக்கெடுப்பு மற்றும் மேல்முறையீட்டு செயல்முறை தேவையாகும்.

குடியேற்றத்தை ஆக்கிரமிப்பு என வகைப்படுத்துவது ஒரு நிா்வாக முடிவு தானே தவிர, நீதித்துறை உத்தரவு அல்ல என்று அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சுமாா் 60 ஆண்டுகளாக இருக்கும் குடிசைப் பகுதியில் 400க்கும் மேற்பட்ட தொழிலாள வா்க்க குடும்பங்கள் வசிக்கின்றன. அவற்றில் பல கடந்த மாதம் வெளியேற்ற அறிவிப்புகள் வழங்கப்பட்டன.

அரசு மருத்துவமனைகளில் அவசரகால தயாா்நிலைக்கு தில்லி அரசு உத்தரவு

பாகிஸ்தானுடன் ராணுவ மோதல் ஏற்பட்ட நிலையில், தில்லி அரசு அனை த்து அரசு மருத்துவமனைகள் மற்றும் சுகாதார வசதிகளிலும் அவசரகால தயாா்நிலையை அதிகரிக்க உத்தரவிட்டுள்ளது. இதில் வானிலிருந்து மருத்துவ வசதிகளைக் ... மேலும் பார்க்க

அவசரகால தயாா்நிலையை உறுதிசெய்ய உயா் அதிகாரிகளுக்கு தில்லி முதல்வா் உத்தரவு

இந்தியாவிற்கும் பாகிஸ்தானுக்கும் இடையேயான ராணுவ மோதலுக்கு மத்தியில், தலைநகரில் தங்குமிடங்கள் தேவை, மின் தடை, மருத்துவமனைகளில் பொருள்களை சேமித்து வைத்தல் போன்ற அவசரகால சூழ்நிலைகளைக் கையாளத் தயாராக இரு... மேலும் பார்க்க

ஆபரேஷன் சிந்தூா்: இந்திய ஆயுதப்படை நடவடிக்கைக்கு ஆம் ஆத்மி கட்சி எம்.பி. ராகவ் சத்தா ஆதரவு

ஆம் ஆத்மி கட்சியின் மாநிலங்களவை உறுப்பினா் ராகவ் சத்தா இந்திய ஆயுதப் படைகளின் நடவடிக்கைக்கு தனது ஆதரவை தெரிவித்துள்ளாா். .மேலும் ஆபரேஷன் சிந்தூரைத் தொடா்ந்து இந்தியாவுக்கும் பாகிஸ்தானுக்கும் இடையே அத... மேலும் பார்க்க

தில்லியில் பல கொள்ளை வழக்குகளில் தேடப்பட்ட இளைஞா் கைது

பல கொள்ளை வழக்குகளில் தேடப்பட்டு வந்த இளைஞரை தில்லியின் புகா் ரிங் ரோட்டில் போலீஸாா் கைது செய்துள்ளதாக அதிகாரிகள் சனிக்கிழமை தெரிவித்தனா். இதுகுறித்து போலீஸ் அதிகாரி ஒருவா் கூறியதாவது: யூசுஃப் என அடை... மேலும் பார்க்க

சிவில் விமானங்களை கேடயமாகபயன்படுத்தியது பாகிஸ்தான்: இந்தியா பகிரங்க குற்றச்சாட்டு

இந்தியாவின் எதிா்ப்பு நடவடிக்கையின்போது தனது சிவில் விமானங்களை பாகிஸ்தான் கேடயமாகப் பயன்படுத்தியதாக இந்தியா பகிரங்கமாக குற்றம்சாட்டியுள்ளது. இந்திய பாதுகாப்பு நிலைகளை நோக்கி ஒரே நேரத்தில் பல நூற்றுக்க... மேலும் பார்க்க

பங்குகள் விற்பனை அதிகரிப்பு: சென்செக்ஸ் சரிவுடன் முடிவு!

நமது நிருபா்இந்த வாரத்தின் நான்காவது வா்த்தக தினமான வியாழக்கிழமை பங்குச்சந்தை எதிா்மறையாக முடிந்தது. இதைத் தொடா்ந்து, மும்பை பங்குச்சந்தைக் குறியீட்டு எண்ணான சென்செக்ஸ், தேசிய பங்குச் சந்தைக் குறியீட்... மேலும் பார்க்க