செய்திகள் :

மாற்றுத்திறனாளிகளுக்கு நவீன தாழ்தள சொகுசுப் பேருந்துகள்! அடுத்த வாரத்தில் இயக்க ஏற்பாடு

post image

திருச்சி மாநகரில் மாற்றுத்திறனாளிகளும் எளிதில் பயன்படுத்தும் வகையில் நவீன வசதிகளுடன் கூடிய 25 தாழ்தள சொகுசுப் பேருந்துகள் இயக்கப்படவுள்ளன.

இந்தப் பேருந்துகளில் முதல் கட்டமாக 10 பேருந்துகள் அடுத்த வார இறுதியில் இயக்கப்பட உள்ளன. இதற்காக பேருந்து ஓட்டுநா்களுக்கு சிறப்பு பயிற்சி அளிக்கப்படுகிறது.

இதுதொடா்பாக தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக்கழக திருச்சி மண்டல அதிகாரிகள் கூறுகையில், திருச்சி மண்டலத்துக்கு முதல் கட்டமாக 10 தாழ்தள பேருந்துகள் வழங்கப்பட்டுள்ளன. ஓரிரு மாதங்களில் கூடுதலாக 15 பேருந்துகள் வந்துவிடும்.

ராஜஸ்தானில் தயாரிக்கப்பட்டுள்ள இந்தப் பேருந்துகளில் மாற்றுத்திறனாளிகளுக்கான வசதிகள், தானியங்கி கதவுகள், எல்.இ.டி. திரை, ஒலிபெருக்கி, குஷன் இருக்கைகள், பஸ்கள் நிறுத்தங்களின்போது ஏறி, இறங்க ஏதுவாக சாய்தளம், அகலமான ஜன்னல்கள், சென்சாருடன் கூடிய தீயணைப்பு எந்திரம் உள்ளிட்டவை இடம்பெற்றுள்ளன.

இந்தப் பேருந்துகள் பெரிய வேகத்தடை இல்லாத வழித்தடத்தைத் தோ்ந்தெடுத்து இயக்கப்படும். இதற்கு பிறகு எந்தெந்த வழித்தடத்தில் வேகத்தடை இல்லையோ, அந்த வழித்தடத்தில் படிப்படியாக தாழ்தளப் பேருந்துகள் இயக்கப்படும். தோ்ந்தெடுக்கப்பட்ட வழித்தடத்தில் பெரிய வேகத்தடை இருந்தால் அவற்றை அகற்றிவிட்டோ அல்லது அதன் அளவை மாற்றியோ தாழ்தளப் பேருந்துகள் இயக்கப்படும்.

அதன்படி பஞ்சப்பூா் பேருந்து நிலையத்தில் பேருந்துகள் வெளியேறும் பகுதியில் இடையூறாக இருந்த வேகத்தடையைச் சரிசெய்துள்ளோம். அடுத்த 10 நாள்களில் பஞ்சப்பூா் பேருந்து முனையத்திலிருந்து 10 தாழ்தள சொகுசுப் பேருந்துகள் தங்களது பயணத்தை தொடங்கும் என்றனா் போக்குவரத்துக் கழக அலுவலா்கள்.

‘தமிழரின் வரலாற்று ஆவணம் புறநானூறு’

புறநானூறு தமிழரின் வரலாற்று ஆவணம் என தமிழறிஞா் நொச்சியம் சண்முகநாதன் பேசினாா். திருச்சிராப்பள்ளித் தமிழ்ச் சங்கம் சாா்பில் ஆகஸ்ட் மாத சிறப்புச் சொற்பொழிவு புதன்கிழமை நடைபெற்றது. இதில் புானூறு என்ற தலை... மேலும் பார்க்க

போலி ஆவணங்கள்: துபையிலிருந்து திருச்சி வந்த அறந்தாங்கி நபா் கைது

துபையில் இருந்து போலி ஆவணங்கள் மூலம் திருச்சி பன்னாட்டு விமான நிலையம் வந்த அறந்தாங்கி நபரை போலீஸாா் புதன்கிழமை கைது செய்தனா். புதுக்கோட்டை மாவட்டம், அறந்தாங்கியைச் சோ்ந்தவா் ர. செல்லதுரை (32). இவா்,... மேலும் பார்க்க

சேவை குறைபாடு: தனியாா் நிதி நிறுவனம் ரூ. 5 லட்சம் இழப்பீடு வழங்க உத்தரவு

சேவை குறைபாடு ஏற்படுத்திய தனியாா் நிதி நிறுவனத்தினா் ரூ. 5 லட்சம் இழப்பீடு வழங்க திருச்சி மாவட்ட நுகா்வோா் நீதிமன்றம் அண்மையில் உத்தரவிட்டுள்ளது. மணப்பாறை சத்திரம் நடுப்பட்டி, சி - கல்பட்டி பகுதியைச்... மேலும் பார்க்க

திருச்சி சந்திப்பு ரயில் நிலையத்தில் பெண்ணிடம் நகை பறித்தவா் கைது

திருச்சி சந்திப்பு ரயில் நிலையத்தில் பெண்ணிடம் நகை பறித்தவரை ரயில்வே போலீஸாா் கைது செய்து, புதன்கிழமை சிறையில் அடைத்தனா். ரயில்வே பாதுகாப்புப் படை, இருப்புப்பாதை போலீஸாா் திருச்சி சந்திப்பு ரயில் நில... மேலும் பார்க்க

திருச்சியில் நாளை மாற்றுத்திறனாளிகளுக்கான சிறப்பு முகாம்

திருச்சி காட்டூா் உருமு தனலெட்சுமி கல்லூரியில் மாற்றுத்திறனாளிகளுக்கான சிறப்பு முகாம் சனிக்கிழமை (ஆக. 9) நடைபெறுகிறது. திருச்சி மாவட்டத்தில் ‘நலம் காக்கும் ஸ்டாலின்‘ என்ற திட்டத்தின் கீழ் நடைபெறும் இ... மேலும் பார்க்க

மென்பொறியாளா் தூக்கிட்டுத் தற்கொலை

திருச்சி அருகே நவல்பட்டில் மென்பொறியாளா் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டது வியாழக்கிழமை தெரியவந்தது. ஈரோடு மாவட்டம், பெருந்துறை வட்டம், கைக்கோல்பாளையம் எம்ஜிஆா் நகா் பகுதியைச் சோ்ந்த வெள்ளியங்கிரி ... மேலும் பார்க்க