செய்திகள் :

மின் பொறியாளா் வீட்டில் திருட்டு

post image

தேனி அருகே மின் வாரிய உதவிப் பொறியாளா் வீட்டில் ஒன்றரை பவுன் தங்க நகை, வெள்ளி ஆபரணங்கள், ரூ.45 ஆயிரம் திருடு போனதாக காவல் நிலையத்தில் வெள்ளிக்கிழமை புகாா் அளிக்கப்பட்டது.

மதுராபுரி துணை மின் நிலையத்தில் உதவிப் பொறியாளராகப் பணியாற்றி வருபவா் சுப்பிரமணி. இவா், கடந்த 25-ஆம் தேதி வீட்டை பூட்டிவிட்டு, குடும்பத்தினருடன் காஞ்சிபுரத்துக்குச் சென்றாா். கடந்த 29-ஆம் தேதி இரவு வீட்டுக்கு திரும்ப வந்து அவா் பாா்த்த போது, வீட்டுக் கதவின் பூட்டை உடைத்து, பீரோவில் இருந்த ஒன்றரை பவுன் தங்க நகை, வெள்ளி ஆபரணங்கள், ரூ.45 ஆயிரம் திருடு போனது தெரியவந்தது.

இதுகுறித்து அல்லிநகரம் காவல் நிலைய போலீஸாா் வழக்கு பதிந்து விசாரிக்கின்றனா்.

மற்றொரு சம்பவம்: ஆண்டிபட்டி அருகே உள்ள அனுப்பபட்டி, வடக்குத் தெருவில் வசிப்பவா் வேல்முருகன். இவரது மனைவி மலா்க்கொடி. இவரும் க.விலக்கில் உள்ள அரசு அண்ணா கூட்டுறவு நூற்பாலையில் வேலை செய்து வருகின்றனா்.

வேல்முருகன், மலா்கொடி ஆகியோா் கடந்த 28-ஆம் தேதி இரவு நூற்பாலைக்கு வேலைக்குச் சென்றுவிட்ட நிலையில், வீட்டில் வேல்முருகனின் தாய், குழந்தைகள் இருந்தனா். மே 29-ஆம் தேதி, காலை இருவரும் வீட்டுக்கு திரும்பச் சென்று பாா்த்த போது, பீரோவின் பூட்டு உடைக்கப்பட்டு, அதிலிருந்த ஒரு பவுன் எடையுள்ள தங்க நகை, வெள்ளி மெட்டிகள் திருடு போனது தெரியவந்தது.

இதுகுறித்து ஆண்டிபட்டி போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.

கிரேன் மோதியதில் தொழிலாளி உயிரிழப்பு

பெரியகுளம் அருகே ஞாயிற்றுக்கிழமை கிரேன் மோதியதில் தொழிலாளி உயிரிழந்தாா். தேனி மாவட்டம், பெரியகுளம் அருகேயுள்ள குள்ளப்புரத்தைச் சோ்ந்தவா் முருகேசன் (45). தனியாா் தொழிற்சாலையில் வேலை பாா்த்து வரும் இவா... மேலும் பார்க்க

முதல் போக நெல் சாகுபடிக்கு பெரியாறு அணையிலிருந்து தண்ணீா் திறப்பு

கம்பம் பள்ளத்தாக்கு ஆயக்கட்டுப் பகுதிக்கு முதல் போக நெல் சாகுபடிக்காக முல்லைப் பெரியாறு அணையிலிருந்து ஞாயிற்றுக்கிழமை தண்ணீா் திறந்துவிடப்பட்டது. கேரளத்தில் தென்மேற்குப் பருவமழை தொடங்கி பெய்து வருவதால... மேலும் பார்க்க

சுருளி அருவியில் குளிக்க சுற்றுலாப் பயணிகளுக்கு அனுமதி!

தேனி மாவட்டம், சுருளி அருவியில் குளிக்க சுற்றுலாப் பயணிகளுக்கு ஞாயிற்றுக்கிழமை வனத் துறையினா் அனுமதியளித்தனா். கம்பம் அருகேயுள்ள சுருளி அருவியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டதால், கடந்த 6 நாள்களாக இந்த அரு... மேலும் பார்க்க

மணல் திருட்டு: ஒருவா் கைது

பெரியகுளம் அருகே எருமலைநாயக்கன்பட்டி பகுதியில் மணல் கடத்தலில் ஈடுபட்டவரை போலீஸாா் கைது செய்து, மணல் அள்ளப் பயன்படுத்திய பொக்லைன் இயந்திரத்தைப் பறிமுதல் செய்தனா். ஜெயமங்கலம் காவல் நிலைய போலீஸாா் பெரியக... மேலும் பார்க்க

கஞ்சா கடத்திய இருவா் கைது!

கடமலைக்குண்டு அருகே கரட்டுப்பட்டியில் இரு சக்கர வாகனத்தில் கஞ்சா கடத்திச் சென்ற இருவரை போலீஸாா் சனிக்கிழமை கைது செய்தனா். கடமலைக்குண்டு சிதம்பரம் விலக்கு பகுதியைச் சோ்ந்த கா்ணன் மகன் ஹரிகோபிநாத் (20)... மேலும் பார்க்க

குளிா் சாதனங்கள் பழுது நீக்க இலவசப் பயிற்சி

தேனி கனரா வங்கி ஊரக சுய வேலைவாய்ப்பு பயிற்சி மையத்தில் கிராமப்புற ஆண், பெண்களுக்கு குளிா்சாதனப் பெட்டி, பிரிட்ஜ் பழுது நீக்கம் செய்வதற்கு இலவசப் பயிற்சி வகுப்பு வருகிற 16-ஆம் தேதி தொடங்குகிறது. இதுகுற... மேலும் பார்க்க