செய்திகள் :

மதுரை மாநகராட்சியின் முதல் பெண் ஆணையராக பொறுப்பேற்ற சித்ரா விஜயன் ஐ.ஏ.எஸ்

post image

மதுரை மாநகராட்சியின் புதிய ஆணையராக சித்ரா விஜயன் ஐ.ஏ.எஸ் இன்று பொறுப்பேற்றுக் கொண்டார். இவர் மதுரை மாநகராட்சியின் முதல் பெண் ஆணையர் என்ற சிறப்பை பெறுகிறார்.

மதுரை மாநகராட்சி

பாரம்பரிய நகரமான மதுரை, நகராட்சியாக இருந்த நிலையில் 1971 ஆம் ஆண்டு மாநகராட்சியாக மாற்றப்பட்டது. அப்போதிருந்து ஆண் அலுவலர்களே ஆணையர்களாக நியமிக்கப்பட்டு நிர்வாகம் செய்து வந்தார்கள். அந்த வரிசையில் கடந்த ஆண்டு ஆணையராக நியமிக்கப்பட்ட தினேஷ்குமார் சிறப்பாக செயல்பட்டு வந்தார். அவருக்கு கிருஷ்ணகிரி கலெக்டராக பதவி உயர்வு அளிக்கப்பட்டு மாற்றப்பட்டதால், புதிய ஆணையராக சித்ரா விஜயன் நியமிக்கப்பட்டுள்ளார்.

இன்று பொறுப்பேற்றுக் கொண்ட சித்ரா விஜயன் கேரளாவைச் சேர்ந்தவர்.  2019 ஆம் ஆண்டு பேட்ச் ஐ.ஏ.எஸ்  அதிகாரியான இவர், தருமபுரி, திருச்சி மாவட்டங்களில் சப் கலெக்டராகவும், ஊரக வளர்ச்சித்துறை இயக்குநராகவும் பணியாற்றி பின்பு மின் ஆளுமைத் துறையில் இணை இயக்குநராக பணியாற்றினார். அதைத் தொடர்ந்து தற்போது மதுரை மாநகராட்சி ஆணையராக பொறுப்பேற்றுள்ளார்.

சித்ரா விஜயன்

மீனாட்சியம்மன் ஆட்சி செய்யும் பெருமை கொண்ட மதுரையில் கலெக்டராக சங்கீதா, மேயராக இந்திராணி, மாவட்ட திட்ட இயக்குநராக மோனிகா ரானா, மாநகர காவல்துறை துணை ஆணையராக அனிதா, மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலராக ரேணுகா, மீனாட்சியம்மன் கோயில் அறங்காவலர் குழுத் தலைவராக ருக்மணி பழனிவேல்ராசன் என பல முக்கிய பொறுப்புகளில் பெண்கள் சிறப்பாக செயல்பட்டு வரும் நிலையில், மதுரை மாநகராட்சியின் முதல் பெண் ஆணையராக சித்ரா விஜயன் பொறுப்பேற்றுள்ளது அனைவராலும் பாராட்டப்படுகிறது.

போராட்டத்துக்கு அனுமதி மறுப்பு; 144 தடை; உயர்நீதிமன்றத்தில் முறையீடு! -டென்ஷனில் திருப்பரங்குன்றம்!

திருப்பரங்குன்றத்தில் மலை உரிமை சம்பந்தமாக இந்து முன்னணி பிப்ரவரி 4-ஆம் தேதி அறிவித்த போராட்டத்திற்கு காவல்துறை அனுமதி மறுத்துள்ள நிலையில், இன்றும் நாளையும் 144 தடை உத்தரவை மதுரை மாவட்ட நிர்வாகம் நடைம... மேலும் பார்க்க

US: `வரி யுத்தத்துக்கு தயாராகும் டொனல்டு ட்ரம்ப்' -எப்படி எதிர்கொள்ளப்போகிறது இந்தியா?!

அமெரிக்க அதிபர்களிலேயே சர்ச்சைகளுக்கு பஞ்சமில்லாதவர், ட்ரம்ப். தனது முந்தைய பதவி காலத்தில் ஐரோப்பிய ஒன்றியம், சீனாவிலிருந்து இறக்குமதி செய்யப்படும் பொருள்களுக்கு கடும் வரிகளை விதித்தார், அவர். பதிலுக்... மேலும் பார்க்க

``நான் பேசிய வீடியோ இதுதான்.. திரித்து வெளியிட்டு விவாதம் ஆக்கியுள்ளனர்'' -சுரேஷ்கோபி விளக்கம்

பிரசாரத்தில் ஈடுபட்ட மத்திய அமைச்சர் சுரேஷ்கோபிகேரள மாநிலம் திருச்சூர் தொகுதி எம்.பி-யான நடிகர் சுரேஷ்கோபி மத்திய அமைச்சராக உள்ளார். டெல்லி மாநில சட்டசபை தேர்தலில் பா.ஜ.க-வுக்கு ஆதரவாக பிரசாரத்தில் ஈட... மேலும் பார்க்க

``37,000 கி.மீ வேகத்தில் ராக்கெட்டை இயக்கும் இன்ஜின் தயாரிக்கிறோம்'' -ISRO தலைவர் நாராயணன் பெருமிதம்

இஸ்ரோ தலைவராக பொறுபெற்றுள்ள நாராயணனுக்கு அவரது சொந்த ஊரான கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் அருகே உள்ள மேலகாட்டுவிளையில் பாராட்டுவிழா நேற்று மாலை நடைபெற்றது. இஸ்ரோவில் 40 ஆண்டுகளாக பணிபுரிந்துவரும் நா... மேலும் பார்க்க

``புதுச்சேரி மின்துறை புதிய புதிய பெயர்களில் கொள்ளை அடிக்கிறது!'' -பாஜக முன்னாள் எம்.எல்.ஏ காட்டம்

புதுச்சேரி பா.ஜ.க-வின் முன்னாள் தலைவரும், முன்னாள் எம்.எல்.ஏ-வுமான சாமிநாதன் மின்துறையின் கட்டணக் கொள்ளையை கடுமையாக சாடியிருக்கிறார். இதுகுறித்து அவர் வெளியிட்டிருக்கும் அறிக்கையில், ``புதுச்சேரி மாநி... மேலும் பார்க்க

TVK: ``2026 -ல் பண்ணையார் மனநிலையை தவெக அப்புறப்படுத்தும்!'' -ஆதவ் அர்ஜூனா

முன்னாள் முதல்வர் அண்ணாவின் நினைவு நாளை முன்னிட்டு தவெக கட்சியின் தேர்தல் மேலாண்மை பொதுச்செயலாளர் ஆதவ் அர்ஜூனா ஒரு அறிக்கையை வெளியிட்டுள்ளார். அதில், '1967 -ல் அண்ணா பண்ணையார்களின் ஆதிக்கத்தை ஒழித்ததை... மேலும் பார்க்க