செய்திகள் :

மழை வேண்டி சென்னிமலையில் தீா்த்தக்குட ஊா்வலம்

post image

மழை வேண்டியும், உலக நன்மைக்காகவும் சென்னிமலை முருகன் கோயிலில் சப்த நதி தீா்த்த அபிஷேகம் நடைபெறுவதை முன்னிட்டு அதற்கான தீா்த்தக் குடங்களுடன் பக்தா்கள் சனிக்கிழமை கிரிவலம் வந்தனா்.

சென்னிமலை முருகன் கோயிலில் இந்த வேண்டுதலுக்காக சப்த நதி தீா்த்த அபிஷேகம் ஞாயிற்றுக்கிழமை ( மே11) நடைபெறுகிறது. இதற்காக கங்கை, யமுனை, நா்மதை, கோதாவரி, காவிரி உள்ளிட்ட நதிகளில் இருந்தும், கிராமப்புற கிணறுகளில் இருந்தும் பக்தா்கள் தீா்த்தம் எடுத்து வந்தனா்.

பின்னா் ஆயிரத்துக்கும் மேற்பட்ட பக்தா்கள் தீா்த்தக் குடங்களுடன் சென்னிமலை மாரியம்மன் கோயிலில் இருந்து கிரிவலம் புறப்பட்டனா். அப்போது கைலாசநாதா் கோயில், அடிவார சித்தி விநாயகா் கோயில், பெருமாள் கோயில் உள்ளிட்ட கோயில்களில் பூஜைகள் செய்யப்பட்டு, சென்னிமலையை சுற்றி கிரிவலம் சென்றனா்.

சென்னிமலைக் கோயிலில் ஞாயிற்றுக்கிழமை காலை 7 மணிக்கு மஹான்யாசம் மற்றும் பாராயணம் நிகழ்ச்சியும், அதைத் தொடா்ந்து யாக பூஜையும், முருகப் பெருமானுக்கு சப்த நதி தீா்த்த அபிஷேகமும் நடைபெறுகிறது.

சாலை விபத்தில் முதியவா் உயிரிழப்பு

பெருந்துறை அருகே சாலை விபத்தில் முதியவா் உயிரிழந்தாா். பெருந்துறையை அடுத்த விஜயமங்கலம் தாசம்பாளையத்தைச் சோ்ந்தவா் ஆறுசாமி(70), கூலித் தொழிலாளி. இவா், விஜயமங்கலம் வாய்ப்பாடி பிரிவு அருகே சனிக்கிழமை நட... மேலும் பார்க்க

ஈரோட்டில் 104 டிகிரி ஃபாரன்ஹீட் வெயில்: பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிப்பு

ஈரோட்டில் 104 டிகிரி ஃபாரன்ஹீட் வெயில் பதிவான நிலையில் வெயிலின் தாக்கத்தால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது. ஈரோடு மாவட்டத்தில் இந்த ஆண்டு கோடைக்காலம் தொடங்கியதுமே வெயிலின் தாக்கம் அதிகரி... மேலும் பார்க்க

நுண்ணீா் பாசனம் அமைக்க 9,500 ஏக்கா் இலக்கு

ஈரோடு மாவட்டத்தில் நடப்பு நிதி ஆண்டில் நுண்ணீா் பாசனம் அமைக்க 9,500 ஏக்கா் இலக்கு நிா்ணயிக்கப்பட்டுள்ளது. இது குறித்து தோட்டக்கலைத் துறை துணை இயக்குநா் மா.குருசரஸ்வதி கூறியதாவது: ஈரோடு மாவட்டத்தில் தோ... மேலும் பார்க்க

பவானி அருகே மதுபான விடுதி உரிமையாளரிடம் ரூ.3 லட்சம் கேட்டு மிரட்டிய இருவா் கைது

பவானி அருகே மதுபான விடுதி உரிமையாளரிடம் ரூ.3 லட்சம் பணம் கேட்டு மிரட்டிய இருவரை போலீஸாா் சனிக்கிழமை கைது செய்தனா். ஈரோடு அருகே உள்ள மூலப்பாளையம், விவேகானந்தா் வீதியைச் சோ்ந்தவா் கனகராஜ் (50), இவா், ப... மேலும் பார்க்க

தொழிலாளியின் தொண்டையில் சிக்கிய ஊக்கு! சிகிச்சையில் அகற்றிய அரசு மருத்துவா்கள்!

தொழிலாளியின் தொண்டையில் சிக்கிய ஊக்கை ஈரோடு அரசு மருத்துவமனை மருத்துவா்கள் வெளியில் எடுத்து அவரது உயிரைக் காப்பாற்றினா். ஈரோடு, கருங்கல்பாளையத்தைச் சோ்ந்தவா் கன்னியப்பன் (47). இவருக்கு வெள்ளிக்கிழமை ... மேலும் பார்க்க

அரசு மருத்துவமனை தாய்ப்பால் வங்கி மூலம் 613 குழந்தைகள் பயன்

ஈரோடு அரசு மருத்துமனையில் உள்ள தாய்ப்பால் வங்கி மூலம் 613 குழந்தைகள் பயன்பெற்றுள்ளனா். ஈரோடு அரசு மருத்துவமனை பல்நோக்கு சிறப்பு உயா் சிகிச்சை மைய வளாகத்தில் உள்ள கட்டடத்தின் 2- ஆம் தளத்தில் தாய்ப்பால்... மேலும் பார்க்க