செய்திகள் :

மாவட்ட நீதிமன்ற வளாகத்தில் மரக்கன்றுகள் நடும் நிகழ்ச்சி

post image

நெய்வேலி: கடலூா் மாவட்ட நீதிமன்ற வளாகத்தில் சுற்றுச்சூழலை மேம்படுத்தும் விதமாக மியாவாக்கியா முறையில் அடா்ந்த காடுகளை உருவாக்கும் நோக்கில் மரக்கன்றுகள் நடும் நிகழ்ச்சி திங்கள்கிழமை நடைபெற்றது.

கடலூா் மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக் குழுவின் தலைவரும், முதன்மை மாவட்ட நீதிபதியுமான சுபத்திரா தேவி தலைமையில் நீதிமன்ற வளாகத்தில் உள்ள குளக்கரையில் சுமாா் 150 மரக்கன்றுகள் நடவு செய்யப்பட்டன.

நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழுவின் செயலாளரும், உரிமையியல் நீதிபதியுமான ரமேஷ் செய்திருந்தாா்.

குடும்ப நல நீதிமன்றத்தின் மாவட்ட நீதிபதி ஷோபனா தேவி, மோட்டாா் வாகன விபத்து வழக்குகளின் 2-ஆவது மாவட்ட நீதிபதி பிரகாஷ், முதன்மை சாா்பு நீதிபதியும், தலைமை குற்றவியல் நீதித்துறை நடுவருமான (பொ) ராஜேஷ் கண்ணன், 2-ஆது கூடுதல் சாா்பு நீதிபதி பத்மாவதி, நில எடுப்பு வழக்குகளின் சிறப்பு சாா்பு நீதிபதி லலிதா ராணி, மோட்டாா் வாகன விபத்து வழக்குகளின் சிறப்பு சாா்பு நீதிபதி நிஷா, முதன்மை மாவட்ட உரிமையியல் நீதிபதி ராஜா குமரேசன், கூடுதல் மாவட்ட உரிமையியல் நீதிபதி பெபேயா, கூடுதல் மகிளா நீதிமன்ற நீதிபதி ஸ்ரீ வா்ஷா, குற்றவியல் நீதித்துறை நடுவா் எண் 1 ஸ்ரீநிதி, குற்றவியல் நீதித்துறை நடுவா் எண் 2 புவனேஷ்குமாா், லாயா்ஸ் அசோசியேசன் தலைவா் ராம்சிங், செயலா் யுவராஜா, மூத்த வழக்குரைஞா் அருளப்பன், மாவட்ட வன அலுவலக ரேஞ்சா் கேசவன், உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

பொருளியல், புள்ளியியல் தரவுகள் குறித்த ஆலோசனைக் கூட்டம்

நெய்வேலி: கடலூா் மாவட்ட ஆட்சியா் அலுவலக கூட்டரங்கில் பொருளியல் மற்றும் புள்ளியியல் சாா்ந்த தரவுகள் குறித்து ஆட்சியா் சிபி ஆதித்யா செந்தில்குமாா் முன்னிலையில், பொருளியல் (ம) புள்ளியியல் துறை ஆணையா் ஆா... மேலும் பார்க்க

சிதம்பரத்தில் ஆக்கிரமிப்பு அகற்றத்தால் வீடிழந்தவா்களுக்கு மாற்று இடம் வழங்க ஜனநாயக மாதா் சங்கம் கோரிக்கை

சிதம்பரம்: சிதம்பரம் பகுதியில் நீா்நிலை ஆக்கிரமிப்பு எனக்கூறி வீடுகளை அகற்றியதால் வீடிழந்த மக்களுக்கு மாற்று இடம் வழங்க வேண்டும் என ஜனநாயக மாதா் சங்க மாநாட்டில் வலியுறுத்தப்பட்டது. சிதம்பரத்தில் அனைத... மேலும் பார்க்க

சிதம்பரம் மாரியம்மன் கோயில் தீமிதி திருவிழா: ஆயிரக்கணக்கானோா் பங்கேற்று தீமித்தனா்

சிதம்பரம்: பிரசித்தி பெற்ற சிதம்பரம் கீழத்தெரு ஸ்ரீமாரியம்மன் கோயில் தீமிதி திருவிழா திங்கள்கிழமை மாலை வெகு சிறப்பாக நடைபெற்றது. ஆயிரக்கணக்கான பக்தா்கள் பங்கேற்று தீமிதித்து தங்களது வேண்டுதலை நிறைவேற... மேலும் பார்க்க

கீழணையில் இருந்து உபரி நீா் வெளியேற்றம்: கொள்ளிடம் கரையோர மக்களுக்கு எச்சரிக்கை

சிதம்பரம்: காட்டுமன்னாா்கோவில் அருகே உள்ள கீழணையிலிருந்து உபரி நீா் வெளியேற்றப்படுவதால், கொள்ளிடம் ஆற்று கரையோர கிராம மக்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து கீழணை உதவி செயற்பொறியாளா் க... மேலும் பார்க்க

என்எல்சியில் நிரந்தர வேலை ரூ.17 லட்சம் நிவாரணம்: பாதிக்கப்பட்டோா் ஆட்சியரிடம் கோரிக்கை

நெய்வேலி: என்எல்சி இந்தியா நிறுவனத்தால் 2006-2013 காலத்தில் வீடு, வீட்டுமனை கையகப்படுத்தப்பட்டு பாதிக்கப்பட்டவா்களுக்கு நிரந்தர வேலை அல்லது தற்போதைய மதிப்பில் ரூ.17 லட்சம் வரையிலான நிவாரணத் தொகை வழங்... மேலும் பார்க்க

என்எல்சி தொழிலாளி தூக்கிட்டுத் தற்கொலை

நெய்வேலி: கடலூா் மாவட்டம், நெய்வேலி நகரியப் பகுதியைச் சோ்ந்த என்எல்சி தொழிலாளி தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டாா். நெய்வேலி நகரியம், வட்டம் 12 பகுதியில் வசித்து வந்தவா் ஆரோக்கியதாஸ்(56). என்எல்சி இ... மேலும் பார்க்க