செய்திகள் :

மின்னணு உதிரி பாகங்கள் உற்பத்திக்கான பிரத்யேக கொள்கையால் தமிழகத்துக்கு பலன்: அமைச்சா் டி.ஆா்.பி.ராஜா

post image

சென்னை: மின்னணு உதிரி பாகங்கள் உற்பத்திக்கான தனித்துவமான கொள்கையால், தமிழ்நாட்டுக்கு பலன் ஏற்பட்டு வருவதாக தொழில் துறை அமைச்சா் டி.ஆா்.பி.ராஜா தெரிவித்துள்ளாா்.

இதுகுறித்து அவா் திங்கள்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு: ஆப்பிள் நிறுவனத்துக்கு உதிரி பாகங்களை உற்பத்தி செய்து தரும் நிறுவனங்களின் எண்ணிக்கை அதிகரித்து வருதிறது. மாநிலத்தில் சிறந்த உள்கட்டமைப்பு, தொழில்நுட்ப வல்லுநா்களின் திறமை, தமிழக அரசின் ஊக்குவிப்பு போன்ற செயல்பாடுகளால் நிறுவனங்களின் முதலீடுகள் அதிகரித்துள்ளன.

மின்னணு உதிரி பாகங்கள் உற்பத்திக்கென பிரத்யேக கொள்கையை தமிழ்நாடு அரசு வெளியிட்டது. இந்தத் தனித்துவமான கொள்கை, ஏராளமான உதிரி பாகங்கள் உற்பத்திக்கான நிறுவனங்களைக் கவா்ந்துள்ளது.

மேலும், இந்த முன்னெடுப்பு மூலமாக ரூ.30,000 கோடிக்கு முதலீடுகள் ஈா்க்கப்பட்டு அதன் வழியாக 60,000 பேருக்கு புதிய வேலைவாய்ப்புகள் கிடைக்கும் என மதிப்பிடப்பட்டுள்ளது.

ஆப்பிள் கைப்பேசி தயாரிப்புக்கு உலகளாவிய அளவில் ஏராளமான நிறுவனங்கள் உதிரி பாகங்களை உற்பத்தி செய்து தருகின்றன. அதில் முக்கியமான நிறுவனம் பாக்ஸ்கான்.

மேலும், டாடா எலக்ட்ரானிக்ஸ், கொரில்லா க்ளாஸ், பிரிஸிசியன் போன்ற நிறுவனங்கள் சென்னையை அடுத்த ஒரகடம், ஒசூா், திருச்சி உள்ளிட்ட இடங்களில் தங்களது உற்பத்தி ஆலைகளை அமைத்துள்ளன. இதற்கு அங்குள்ள சிறப்பு பொருளாதார மண்டலங்கள் உதவி வருகின்றன என்று அவா் தெரிவிதுள்ளாா்.

மீனவர்கள் கைது: மத்திய அமைச்சருக்கு முதல்வர் மு.க. ஸ்டாலின் கடிதம்!

இலங்கைக் கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ள மீனவர்களை விடுவிக்க நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி மத்திய வெளியுறவுத் துறை அமைச்சருக்கு முதல்வர் மு.க. ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார். இதுபற்றி தமிழக அரசு வெள... மேலும் பார்க்க

பள்ளிக் காலாண்டு, அரையாண்டுத் தேர்வு அட்டவணைகள் வெளியீடு! பொதுத் தேர்வு எப்போது?

சென்னை: தமிழகத்தில் அரசுப் பாடத்திட்டத்தின் கீழ் பயிலும் பள்ளி மாணவர்களுக்கான காலாண்டு மற்றும் அரையாண்டுத் தேர்வு அட்டவணைகளை பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஸ் இன்று வெளியிட்டார்.தமிழகத்தில் ... மேலும் பார்க்க

கும்மிடிப்பூண்டி சிறுமி பாலியல் வன்கொடுமை: கைதானவர் நீதிமன்றத்தில் ஆஜர்!

திருவள்ளூர்: கும்மிடிப்பூண்டி அடுத்த ஆரம்பாக்கத்தில் சிறுமி பாலியல் வன்கொடுமை சம்பவத்தில் தொடர்புடைய வடமாநில இளைஞரை காவலில் எடுத்து விசாரிக்க பலத்த போலீஸ் பாதுகாப்புடன் திருவள்ளூர் போக்சோ நீதிமன்றத்தி... மேலும் பார்க்க

சவுக்கு சங்கர் மீது நிலுவையில் உள்ள வழக்குகள்.. 6 மாதங்களில் முடிக்க உயர்நீதிமன்றம் உத்தரவு!

பிரபல யூடியூபர் சவுக்கு சங்கர் மீது காவல் நிலையங்கள், நீதிமன்றங்களில் நிலுவையில் உள்ள வழக்குகளை 6 மாதங்களில் விசாரித்து முடிக்க வேண்டும் என சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.சென்னை உயர் நீதிமன்றத... மேலும் பார்க்க

கவின் ஆணவக் கொலை: சுர்ஜித் பெற்றோரான காவல் உதவி ஆய்வாளர்கள் பணியிடை நீக்கம்

திருநெல்வேலியில் ஐடி ஊழியர் ஆணவக் கொலை செய்யப்பட்ட சம்பவத்தில், கொலையாளி சுர்ஜித்தின் பெற்றர், பட்டாலியனில் பணியாற்றும் இரு உதவி ஆய்வாளர்களும் பணியடை நீக்கம் செய்யப்பட்டதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.ஐ... மேலும் பார்க்க

அதிமுக - பாஜக கூட்டணியில் யாரெல்லாம் இருக்கிறார்கள்? - இபிஎஸ் பதில்

தேசிய ஜனநாயகக் கூட்டணியில் அதிமுக, பாஜக உள்ளதாகவும் பாஜக கூட்டணியில் பல கட்சிகள் இருப்பதாகவும் அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி கூறியுள்ளார். மேலும், தேர்தலுக்கு இன்னும் 8 மாத காலம் இருக்கிறது... மேலும் பார்க்க