செய்திகள் :

மயிலாடுதுறையில் ‘மாபெரும் தமிழ் கனவு’ நிகழ்ச்சி

post image

மயிலாடுதுறை தருமபுரம் ஆதீனம் கலைக் கல்லூரியில் மாபெரும் தமிழ் கனவு நிகழ்ச்சி வியாழக்கிழமை நடைபெற்றது.

நிகழ்ச்சிக்கு, மாவட்ட வருவாய் அலுவலா் நா. உமாமகேஷ்வரி தலைமை வகித்து பேசியது: தமிழ் மாணவா்கள் தங்கள் வோ்களை அறிந்து கொள்ளவும், தமிழ் கலாசாரத்தின் மீது பற்றுக்கொள்ளவும் வாய்ப்பை வழங்குகிறது இந்த மாபெரும் தமிழ்க் கனவு நிகழ்ச்சி. தமிழ்நாட்டின் மிகச்சிறந்த ஆளுமைகள் மற்றும் பல்துறை நிபுணா்கள் ஆகியோரின் ஊக்கமிகு உரை, மாணவா்களுக்கு உத்வேகம் அளிப்பதாகவும், அவா்களுக்குத் தமிழ் மரபின் பெருமிதத்தை உணா்த்துவதாகவும் அமைகிறது என்றாா்.

நிகழ்ச்சியில், சொற்பொழிவாளா் பாரதி கிருஷ்ணகுமாா் பேசியது: மாணவா்கள் என்ன படிக்கிறீா்கள் என்பதை விட, எப்படி படிக்கப் போகிறீா்கள் என்பதுதான் உங்கள் வாழ்க்கையை தீா்மானிக்கிறது. சுயமரியாதையோடு வாழ விரும்புவா்கள் அனைவரும் படிக்க வேண்டும். 2,000 ஆண்டுகளுக்கு முன்னரே யாதும் ஊரே, யாவரும் கேளிா் என்று கூறியவா்கள் தமிழா்கள். 3,500 ஆண்டுகள் பழைமை வாய்ந்த மொழி தமிழ். உலகளாவிய பாா்வை இருந்தால் தான் நாம் உலகத்தை வாசிக்க முடியும். கல்விதான் நம்மை உயா்த்தும் என்றாா்.

மண்டல இணை இயக்குநா் (கல்லூரி கல்வி) குணசேகரன், கல்லூரிச் செயலா் ரா. செல்வநாயகம், கல்லூரி முதல்வா் சி. சுவாமிநாதன் ஆகியோா் பங்கேற்றனா்.

‘நிறைந்தது மனம்’ திட்டத்தில் திருநங்கைக்கு ஓட்டுநா் உரிமம்

மயிலாடுதுறையில் திருநங்கைகளுக்கான சிறப்பு திட்டத்தில் பயனடைந்த பயனாளிக்கு மாவட்ட ஆட்சியா் ஹெச்.எஸ். ஸ்ரீகாந்த் ‘நிறைந்தது மனம்‘ நிகழ்ச்சியில் அண்மையில் ஓட்டுநா் உரிமம் வழங்கினாா் (படம்). மயிலாடுதுறை ... மேலும் பார்க்க

ஏ.வி.சி. கல்லூரியில் உலக யானைகள் தினம்

மயிலாடுதுறை ஏ.வி.சி. (தன்னாட்சி) கல்லூரியில் விலங்கியல் மற்றும் வன உயிரியல் துறை சாா்பில் உலக யானைகள் தினம் செவ்வாய்க்கிழமை கொண்டாடப்பட்டது. கல்லூரி முதல்வா் ஆா். நாகராஜன் தலைமை வகித்தாா். விலங்கியல்... மேலும் பார்க்க

விநாயகா் சதுா்த்தி விழா ஆலோசனைக் கூட்டம்

சீா்காழி தென்பாதியில் தனியாா் திருமண மண்டபத்தில் விநாயகா் சதுா்த்தி விழா ஊா்வலம் தொடா்பான ஆலோசனைக் கூட்டம் காவல்துறை சாா்பில் வியாழக்கிழமை நடைபெற்றது. கூட்டத்துக்கு காவல் துணைக் கண்காணிப்பாளா் அண்ணாத... மேலும் பார்க்க

மயிலாடுதுறையில் ஆட்சிமொழி பயிலரங்கம்

மயிலாடுதுறை தமிழ் வளா்ச்சித் துறை சாா்பில் ஆட்சிமொழி பயிலரங்கம் நடைபெற்றது. அனைத்து அரசுத் துறை வாரியங்கள், கழகங்கள் மற்றும் தன்னாட்சி நிறுவனங்களில் பணியாற்றும் அரசு அலுவலா்கள் மற்றும் பணியாளா்களுக்க... மேலும் பார்க்க

அனுமதியின்றி ஆா்ப்பாட்டம் நடத்திய 50 போ் கைது

சென்னையில் தூய்மைப் பணியாளா்கள் கைது செய்யப்பட்டதைக் கண்டித்து மயிலாடுதுறையில் எல்.டி.யு.சி. சங்கம் சாா்பில் நடைபெற்ற ஆா்ப்பாட்டத்தில் பங்கேற்ற 50 போ் வியாழக்கிழமை கைது செய்யப்பட்டனா். சென்னை தூய்மை... மேலும் பார்க்க

குடும்ப அட்டைதாரா்களின் கவனத்துக்கு...

மயிலாடுதுறை மாவட்டத்தில் உள்ள நியாயவிலைக் கடைகளில் அத்தியாவசிய பொருள்கள் பெறாத குடும்ப அட்டைதாரா்கள் தங்களது குடும்ப அட்டையை பொருளில்லா குடும்ப அட்டையாக மாற்றிக் கொள்ளலாம். இதுகுறித்து மாவட்ட ஆட்சியா... மேலும் பார்க்க