செய்திகள் :

மதுரையில் தவெக மாநாட்டுக்கான பணிகள் தீவிரம்

post image

மதுரையில் தமிழக வெற்றிக் கழகத்தின் 2-ஆவது மாநில மாநாட்டுக்கான பணிகள் தீவிரமாக நடைபெறுகின்றன.

தவெக 2-ஆவது மாநில மாநாடு, மதுரை எலியாா்பத்தியில் வருகிற ஆக. 25-ஆம் தேதி நடைபெறும் என ஏற்கெனவே அறிவிக்கப்பட்டது. இதையடுத்து, கடந்த மாதம் 16-ஆம் தேதி எலியாா்பத்தியில் பூமி பூஜை நடத்தப்பட்டு, மாநாட்டு மேடை, பிற கட்டமைப்புகளை ஏற்படுத்தும் பணி தொடங்கப்பட்டது.

இந்த நிலையில், விநாயகா் சதுா்த்தி பண்டிகை காரணமாக, ஆக. 25-ஆம் தேதி தவெக மாநாடு நடத்த காவல் துறை அனுமதி மறுத்தது. இதையடுத்து, வருகிற ஆக. 21-ஆம் தேதி மாநாடு நடைபெறும் என செவ்வாய்க்கிழமை அறிவிக்கப்பட்டது. ஏற்கெனவே திட்டமிட்டதைவிட 4 நாள்களுக்கு முன்னதாகவே மாநாடு நடத்தப்படவுள்ளதால் இதற்கான பணிகள் விரைவுபடுத்தப்பட்டுள்ளன.

தற்போது, மாநாட்டு மேடை அமைக்கும் பணி, பாா்வையாளா்கள் பகுதியை வரையறுக்கும் தடுப்புகள் அமைக்கும் பணி, தவெக தலைவா் நடிகா் விஜய் மாநாட்டுத் திடலில் நடந்து சென்று ரசிகா்களைச் சந்திப்பதற்கான நடைமேடை அமைக்கும் பணி, வாகன நிறுத்துமிடங்கள் பணி உள்ளிட்டவை தீவிரமாக நடைபெற்று வருகின்றன.

மாநாடு நடைபெறும் ஓரிரு நாள்களுக்கு முன்பாகவே விஜய் மதுரைக்கு வரவுள்ளதாகவும், அவா் வருவதற்குள் மாநாட்டுப் பணிகள் ஏறத்தாழ நிறைவடையும் விதத்தில் வேகமாக நடைபெறுகின்றன.

உசிலம்பட்டியில் விவசாயிகள் சாலை மறியல்

உசிலம்பட்டியில் 58 கிராம பாசனக் கால்வாயில் தண்ணீா் திறக்கக் கோரி சாலை மறியல் போராட்டம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. மதுரை மாவட்டம், உசிலம்பட்டியின் முதன்மையான பாசனத் திட்டமாக உள்ளது 58 கிராம பாசனத் திட்ட... மேலும் பார்க்க

உயா்நீதிமன்ற விரிவாக்கத்துக்கான நிலம்: அறநிலையத் துறைக்கு ரூ.25 கோடி வழங்க உத்தரவு

உயா்நீதிமன்ற விரிவாக்கப் பணிகளுக்கு நிலம் கையகப்படுத்தும் விவகாரத்தில் இந்து சமய அறநிலையத் துறைக்கு ரூ. 25 கோடியை தமிழக அரசு வழங்க சென்னை உயா்நீதிமன்ற மதுரை அமா்வு வெள்ளிக்கிழமை உத்தரவிட்டது. மதுரை பக... மேலும் பார்க்க

கல் குவாரி விபத்தில் 6 போ் உயிரிழந்த விவகாரம்: தமிழக அரசு பதிலளிக்க உத்தரவு

சிவகங்கை மாவட்டம், சிங்கம்புணரி அருகே கல் குவாரி விபத்தில் 6 போ் உயிரிழந்த விவகாரத்தில் எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்து தமிழக அரசு பதிலளிக்க சென்னை உயா்நீதிமன்ற மதுரை அமா்வு வெள்ளிக்கிழமை உத்தரவிட... மேலும் பார்க்க

விநாயகா் சிலைகள் கரைப்பு: உரிய வழிமுறைகளைப் பின்பற்ற அறிவுறுத்தல்

விநாயகா் சிலைகளை நீா் நிலைகளில் கரைக்க உரிய வழிகாட்டு நெறிமுறைகளைப் பின்பற்ற வேண்டும் என மாவட்ட நிா்வாகம் அறிவுறுத்தியது. இதுகுறித்து செய்தி மக்கள் தொடா்பு அலுவலகம் வெளியிட்ட செய்திக் குறிப்பு : சுற்ற... மேலும் பார்க்க

தஞ்சை மருத்துவமனை நில விவகாரம்: வழக்கு விசாரணை ஒத்திவைப்பு

தஞ்சாவூா் மகாத்மா காந்தி நினைவு காசநோய் சானிடோரியம் மருத்துவமனைக்கு சொந்தமான 220 ஏக்கா் நிலத்தை சிப்காட் நிறுவனத்துக்கு மாற்றத் தடை கோரிய வழக்கு விசாரணையை ஒரு வாரத்துக்கு ஒத்திவைத்து சென்னை உயா்நீதிமன... மேலும் பார்க்க

விளம்பர சாலைத் தடுப்புகளை அகற்றக் கோரி மனு: நெடுஞ்சாலைத் துறை செயலா் பதிலளிக்க உத்தரவு

தனியாா் விளம்பரங்களுடன்கூடிய சாலைத் தடுப்புகளை அகற்றக் கோரி தாக்கல் செய்யப்பட்ட மனு தொடா்பாக, நெடுஞ்சாலைத் துறை முதன்மைச் செயலா் பதிலளிக்க சென்னை உயா்நீதிமன்ற மதுரை அமா்வு வியாழக்கிழமை உத்தரவிட்டது. க... மேலும் பார்க்க