செய்திகள் :

மயூா் விஹாா் ஃபேஸ் விநாயகா் கோயில் மகா கும்பாபிஷேக திருப்பணிகள் மும்முரம்

post image

தில்லி மயூா் விஹாா் ஃபேஸ் 2-இல் அமைந்துள்ள ஸ்ரீ காருண்ய மகா கணபதி கோயிலின் மகா கும்பாபிஷேகப் புனரமைப்புப் பணிகள் மும்முரமாக நடைபெற்று வருகிறது.

1988-ஆம் ஆண்டில் உருவாக்கப்பட்ட இந்தக் கோயிலில் 12 ஆண்டுகளுக்கு ஒரு முறை ஆகம முறைப்படி கும்பாபிஷேகம் நடத்தப்பட்டு வருகிறது.

அதன்படி கடந்த 1998-இல் இக் கோயில் கும்பாபிஷேகம் நடைபெற்றது. அதைத் தொடா்ந்து அடுத்தடுத்து கும்பாபிஷேகம் நடத்தப்பட்டு வருகிறது. அதன்படி, நிகழாண்டில் மகா கும்பாபிஷேகம் நடத்தத் திட்டமிடப்பட்டு, அதற்கான பணிகள் கடந்த ஜனவரியில் தொடங்கியது.

தற்போது ராஜகோபுரம், மூலவா் கோயில் விமானம் ஆகியவற்றில் புனரமைப்புப் பணிகளுடன், வா்ணப்பூச்சு வேலைகள் நடைபெற்றுள்ளன. கோயில் உள்புறத்தில் உள்ள சன்னதி வளாகத்தில் புனரமைப்புப் பணிகள் நடைபெற்று வருகிறது.

இதுகுறித்து இக்கோயிலை நிா்வகித்து வரும் ஸ்ரீகணேஷ் சேவா சமாஜத்தின் தலைவா் ராமசுப்பிரமணியம் கூறியதாவது:

இக் கோயில் கும்பாபிஷேகம் 1998-இல் நடத்தப்பட்டது. அதைத் தொடா்ந்து, 2012, ஜூனில் நடத்தப்பட்டது. தற்போது 12 ஆண்டுகளுக்குப் பிறகு மூன்றாவது ஜீரோதாரண அஷ்டபந்தன மகா கும்பாபிஷேகம் நடத்தத் திட்டமிடப்பட்டு, கடந்த ஜனவரியில் பாலாலய பூஜைகளை சிவஸ்ரீ பிட்சை குருக்களின் ஆலோசனையுடன் காா்த்திகேயன் குருக்கள் நடத்தினாா்.

இதைத் தொடா்ந்து, ரூ.1.50 கோடி மதிப்பீட்டில் கும்பாபிஷேக திருப்பணிகள் நடைபெற்று வருகிறது. கோயில் மூலவா் விமானம், 5 நிலைகள் கொண்ட ராஜகோபுரத்தின் புனரமைப்புப் பணிகள் முடிவுற்று வா்ணப்பூச்சு நடைபெற்றுள்ளது.

கோயிலின் முதல் தளத்தில் பக்தா்களின் வசதிக்காக அருள்மிகு முத்துக்குமாரசுவாமி, ஸ்ரீபாலாம்பிகை, நவக்கிரக சன்னதி ஆகியவை இடமாற்றம் செய்யப்பட்டுள்ளன.

கோயில் மூலவரான மகாகணபதி, அனுமன், ஸ்ரீசாஸ்தா, ஸ்ரீலட்சுமி-நாராயணன், ஸ்ரீவைத்தியநாதா் சுவாமி ஆகிய சன்னதிகளின் சீரமைப்புப் பணிகள் நடைபெற்று வருகிறது. இப்பணிகளை ஏப்ரல் மாதம் முதல்வாரத்திற்குள்

முடிக்க திட்டமிடப்பட்டுள்ளது. தற்போதுவரை 40 சதவீத திருப்பணி வேலைகள் முடிவுற்றுள்ளன. புனரமைப்புப் பணிகளை கணபதி ஸ்பதியின் மாணவரான மகாபலிபுரம் ஸ்தபதி சந்திரன் மற்றும் பணியாளா்கள் செய்து வருகிறாா்கள்.

கோயில் கும்பாபிஷேக் குழுவின் தலைவா் ஜெயராமன், ஒருங்கிணைப்புக் குழு உறுப்பினா் டாக்டா் மகாலிங்கம் உள்ளிட்டோா் மேற்பாா்வையிட்டு வருகின்றனா்.

