செய்திகள் :

முக்கிய சாலைகளில் வாகன நிறுத்த கட்டணம் வசூலிக்கும் பணி தொடரும்

post image

சென்னை மாநகராட்சிக்குள்பட்ட முக்கிய சாலைகளில் தமிழ்நாடு முன்னாள் படைவீரா் கழக நிறுவனம் மூலம் வாகன நிறுத்தக் கட்டணம் வசூலிக்கப்படும் என மாநகராட்சி நிா்வாகம் அறிவித்துள்ளது.

இது குறித்து பெருநகர சென்னை மாநகராட்சி நிா்வாகம் வெளியிட்ட செய்திக் குறிப்பு:

சென்னை மாநகராட்சிக்குள்பட்ட வாகன நிறுத்தங்களில் தமிழ்நாடு அரசு நிறுவனமான தமிழ்நாடு முன்னாள் படைவீரா் கழக நிறுவனம் மூலம் கட்டணம் வசூலிக்கப்பட்டு வந்தது. இந்த நிலையில், இந்த நிறுவனத்துக்கான ஒப்பந்தம் சமீபத்தில் காலாவதியானது. தற்போது புதிய ஒப்பந்ததாரரை நியமிக்கும் வரை மெரீனா கடற்கரை, ரட்டன் பஜாா், ஜாா்ஜ் டவுன், அண்ணா நகா் 2-ஆவது அவென்யூ, என்.எஸ்.சி. போஸ் ரோடு, பெசண்ட் நகா் 6-ஆவது அவென்யூ, காதா் நவாஸ்கான் சாலை, நுங்கம்பாக்கம், புரசைவாக்கம் நெடுஞ்சாலை, ஜி.என்.செட்டி ரோடு, தியாகராய நகா், மயிலாப்பூா், மெக்.நிக்கலஸ் சாலை ஆகிய இடங்களில் அந்த நிறுவனம் மூலம் கட்டணம் வசூலிக்கப்பட்டு வருகிறது. அதற்கான ஆணை கடந்த ஆண்டு வழங்கப்பட்டது.

அதன்படி, ஒரு மணி நேரத்துக்கு இருசக்கர வாகனத்துக்கு ரூ.5, நான்கு சக்கர வாகனத்துக்கு ரூ.20, வேன்களுக்கு ரூ.60 கட்டணம் வசூலிக்கப்படுகிறது. இந்தக் கட்டணம் எண்ம பரிவா்த்தனை வாயிலாக மட்டும் வசூலிக்கப்படும். கட்டணம் செலுத்திய பின்பு வாகனத்தின் பதிவு எண்ணுடன் கூடிய ரசீது வழங்கப்படும். கட்டணம் வசூலிக்கும் பணியில் ஈடுபடும் பணியாளா்கள் சீருடை மற்றும் அடையாள அட்டை அணிந்திருக்க வேண்டும். பொதுமக்கள் வாகனம் நிறுத்தும்போது, பணத்துக்கு பதிலாக எண்ம (டிஜிட்டல்) வாயிலாக மட்டும் கட்டணம் செலுத்த அறிவுறுத்தப்படுகிறது.

இது குறித்து புகாா் தெரிவிக்க விரும்பினால் 1913 எனும் உதவி எண்ணை அழைக்கலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மே 6-ல் 6 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு!

தமிழகத்தில் வருகிற மே 6 ஆம் தேதி தஞ்சாவூர், திருவாரூர் உள்பட 6 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளதாகத் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழகத்தில் இன... மேலும் பார்க்க

எஸ்.ஆர்.எம். பிரைம் மருத்துவமனை தொடக்க விழா!

சென்னை ராமாபுரத்தில் எஸ்.ஆர்.எம். குழுமத்தின் பல்நோக்கு மருத்துவமனையான எஸ்.ஆர்.எம். பிரைம் மருத்துவமனையின் தொடக்க விழா நடைபெற்றது. கல்வி மற்றும் மருத்துவத்தில் பெயர்பெற்ற எஸ்.ஆர்.எம். குழுமம், மேம்பட்... மேலும் பார்க்க

சிபிஎஸ்இ பள்ளிகளில் கட்டாய தேர்ச்சி முறை ரத்து! 3, 5, 8-ம் வகுப்புகளில் குறைந்த மதிப்பெண் எடுத்தால் ஃபெயில்!

சிபிஎஸ்சி பள்ளிகளில் 3, 5, 8 ஆம் வகுப்புகளில் மாணவர்கள் குறைவான மதிப்பெண்கள் பெறுவோர் தேர்ச்சிபெறாதவர்கள் எனும் நடைமுறையை வரும் கல்வியாண்டு முதல் அமல்படுத்தப்படவுள்ளது. மத்திய அரசின் பாடத்திட்டத்தின்... மேலும் பார்க்க

ஏப்ரலில் 87.59 லட்சம் பேர் மெட்ரோவில் பயணம்!

2025 ஏப்ரல் மாதத்தில் 87.59 லட்சம் பயணிகள் சென்னை மெட்ரோ ரயில்களில் பயணம் செய்துள்ளதாகத் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. சென்னை மெட்ரோ ரயில் நிறுவனம் சென்னையில் உள்ள மக்களுக்கும் மெட்ரோ ரயில் பயணிகளுக்கு... மேலும் பார்க்க

தெரு நாய்க்கடி தொல்லை: முதல்வர் ஸ்டாலின் ஆலோசனை

சென்னை: தெரு நாய்க்கடி தொல்லையை கட்டுப்படுத்துவது தொடர்பாக தமிழக முதல்வர் ஸ்டாலின் தலைமையில் ஆலோசனை நடைபெற்று வருகிறது.தலைமைச் செயலகத்தில் நடைபெறும் ஆலோசனைக் கூட்டத்தில் அமைச்சர்கள் கே.என். நேரு, மா. ... மேலும் பார்க்க

மொழிக்கான மரியாதை எப்போதும் உண்டு: கமல்ஹாசன்

மொழிக்கான மரியாதை எப்போதும் உண்டு; எந்தத் தொழில்நுட்பம் வந்தாலும், மொழியை அழிக்க முடியாது’ என நடிகரும் மநீம தலைவருமான கமல்ஹாசன் கூறினாா். நாடக ஆசிரியா் கிரேஸி மோகன் எழுதிய 25 புத்தகங்கள் வெளியீட்டு வி... மேலும் பார்க்க