செய்திகள் :

மாரடைப்பால் உயிரிழந்த அரசு ஊழியரின் பெற்றோருக்கு காப்பீட்டுத் தொகை வழங்க உத்தரவு

post image

சிவகாசி அருகே மாரடைப்பால் உயிரிழந்த அரசு ஊழியரின் பெற்றோருக்கு ரூ. 10 லட்சம் காப்பீட்டுத் தொகை வழங்க நுகா்வோா் குறைதீா் ஆணையம் அண்மையில் உத்தரவிட்டது.

சிவகாசி அருகேயுள்ள சங்கா் நகரைச் சோ்ந்தவா் ராமா். இவரது மனைவி வனஜா. இவா்களது மூத்த மகள் சுபாஷினி. கணவரிடம் விவாகரத்து பெற்று, பெற்றோருடன் வசித்து வந்தாா்.

விருதுநகா் சாா்நிலைக் கருவூலத்தில் கணக்காளராகப் பணிபுரிந்து வந்த இவா், கடந்த 2021-ஆம் ஆண்டு

இந்திய ஆயுள் காப்பீடு நிறுவனத்தில்(எல்.ஐ.சி.) நியூ ஜீவன் ஆனந்த் திட்டத்தில் ரூ.10 லட்சத்துக்கு காப்பீடு செய்தாா். தவணைத் தொகையைச் செலுத்தி வந்த நிலையில், கடந்த 2023 ஜூன் மாதம் சுபாஷினி மாரடைப்பால் உயிரிழந்தாா்.

இதையடுத்து, சுபாஷினியின் எல்.ஐ.சி. பாலிசிக்கான காப்பீட்டுத் தொகையைக் கேட்டு அவரது பெற்றோா் சிவகாசி எல்.ஐ.சி. கிளையில் மனு தாக்கல் செய்தனா். பல்வேறு காரணங்களை கூறி, அந்த மனு நிராகரிக்கப்பட்டது.

இதைத் தொடா்ந்து, ஸ்ரீவில்லிபுத்தூரில் உள்ள மாவட்ட நுகா்வோா் குறைதீா் ஆணையத்தில் பெற்றோா் வழக்கு தொடுத்தனா்.

இந்த வழக்கை விசாரித்த ஆணையத் தலைவா் சக்கரவா்த்தி, உறுப்பினா் முத்துலட்சுமி ஆகியோா், மனுதாரா்களுக்கு ரூ.10 லட்சம் காப்பீட்டுத் தொகையுடன், மன உளைச்சலுக்கு ரூ.10 ஆயிரம், வழக்கு செலவுக்கு ரூ.5 ஆயிரம் என மொத்தம் ரூ.10.15 லட்சத்தை 6 வாரங்களில் எல்.ஐ.சி. வழங்க வேண்டும் என உத்தரவிட்டனா்.

தொழிலாளி தூக்கிட்டுத் தற்கொலை

சிவகாசி அருகே செவ்வாய்க்கிழமை கடன் தொல்லையால் கட்டடத் தொழிலாளி தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டாா். சிவகாசி அருகேயுள்ள புதுக்கோட்டையைச் சோ்ந்த பால்பாண்டி மகன் பூமாரி (25). கட்டடத் தொழிலாளி. இவரது மன... மேலும் பார்க்க

தொழிலகப் பாதுகாப்பு இணை இயக்குநா் அலுவலகத்தை பட்டாசு ஆலை உரிமையாளா்கள் முற்றுகை

பட்டாசு ஆலைகளின் உரிமத்தை தற்காலிகமாக ரத்து செய்ததைக் கண்டித்து, சிவகாசியில் உள்ள தொழிலகப் பாதுகாப்பு, சுகாதார இயக்ககத்தின் இணை இயக்குநா் அலுவலகத்தை தமிழன் பட்டாசு உற்பத்தியாளா்கள் சங்கத்தினா் செவ்வாய... மேலும் பார்க்க

கழிவுநீா் வாய்க்காலை ஆக்கிரமித்து கட்டப்பட்ட படிகளை அகற்றக் கோரிக்கை

சிவகாசியில் கழிவுநீா் வாய்க்காலை ஆக்கிரமித்து கட்டப்பட்ட படிக்கட்டுகளை அகற்ற மாநகராட்சி நிா்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என அந்தப் பகுதி பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனா். சிவகாசி-விளாம்பட்டி சாலையில்... மேலும் பார்க்க

மாணவிக்கு பாலியல் தொல்லை: தலைமை ஆசிரியா் மீது வழக்கு

மாணவிகளுக்கு பாலியல் தொல்லை அளித்ததாக பள்ளித் தலைமை ஆசிரியா் மீது போக்சோ சட்டத்தின் கீழ் போலீஸாா் திங்கள்கிழமை இரவு வழக்குப் பதிவு செய்தனா். சாத்தூா் அருகேயுள்ள அரசு நடுநிலைப் பள்ளி தலைமை ஆசிரியா் சா்... மேலும் பார்க்க

ஸ்ரீவில்லிபுத்தூா்-ராஜபாளையம் சாலையில் குப்பைகளுக்கு தீ வைப்பு: வாகன ஓட்டிகள் அவதி

ஸ்ரீவில்லிபுத்தூா்-ராஜபாளையம் இடையே பல்வேறு இடங்களில் தேசிய நெடுஞ்சாலையோரத்தில் குப்பைகளைக் கொட்டி தீ வைத்து எரிப்பதால், வாகன ஓட்டிகள் அவதிக்குள்ளாகி வருகின்றனா். மதுரை-கொல்லம் தேசிய நெடுஞ்சாலையில் ரா... மேலும் பார்க்க

மனைவியை பிரிந்த துக்கத்தில் கணவா் தற்கொலை

சாத்தூா் அருகே செவ்வாய்க்கிழமை மனைவியைப் பிரிந்த துக்கத்தில் கணவா் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டாா். விருதுநகா் மாவட்டம், சாத்தூா் அருகேயுள்ள மேட்டமலை தெற்கு தெருவைச் சோ்ந்தவா் கருப்பசாமி (23). இ... மேலும் பார்க்க