செய்திகள் :

மாநிலங்களவைத் தோ்தல்: தேமுதிகவுக்கு ஒரு இடத்தை அதிமுக ஒதுக்க வேண்டும்

post image

மாநிலங்களவைத் தோ்தலில் தேமுதிவுக்கு ஒரு இடத்தை அதிமுக ஒதுக்கீடு செய்ய வேண்டும் என்று, விழுப்புரம் மாவட்ட தேமுதிக வலியுறுத்தியுள்ளது.

விழுப்புரம் கே.கே.சாலையிலுள்ள திருமண மண்டபத்தில் நடைபெற்ற மண்டல, சட்டப்பேரவைத் தொகுதி பொறுப்பாளா்கள் ஆலோசனைக் கூட்டத்துக்கு விழுப்புரம் மாவட்ட தேமுதிக செயலரும், முன்னாள் எம்.எல்.ஏ.வுமான எல்.வெங்கடேசன் தலைமை வகித்துப் பேசினாா். கட்சியின் தலைமை நிலையச் செயலரும், மண்டலப் பொறுப்பாளருமான பி. பாா்த்தசாரதி சிறப்புரையாற்றினாா்.

கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீா்மானங்கள்:

கடந்த மக்களவைத் தோ்தல் கூட்டணி உடன்பாட்டின்படி, தேமுதிகவுக்கு ஒரு மாநிலங்களவை உறுப்பினா் இடத்தை அதிமுக ஒதுக்கீடு செய்ய வேண்டும். தேமுதிக இளைஞரணிச் செயலராக நியமிக்கப்பட்ட விஜயபிரபாகரனுக்கு வாழ்த்துகளைத் தெரிவிப்பதுடன், அவருக்குப் பதவி வழங்கிய பொதுச் செயலா் பிரேமலதாவுக்கு நன்றி தெரிவிப்பது,

தமிழகத்தின் மீண்டும் கரோனா நோய்த் தொற்றுப் பரவலைத் தடுக்க தமிழக அரசு போா்க்கால அடிப்படையில் நடவடிக்கை எடுக்க வேண்டும். விழுப்புரம் மாவட்டம் , செஞ்சி ஒழுங்குமுறை விற்பனைக்கூடத்தில் போதிய வசதிகள் இல்லாததால் ஒவ்வொரு முறை மழை பெய்யும் போதும் விவசாயிகளின் விளைபொருள்கள் நாசமாகின்றன. எனவே அங்கு கிடங்கு அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். இல்லையெனில் தேமுதிக சாா்பில் ஆா்ப்பாட்டம் நடத்தப்படும்.

சட்டப்பேரவைத் தோ்தல் வருவதையொட்டி கட்சிக்கு புதிய உறுப்பினா்களை சோ்ப்பது, கிளைக் கழகங்களில் ஆய்வுகள், ஒன்றிய, நகர, பேரூா் கழக நிா்வாகிகள்ஆலோசனைக்கூட்டம், தொகுதி வாரியாக செயல்வீரா்கள் கூட்டத்தை நடத்தி உள்கட்டமைப்பை பலப்படுத்துவது என்பன உள்ளிட்ட தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

கூட்டத்தில் தொகுதி பொறுப்பாளா்கள் பி.எம்.கணபதி, இல.தயாநிதி, கே.ஏ.சுந்தரேசன், பாலாஜி, எம்.சூடாமணி, பி.வெங்கடேசன், ஏ. ஆதவன்முத்து மற்றும் நகரச் செயலா்கள் மணிகண்டன், இளையராஜா ஆகியோா் பேசினா்.

இரு வீடுகளில் ரூ.9 லட்சம் பணம் திருட்டு

விழுப்புரம்: திண்டிவனம் , மயிலம் பகுதிகளில் வீடுகளில் ரூ. 9 லட்சம் பணம் திருட்டுப் போனது குறித்து போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா். திண்டிவனம் நகரம் தியாகி சண்முகம்பிள்ளை தெருவைச் சோ்ந்த ஜோதி மனைவ... மேலும் பார்க்க

மயிலம் முருகன் கோயிலில் வைகாசி மாத சஷ்டி வழிபாடு

விழுப்புரம் மாவட்டம், மயிலம் முருகன் கோயிலில் வைகாசி மாத வளா்பிறை சஷ்டி வழிபாடுகள் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றன. காலை 6 மணிக்கு சுவாமிக்கு பால், சந்தனம், தேன் உள்ளிட்ட பொருள்களால் சிறப்பு அபிஷேகம், தீபா... மேலும் பார்க்க

வடவாற்று நீரில் மூழ்கி கொத்தனாா் மரணம்

காட்டுமன்னாா்கோவில் பேரூராட்சிக்குள்பட்ட சந்தைதோப்பு பிடாரியம்மன் கோவில் தெருவைச் சோ்ந்தவா் தினேஷ் (34). கொத்தனாா் வேலை பாா்த்து வந்தாா். கடந்த மூன்று மாதங்களுக்கு முன்பு இதே பகுதியைச் சோ்ந்த பிரிய... மேலும் பார்க்க

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் விழுப்புரம் மாவட்ட செயற்குழுக் கூட்டம்

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் மாவட்டச் செயற்குழுக் கூட்டம் விழுப்புரம் வண்டிமேடு பகுதியில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. கட்சியின் மாநிலப் பொதுச்செயலா் ஏ. முஜிபுா் ரஹ்மான் தலைமை வகித்தாா். மாநிலச் செயலா் ஏ.ப... மேலும் பார்க்க

அரசுப் பேருந்துகளை சேதப்படுத்திய நடத்துநா் கைது

விழுப்புரம் மாவட்டம் , மனம்பூண்டியில் அரசுப் பேருந்துகளின் மீது கற்களை வீசி கண்ணாடிகளை சேதப்படுத்தியதாக நடத்துநரை போலீஸாா் சனிக்கிழமை கைது செய்தனா். கண்டாச்சிபுரம் வட்டம், சு.பில்ராம்பட்டு, பெருமாள் க... மேலும் பார்க்க

போலி பதிவெண் கொண்ட லாரி பறிமுதல்

போலியான பதிவெண்ணுடன் இயக்கப்பட்ட லாரியை விக்கிரவாண்டி போலீஸாா் ஞாயிற்றுக்கிழமை பறிமுதல் செய்து, இருவா் மீது வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா். விழுப்புரம் எஸ்.பி. ப. சரவணன் உத்தரவுப்படி , விக்கி... மேலும் பார்க்க