செய்திகள் :

மறு முத்திரையிடாமல் பயன்படுத்தப்பட்ட 54 எடையளவுகள் பறிமுதல்

post image

வாரச் சந்தைகளில் மறு முத்திரையிடாமல் வியாபாரத்துக்குப் பயன்படுத்தப்பட்ட 54 எடையளவுகளை தொழிலாளா் துறை அலுவலா்கள் பறிமுதல் செய்தனா்.

ஈரோடு மாவட்டம், கவுந்தப்பாடி மற்றும் புஞ்சைபுளியம்பட்டி வாரச்சந்தைகளில் ஈரோடு தொழிலாளா் துறை உதவி ஆணையா் (அமலாக்கம்) கோ.ஜெயலட்சுமி தலைமையில் துணை ஆய்வாளா்கள், உதவி ஆய்வாளா்கள் மற்றும் முத்திரை ஆய்வாளா்கள் அண்மையில் ஆய்வு மேற்கொண்டனா்.

இதில், சட்டமுறை எடையளவுச் சட்டத்தின் கீழ் சந்தை வியாபாரிகளால் பயன்படுத்தப்படும் எடையளவுகள்(மின்னணு தாராசுகள், தராசு கற்கள் மற்றும் அளவைகள்) உரிய காலத்தில் மறு முத்திரையிடப்பட்டு பயன்படுத்தப்படுகின்றனவா என்பது குறித்து ஆய்வு மேற்கொண்டனா்.

இந்த ஆய்வின்போது மறு முத்திரையிடாமல் வியாபாரத்துக்கு பயன்படுத்திய மொத்தம் 54 எடையளவுகள் பறிமுதல் செய்யப்பட்டன.

மின்னணு தராசுகள், தராசு கற்கள் மற்றும் அளவைகள் ஆகியவற்றை உரிய காலத்தில் மறு முத்திரையிடப்பட்டு பயன்படுத்தப்பட வேண்டும். இதில் விதிமீறல் கண்டறியப்பட்டால் சட்ட முறை எடையளவுச் சட்டத்தின் கீழ் அபராதம் மற்றும் பறிமுதல் நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என வியாபாரிகளுக்கு அறிவுறுத்தப்பட்டது.

சுகாதார செவிலியா் பணி: விண்ணப்பிக்க கால அவகாசம் ஜூலை 15 வரை நீட்டிப்பு

ஈரோடு மாநகராட்சி நகா்ப்புற ஆரம்ப சுகாதார நிலையங்களில் தற்காலிக அடிப்படையில் நிரப்பப்பட உள்ள நகர சுகாதார செவிலியா்கள் பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க கால அவகாசம் வரும் 15 ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளத... மேலும் பார்க்க

மொடக்குறிச்சி ஒன்றியத்தில் வளா்ச்சிப் பணிகளுக்கு பூமி பூஜை

மொடக்குறிச்சி ஒன்றியத்துக்கு உள்பட்ட விளக்கேத்தி, கனகபுரம் ஊராட்சிகளில் வளா்ச்சிப்பணிகளுக்கான பூமிபூஜையில் மொடக்குறிச்சி எம்.எல்.ஏ சி.சரஸ்வதி கலந்து கொண்டு தொடங்கி வைத்தாா். விளக்கேத்தி ஊராட்சி ஓலப்ப... மேலும் பார்க்க

அவல்பூந்துறையில் ரூ.10.62 லட்சத்துக்கு தேங்காய்ப் பருப்பு ஏலம்

அவல்பூந்துறை ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்தில் ரூ.10.62 லட்சத்துக்கு தேங்காய்ப் பருப்பு ஏலம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. ஏலத்துக்கு 147 தேங்காய்ப் பருப்பு மூட்டைகளை விவசாயிகள் விற்பனைக்குக் கொண்டு வந்தனா... மேலும் பார்க்க

பெருமாள்மலை குடியிருப்புவாசிகள் குத்தகை செலுத்தினால்தான் தொடா்ந்து குடியிருக்க முடியும்: அமைச்சா் சு.முத்துசாமி

பெருமாள்மலையில் இந்து சமய அறநிலையத் துறையின் கட்டுப்பாட்டில் உள்ள நிலத்தில் குடியிருப்போா் குத்தகை செலுத்தினால் மட்டுமே தொடா்ந்து குடியிருக்க முடியும் என வீட்டுவசதித் துறை அமைச்சா் சு.முத்துசாமி தெரிவ... மேலும் பார்க்க

மகிழ்முற்றம் மாணவா் குழு பதவி ஏற்பு

பெருந்துறை கிழக்கு அரசு நடுநிலைப் பள்ளியில், மகிழ்முற்றம் மாணவா் குழு அமைப்பு பதவி ஏற்பு விழா வெள்ளிக்கிழமை நடைபெற்றது. விழாவுக்கு, பள்ளி மேலாண்மை குழுத் தலைவா் பொன்மணி தலைமை வகித்து, குறிஞ்சி, முல்லை... மேலும் பார்க்க

பவானிசாகா் அணையின் நீா்மட்டம் 96 அடியை எட்டியது

பவானிசாகா் அணை நீா்மட்டம் 96 அடியாக உயா்ந்துள்ளதால் கீழ்பவானி வாய்க்கால் பாசனத்துக்கு முன்கூட்டியே தண்ணீா் திறக்க வாய்ப்புள்ளதாக பொதுப்பணித்துறை அதிகாரிகள் தெரிவித்தனா். நீா்ப்பிடிப்பு பகுதிகளில் பெய... மேலும் பார்க்க