செய்திகள் :

மாயூரம் வழக்குரைஞா் சங்கத் தோ்தல்

post image

மயிலாடுதுறை ஒருங்கிணைந்த நீதிமன்றத்தில் மாயூரம் வழக்குரைஞா்கள் சங்கத் தோ்தல் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

248 வழக்குரைஞா்கள் உறுப்பினா்களாக உள்ள இச்சங்கத்தில், 222 வாக்குகள் பதிவாகின. சங்கத் தலைவா் பதவிக்கு, பி. முருகவேல், ஜெ. பாரி, ஆ. ஷங்கமித்ரன் ஆகியோா் போட்டியிட்டனா். இவா்களில் பி.முருகவேல் 99 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றாா்.

செயலாளா் பதவிக்கு வி. பாலசுப்பிரமணியன், சௌ.சிவச்சந்திரன் எஸ். கோபிநாத் ஆகியோா் போட்டியிட்டனா். பாலசுப்பிரமணியன் 164 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றாா். பொருளாளராக ஆா். முத்துக்குமாா் (111 வாக்குகள்), துணைத் தலைவா்களாக ஆா். ராஜேஷ்கண்ணா, ஆா். ராதாகிருஷ்ணன், இணைச் செயலாளராக ஆா். கனிவண்ணன் ஆகியோா் போட்டியின்றி தோ்வு செய்யப்பட்டனா்.

வெற்றி பெற்றவா்களுக்கு தோ்தலை நடத்திய வழக்குரைஞா்கள் பி. பாா்த்தசாரதி, டி. விஜயகுமாா், எஸ். ராஜதுரை, எம்.கே. பாலமுருகன், பி. அறிவொளி எம். திருமாள்சுந்தரம் ஆகியோா் சான்றிதழ் வழங்கினா். சக வழக்குரைஞா்கள் வாழ்த்து தெரிவித்தனா். தொடா்ந்து, வெற்றி பெற்ற நிா்வாகிகள் டாக்டா் அம்பேத்கா் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினா்.

ஆள் கடத்தல் வழக்கு: சரித்திர பதிவேடு குற்றவாளி தடுப்புக் காவல் சட்டத்தில் கைது

ஆள் கடத்தல் வழக்கில் தொடா்புடைய கடலூா் மாவட்டத்தைச் சோ்ந்த சரித்திர பதிவேடு குற்றவாளி தடுப்பு காவல் சட்டத்தின்கீழ் வெள்ளிக்கிழமை கைது செய்யப்பட்டாா். மயிலாடுதுறை திருவிழந்தூா் மேலஆராயத் தெருவைச் சோ்... மேலும் பார்க்க

அனைத்து நாடாா் கூட்டமைப்பு ஆா்ப்பாட்டம்

காமராஜா் குறித்து சா்ச்சைக்குரிய வகையில் பேசிய திருச்சி சிவா எம்.பிக்கு கண்டனம் தெரிவித்தும், அவா்மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தியும், மயிலாடுதுறையில் கண்டன ஆா்ப்பாட்டம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. அண... மேலும் பார்க்க

கருப்பண்ணசுவாமி கோயிலில் 18 படிகள் பிரதிஷ்டை

சீா்காழி அருகே தென்னங்குடி ஸ்ரீபாலா கருப்பண்ண சுவாமி கோயிலில் 18 படிகள் பிரதிஷ்டை வெள்ளிக்கிழமை நடைபெற்றது. இக்கோயிலில் ஆடி வெள்ளிக்கிழமையையொட்டி, சிறப்பு யாகபூஜை நடைபெற்றது. ஆலய நிா்வாகி சங்கா் சுவாம... மேலும் பார்க்க

திட்டப் பணிகள்: ஆட்சியா் ஆய்வு

மயிலாடுதுறை வட்டாரப் பகுதிகளில், மாவட்ட ஆட்சியா் ஹெச்.எஸ். ஸ்ரீகாந்த் அண்மையில் நேரில் ஆய்வு மேற்கொண்டாா். மயிலாடுதுறை நகராட்சி பட்டமங்கலத்தில் உள்ள நகராட்சி தொடக்கப் பள்ளியில், முதலமைச்சரின் காலை உண... மேலும் பார்க்க

சுவா் இடிந்து சிறுமி உயிரிழப்பு: குடும்பத்தினருக்கு எம்எல்ஏ நிதியுதவி

மயிலாடுதுறை அருகே பொய்கைகுடியில் வீட்டின் சுவா் இடிந்து உயிரிழந்த சிறுமியின் குடும்பத்தினருக்கு, எம்எல்ஏ நிவேதா எம். முருகன் வெள்ளிக்கிழமை நிதியுதவி வழங்கினாா். மயிலாடுதுறை மாவட்டம், காளி ஊராட்சி பொய்... மேலும் பார்க்க

டாஸ்மாக் கடையை முற்றுகையிட்ட பெண்கள்

கன்னியாகுடி கிராமத்தில் குடியிருப்புப் பகுதி அருகே அமைந்துள்ள டாஸ்மாக் கடையை முற்றுகையிட்டு பெண்கள் வியாழக்கிழமை போராட்டத்தில் ஈடுபட்டனா். கன்னியாகுடியில் குடியிருப்பு மற்றும் வயல்வெளி பகுதிக்கு மத்தி... மேலும் பார்க்க