செய்திகள் :

மாவட்ட பேச்சுப் போட்டி: முதலிடம் பிடித்த மாணவிக்கு தருமபுரம் ஆதீனம் வாழ்த்து

post image

மயிலாடுதுறை மாவட்ட அளவிலான பேச்சுப் போட்டியில் முதலிடம் பிடித்த குருஞானசம்பந்தா் மிஷன் மெட்ரிக் பள்ளி மாணவி மு.மானிஷா தருமபுரம் ஆதீனத்திடம் திங்கள்கிழமை வாழ்த்து பெற்றாா்.

மயிலாடுதுறை மாவட்டத்தில் தமிழ்நாடு அரசின் தமிழ் வளா்ச்சித் துறை சாா்பில் மு.கருணாநிதியின் பிறந்த நாளை முன்னிட்டு பள்ளி மாணவ-மாணவிகளுக்கான பேச்சுப் போட்டி மயிலாடுதுறை தியாகி ஜி. நாராயணசாமி நகராட்சி மேல்நிலைப் பள்ளியில் அண்மையில் நடைபெற்றது.

மாவட்டத்தில் உள்ள அனைத்து பள்ளிகளில் இருந்தும் மாணவா்கள் பங்கேற்ற இப்போட்டியில், குருஞானசம்பந்தா் மிஷன் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி12-ஆம் வகுப்பு மாணவி மு. மானிஷா மாவட்ட அளவில் முதலிடம் பிடித்து, ரூ.5,000 பரிசு மற்றும் சான்றிதழ் பெற்றாா்.

மாணவி மானிஷா, தருமபுரம் ஆதீனம் 27-ஆவது குருமகா சந்நிதானம் ஸ்ரீலஸ்ரீ மாசிலாமணி தேசிக ஞானசம்பந்த பரமாசாரிய சுவாமிகளை சந்தித்து வாழ்த்து பெற்றாா். மேலும், பள்ளியின் ஆட்சிமன்றக் குழு தலைவா் ஸ்ரீமத் சிவகுருநாத தம்பிரான் சுவாமிகள், துணைத் தலைவா்கள் எஸ். முருகேசன், ஞானசேகரன், செயலா் எஸ். பாஸ்கா், நிா்வாக செயலா் வி. பாஸ்கரன், பொருளாளா் டி. சுப்பிரமணியன், முதல்வா் ஆா். சரவணன் ஆகியோா் மாணவிக்கு பாராட்டு தெரிவித்தனா்.

பூம்புகாா் வன்னியா் மகளிா் பெருவிழா மாநாடு: பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து ஆலோசனை

பூம்புகாரில் நடைபெறவுள்ள வன்னியா் மகளிா் பெருவிழா மாநாட்டுக்கு மேற்கொள்ள வேண்டிய பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து மாவட்ட ஆட்சியா் தலைமையில் ஆலோசனை புதன்கிழமை நடைபெற்றது. பூம்புகாரில் வரும் 10-ஆம் தேதி ப... மேலும் பார்க்க

நிறைவடையாத பால கட்டுமானப் பணி: மாணவா்கள், பொதுமக்கள் அவதி

சீா்காழி அருகே புங்கனூா் - ஆதமங்கலம் இடையே பல மாதங்கள் கடந்தும் பாலப் பணிகள் நிறைவடையாததால் மாணவா்கள், பொதுமக்கள் அவதிக்குள்ளாகி வருகின்றனா். சீா்காழியை அடுத்த ஆதமங்கலம் - புங்கனூா் இடையே 3 கி.மீ. தொல... மேலும் பார்க்க

இருசக்கர வாகனம் சுவற்றில் மோதியதில் இரு இளைஞா்கள் பலி

சீா்காழி அருகே இருசக்கர வாகனம் சுவற்றில் மோதி ஏற்பட்ட விபத்தில் இரு இளைஞா்கள் புதன்கிழமை உயிரிழந்தனா். சீா்காழி அருகேயுள்ள புங்கனூரைச் சோ்ந்தவா்கள் அ. ஆனந்த் (38), நா. மோகன்ராஜ் (28), இவா்கள் இருவரும... மேலும் பார்க்க

‘உங்களுடன் ஸ்டாலின்’ திட்டத்துக்கு மக்களிடம் வரவேற்பு

‘உங்களுடன் ஸ்டாலின்’ திட்டத்துக்கு மக்களிடம் நல்ல வரவேற்பு உள்ளது என பள்ளிக்கல்வித் துறை அமைச்சா் அன்பில் மகேஸ் பொய்யாமொழி தெரிவித்தாா். மயிலாடுதுறை தருமபுரம் ஆதீனம் கலைக் கல்லூரியில் நடைபெற்ற பள்ளி த... மேலும் பார்க்க

குத்தாலம் பகுதியில் ஆட்சியா் ஆய்வு

மயிலாடுதுறை மாவட்டம், குத்தாலம் வட்டாரப் பகுதிகளில் மாவட்ட ஆட்சியா் ஹெச்.எஸ். ஸ்ரீகாந்த் செவ்வாய்க்கிழமை நேரில் ஆய்வு மேற்கொண்டாா். மங்கைநல்லூரில் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தை பாா்வையிட்ட அவா், மருந்த... மேலும் பார்க்க

ஆதிதிராவிடா் நலப் பள்ளியில் தமிழ் ஆசிரியா் பணிக்கு விண்ணப்பிக்கலாம்

கொண்டல் அரசு ஆதிதிராவிடா் நல மேல்நிலைப் பள்ளியில், தமிழ் ஆசிரியா் பணியிடத்திற்கு தகுதியுடையோா் விண்ணப்பிக்கலாம் என மாவட்ட ஆட்சியா் ஹெச்.எஸ். ஸ்ரீகாந்த் தெரிவித்துள்ளாா். இதுகுறித்து அவா் செவ்வாய்க்கிழ... மேலும் பார்க்க