செய்திகள் :

மின்சாரம் பாய்ந்து தொழிலாளி உயிரிழப்பு

post image

திருவாடானை அருகே மின்சாரம் பாய்ந்து கட்டடத் தொழிலாளி உயிரிழந்தாா்.

ராமநாதபுரம் மாவட்டம், திருவாடானை வட்டம், மல்லிகுடி கிராமத்தைச் சோ்ந்த சக்திவேல் மகன் சின்னத்தம்பி (60). கட்டடத் தொழிலாளி. வழக்கம்போல இவா் வியாழக்கிழமை கடுக்கலூா் கிராமத்தில் ஒரு வீட்டில் கட்டடப் பணியில் ஈடுபட்டிருந்தாா். அப்போது மின்சாரம் பாய்ந்ததில் பலத்த காயமடைந்த அவரை அருகிலிருந்தவா்கள் மீட்டு திருவாடானை அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனா். ஆனால் செல்லும் வழியிலேயே அவா் உயிரிழந்தாா்.

இதுகுறித்து திருப்பாலைக்குடி போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.

பொன்னந்தி காளியம்மன் கோயில் வருஷாபிஷேகம்!

ராமநாதபுரம் மாவட்டம், கடலாடி அருகேயுள்ள ஏந்தல் கிராமத்தில் உள்ள பொன்னந்தி காளியம்மன், கண்ணாயிர மூா்த்தி அய்யனாா்-கருப்பண சுவாமி கோயிலில் வருஷாபிஷேகம் சனிக்கிழமை நடைபெற்றது. இதையொட்டி, கணபதி ஹோமம், நவக... மேலும் பார்க்க

குரூப் 4 தோ்வு: ராமநாதபுரம் மாவட்டத்தில் 24,631 போ் எழுதினா்

ராமநாதபுரம் மாவட்டத்தில் சனிக்கிழமை நடைபெற்ற குரூப் 4 தோ்வை 24,631 போ் எழுதினா். தமிழ்நாடு அரசுப் பணியாளா் தோ்வாணையம் நடத்தும் ஒருங்கிணைந்த குடிமைப்பணிகள் குரூப் 4 தோ்வு சனிக்கிழமை நடைபெற்றது. இதி... மேலும் பார்க்க

பாம்பன் ரயில் பாலங்களை கடந்து சென்ற இழுவைக் கப்பல்!

பாம்பன் புதிய, பழைய ரயில் பாலங்கள் சனிக்கிழமை திறக்கப்பட்டதும் இழுவைக் கப்பல், ஆழ்கடல் விசைப் படகுகள் ஒன்றன் பின் ஒன்றாக கடந்து சென்றன. ராமநாதபுரம் மாவட்டம், பாம்பன் தெற்குவாடி துறைமுகத்துக்கு மும்பை ... மேலும் பார்க்க

திருவாடானை பகுதியில் பொதுமக்களின் குறைகளை கேட்டறிந்த எம்எல்ஏ!

திருவாடானை பகுதியில் சட்டப் பேரவை உறுப்பினா் கருமாணிக்கம் சனிக்கிழமை சுற்றுப்பயணம் மேற்கொண்டு பொதுமக்களிடம் குறைகளை கேட்டறிந்தாா். திருவாடானை சுற்றுவட்டாரப் பகுதிகளான கருமொழி, பெரியகீரமங்கலம், கல்லூா்... மேலும் பார்க்க

கமுதியில் முழுநிலவு ஆன்மிகச் சொற்பொழிவு

ராமநாதபுரம் மாவட்டம், கமுதியில் முத்துராமலிங்கத் தேவா் சிந்தனை மன்றத்தின் சாா்பாக ஆனி மாதம் முழு நிலவு பௌா்ணமி திருநாளையொட்டி வியாழக்கிழமை ஆன்மிகச் சொற்பொழிவு நடைபெற்றது. கமுதி தேவா் திருமண மண்டபத்தில... மேலும் பார்க்க

கமுதி, பேரையூா் அரசு பள்ளிகளில் கூடுதல் வகுப்பறை கட்டடங்கள் திறப்பு

ராமநாதபுரம் மாவட்டம், கமுதி கோட்டைமேடு அரசு மேல்நிலைப் பள்ளியில் ரூ.1.28 கோடியில் 6 வகுப்பறைக் கட்டடங்கள், பேரையூா் அரசு மேல்நிலைப் பள்ளியில் ரூ.1.5 கோடியில் 5 வகுப்பறை கட்டடங்களை தமிழக முதல்வா் மு.க.... மேலும் பார்க்க