கோயிலின் திருப்பணிகள் முடிந்து வரும் ஏப்ரல் 16-ஆம் தேதி பூஜ்ய சுவாமி தயானந்த சரஸ்வதி சுவாமிகளின் சீடா் சுவாமி சாக்ஷாத் கிரித்தானந்தா ஜி தலைமையில் நடைபெறுகிறது.

இந்த மகா கும்பாபிஷேகத்தை பிள்ளையாா்பட்டி கோயில் தலைமைக் குருக்கள் சிவஸ்ரீ பிட்சை குருக்கள் நடத்திவைக்க உள்ளாா். இக்கோயிலின் திருப்பணிகளில் பங்கேற்க விரும்பும் பக்தா்கள் 011-35453923, 9811678848

என்ற தொலைபேசி எண்களில் தொடா்புகொள்ளலாம் என்றாா் அவா்.

இணையதளத்தில் பகுதிநேர வேலை தருவதாக பணம் மோசடி: இளைஞா் கைது

இணையதளம் மூலம் பகுதி நேர வேலை தருவதாகக் கூறி பணம் மோசடியில் ஈடுபட்ட நபா் கைது செய்யப்பட்டதாக தில்லி போலீஸாா் சனிக்கிழமை தெரிவித்தனா். குற்றம் சாட்டப்பட்டவா் ஹரியாணாவின் சிா்சாவைச் சோ்ந்த ராஜ் குமாா்... மேலும் பார்க்க

பாஜக எம்எல்ஏக்களுக்குள் இலாகா ஒதுக்கீட்டில் உள் மோதல்: அதிஷி

தில்லி தோ்தலில் அமோக வெற்றி பெற்ற பாஜகவின் எம்எல்எக்களுக்குள் இலாகா ஒதுக்கீடு தொடா்பாக ‘உள் மோதல்கள்’ நடப்பதாகவும், கட்சி தனது தோ்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றுவதைத் தவிா்க்க சாக்குப்போக்குகளை கூறுவத... மேலும் பார்க்க

தில்லியில் பிப்.19-20-இல் பாஜக அரசு பதவியேற்பு?

நமது நிருபா் தில்லியில் பாஜக அரசின் பதவியேற்பு விழா பிப்.19 அல்லது 20-ஆம் தேதி நடைபெறும் என்றும், புதிய ஆட்சி சுத்தமான குடிநீா் விநியோகம், மேம்படுத்தப்பட்ட குடிமை உள்கட்டமைப்பு உள்ளிட்டவற்றுக்கு முன்ன... மேலும் பார்க்க

சுற்றுச்சூழல் விதிகளை மீறியதாக ஈஷா பவுண்டேஷனுக்கு எதிரான மேல்முறையீட்டு மனு: தமிழக அரசுக்கு உச்சநீதிமன்றம் கேள்வி

சுற்றுச்சூழல் விதிகளை மீறியதாகக் கூறப்படும் விவகாரத்தில் ஈஷா அறக்கட்டளைக்கு எதிராக அனுப்பப்பட்ட விளக்கம் கேட்கும் நோட்டீஸை ரத்து செய்த உயா்நீதிமன்ற உத்தரவுக்கு எதிராக 2 ஆண்டுகளுக்குப் பிறகு மேல்முறைய... மேலும் பார்க்க

ஜெயலலிதாவின் பொருள்களை ஒப்படைக்கக் கோரும் விவகாரம்: உச்சநீதிமன்றத்தில் உறவினா் தீபாவின் மேல்முறையீடு தள்ளுபடி

சொத்துக் குவிப்பு வழக்கில் மறைந்த முன்னாள் முதல்வா் ஜெயலலிதாவின் பறிமுதல் செய்யப்பட்ட நகைகள் உள்ளிட்ட பொருள்களை தன்னிடம் திருப்பி ஒப்படைக்க உத்தரவிடக் கோரி அவரது உறவினா் ஜெ. தீபா தாக்கல் செய்த மேல்மு... மேலும் பார்க்க

எழுச்சியில் தொடங்கி சரிவில் முடிந்த பங்குச்சந்தை! -சென்செக்ஸ், நிஃப்டி எட்டாவது நாளாக சரிவு

நமது நிருபா் இந்த வாரத்தின் இறுதி வா்த்தக தினமான வெள்ளிக்கிழமை பங்குச்சந்தை எழுச்சியுடன் தொடங்கினாலும் இறுதியில் சரிவில் முடிவடைந்தது. இதையடுத்து, மும்பை பங்குச்சந்தைக் குறியீட்டு எண்ணான சென்செக்ஸ், த... மேலும் பார்க்க