செய்திகள் :

மரத்தடியில் உறங்கிய வியாபாரி; சாக்கடை கழிவை கொட்டிய மாநகராட்சி ஊழியர்கள்... உயிரிழந்த சோகம்

post image

உத்தரப்பிரதேச மாநிலம் பரேலியைச் சேர்ந்தவர் சுனில் குமார்(45). இவர் காய்கறி வியாபாரம் செய்து வந்துள்ளார்.

இவர் கடுமையான வெயில் காரணமாக அங்கு சாலையோரம் இருந்த மரத்திற்கு அடியில் ஓய்வெடுக்க படுத்தார். அப்படியே உறங்கிவிட்டார்.

அந்நேரம் மாநகராட்சி ஊழியர்கள் சாக்கடையை தூர்வாரிய கழிவை டிராக்டரில் அங்கு கொண்டு வந்தனர். அவர்கள் மரத்திற்கு அடியில் சுனில் குமார் உறங்கிக்கொண்டிருப்பதை பார்க்காமல் அவர் மீது சாக்கடை கழிவை தட்டிவிட்டு சென்றுவிட்டனர்.

சடலம்

நீண்ட நேரம் கழித்துதான் அவர் மீது சாக்கடை கழிவு போடப்பட்டு இருப்பது உறவினர்களுக்கு தெரிய வந்தது. உடனே அவரது உறவினர்கள் சுனில் குமாரை மீட்டு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால் அதற்குள் சுனில் குமார் உயிரிழந்து விட்டார். மாநகராட்சி ஊழியர்களின் அலட்சியத்தால் பரிதாபமாக சுனில் குமார் இறந்து போனார்.

அவர் உறங்கிக்கொண்டிருந்த இடம் சாக்கடை கழிவை போடுவதற்காக ஒதுக்கப்பட்ட இடம் கிடையாது. அப்படி இருந்தும் மாநகராட்சி ஊழியர்கள் அந்த இடத்தில் சாக்கடை கழிவுகளை போட்டு சுனில் குமாரை உயிரோடு சாகடித்துள்ளதாக அவரின் தந்தை கிர்வார் சிங் குற்றம் சாட்டியுள்ளார்.

இது குறித்து கிர்வார் சிங் போலீஸில் புகார் செய்தார். அதன் அடிப்படையில் போலீஸார் மாநகராட்சி ஒப்பந்ததாரர் சாஸ்திரி மீது வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

மாநகராட்சி ஊழியர்கள் கவனக்குறைவாக செயல்பட்டனரா என்பதை தெரிந்து கொள்ள அப்பகுதியில் பொருத்தப்பட்டுள்ள கண்காணிப்பு கேமராவை ஆய்வு செய்து வருவதாக போலீஸார் தெரிவித்தனர். முதல்கட்ட விசாரணையில் சுனில் குமார் மது அருந்திவிட்டு குடிபோதையில் மரத்திற்கு அடியில் உறங்கியதாக தெரியவந்துள்ளது.

ஓடும் பேருந்தில் நெஞ்சு வலி; ஸ்டியரிங்கில் சாய்ந்த ஓட்டுநர்; நொடிகளில் பயணிகளை காப்பாற்றிய நடத்துனர்

ஓடிக்கொண்டிருந்த தனியார் பேருந்தில் ஓட்டுநருக்கு திடீர் மாரடைப்பு ஏற்பட, சாதுரியமாகச் செயல்பட்டு கையால் பிரேக் பிடித்து பயணிகளின் உயிரைக் காப்பாற்றிய நடத்துனரின் செயல், கவனம் பெற்றிருக்கிறது.சம்பவம் ந... மேலும் பார்க்க

அதிமுக முன்னாள் அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் பேத்தி விபத்தில் பலி - ஊட்டி மலைப்பாதையில் கோரம்

மதுரை ஆரப்பாளையம் பகுதியைச் சேர்ந்தவர் திவ்ய பிரியா (29). இவர், அதிமுக முன்னாள் அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசனின், மகள் வழி பேத்தி ஆவார். திவ்யாவுக்கு திருமணமாகி கார்த்திக் (வயது 30) என்கிற கணவர் உள்ளா... மேலும் பார்க்க

தெலங்கானா: பிறந்த குழந்தை மீது போதையில் படுத்த தந்தை; பதறிப்போன தாய்; குழந்தைக்கு நேர்ந்த சோகம்

தெலங்கானா மாநிலம் நிர்மல் மாவட்டத்தில் உள்ள கானாபூர் அருகில் உள்ள சீமல்பல்லி என்ற இடத்தில் வசிப்பவர் சேகர்(22). கூலித்தொழிலாளியான சேகர் மனைவி சுஜாதாவிற்குக் கடந்த 28 நாட்களுக்கு முன்பு குழந்தை பிறந்தி... மேலும் பார்க்க

`சாலையில் 20 அடி குழி; விழுந்து தம்பதி உயிரிழப்பு' - ஆட்சியருக்கு மனித உரிமை ஆணையம் நோட்டீஸ்

திருப்பூர் மாவட்டம், தாராபுரத்தை அடுத்துள்ள சேர்வைக்காரன்பாளையம் கிராமத்தைச் சேர்ந்தவர் நாகராஜ் (42). பழவஞ்சிபாளையம் பகுதியில் உள்ள டாஸ்மாக் கடையில் விற்பனையாளராக வேலை செய்து வந்தார். நாகராஜ் மனைவி ஆன... மேலும் பார்க்க

ஆலங்கட்டி மழையால் சேதமடைந்த விமானம்; பயணிகள் அலறல்.. பாதுகாப்பாக தரையிறக்கிய விமானி

டெல்லியில் இருந்து 200-க்கும் மேற்பட்ட பயணிகளுடன் நேற்று ஸ்ரீநகருக்கு புறப்பட்டது 6E2142 என்ற இண்டிகோ விமானம். அந்த விமானத்திலிருந்து பயணிகளில் ஒருவர் வெளியிட்ட வீடியோ சமூக ஊடகத்தில் வைரலானது. அந்த வீ... மேலும் பார்க்க

சிவகங்கை பயங்கரம் : கல் குவாரியில் பாறை சரிந்து 5 பேர் உயிரிழப்பு; சோகத்தில் மக்கள்

சிங்கம்புணரி அருகே மல்லாக்கோட்டை பகுதியில் மேகா புளு மெட்டல் என்ற பெயரில் தனியாருக்கு சொந்தமான கல்குவாரி செயல்பட்டு வந்தது. இந்த குவாரியில் விதிமீறல்கள் நடப்பதாக ஏற்கனவே பல புகார்கள் எழுந்து வந்துள்ளத... மேலும் பார்க்க