செய்திகள் :

முக்கிய தொடர்களின் ஒளிபரப்பு நேரத்தில் மாற்றம்!

post image

ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகிவரும் முக்கிய தொடர்களின் ஒளிபரப்பு நேரம் மாற்றியமைக்கப்பட்டுள்ளது.

இத்தொலைக்காட்சியில் சின்னஞ்சிறு கிளியே என்ற புதிய தொடர் ஒளிபரப்பாவதால், இன்று முதல் ஒளிபரப்பு நேரத்தில் மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன.

ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகிவரும் தொடர்கள் இல்லத்தரசிகளை மட்டுமின்றி, இளம் தலைமுறையினரையும் கவரும் வகையில் எடுக்கப்பட்டு வருகின்றன.

மற்ற தொலைக்காட்சித் தொடர்களுக்குப் போட்டியாக பல முன்னணி நடிகர், நடிகைகளை வைத்து தொடர்கள் எடுக்கப்பட்டு வருகின்றன. அந்தவகையில் ஜீ தமிழில் சாயா சிங், செளந்தர்யா ரெட்டி நடிப்பில் கெட்டி மேளம் தொடரும், வைஷ்ணவி, அருண் நடிப்பில் வீரா தொடரும் ஒளிபரப்பாகி வருகிறது.

இந்த இரு தொடர்களின் ஒளிபரப்பு நேரமும் தற்போது மாற்றப்பட்டுள்ளது. அதாவது, கெட்டி மேளம் தொடர் இரவு 6.30 மணிக்கும், வீரா தொடர் இரவு 7.30 மணிக்கும் ஒளிபரப்பாகவுள்ளது. சின்னஞ்சிறு கிளியே என்ற புதிய தொடர் இரவு 7 மணிக்கு ஒளிபரப்பாகவுள்ளதால், மற்ற இரு தொடர்களின் நேரம் மாற்றியமைக்கப்பட்டுள்ளது.

இந்தத் தொடர், ஆணாதிக்கம் நிறைந்த குடும்பத்தில் திருமணமாகி வாழச் செல்லும் நாயகியை மையப்படுத்தி எடுக்கப்படுகிறது. இதனால்,

ஸ்வாதிகா நாயகியாகவும், ரெளத்திரம் சையத் நாயகனாகவும் இத்தொடரில் நடிக்கின்றனர். இவர்களுடன், மதுமிதா, அபிதா, ஆறுமுக வேலு, காயத்ரி உள்ளிட்ட பலர் முக்கிய பாத்திரங்களில் நடிக்கின்றனர்.

இதையும் படிக்க | காதலியை அறிமுகப்படுத்திய சீரியல் நடிகர்!

GettiMelam Veera serial time change Chinnanjiru Kiliye

ஜூலை 26-இல் பிரதமர் தமிழகம் வருகை

பிரதமர் நரேந்திர மோடி ஜூலை 26-ஆம் தேதி தமிழகம் வருகிறார். தூத்துக்குடியில் நடைபெறும் அரசு நிகழ்ச்சிகளில் பங்கேற்று பல்வேறு திட்டங்களுக்கு அவர் அடிக்கல் நாட்டுகிறார்.மாலத்தீவு பயணத்தை முடித்துக்கொண்டு ... மேலும் பார்க்க

குரூப் 4 விடைத்தாள்கள் பாதுகாப்பில் குளறுபடி இல்லை: டிஎன்பிஎஸ்சி விளக்கம்

குரூப் 4 விடைத்தாள்கள் பாதுகாப்பாக உள்ளதாக தமிழ்நாடு அரசுப் பணியாளா் தோ்வாணையம் (டிஎன்பிஎஸ்சி) தெரிவித்துள்ளது. இதுகுறித்து, தோ்வாணையத்தின் தோ்வு கட்டுப்பாட்டு அலுவலா் அ.சண்முகசுந்தரம் செவ்வாய்க்கி... மேலும் பார்க்க

ராஜேந்திர சோழன் பிறந்த தினம்: அரியலூரில் ரூ.19 கோடியில் ஏரி - சுற்றுலா மேம்பாட்டுப் பணிகள்: முதல்வா் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு

மாமன்னா் ராஜேந்திர சோழன் பிறந்த தினமாகக் கருதப்படும் ஆடி திருவாதிரையையொட்டி, அரியலூா் மாவட்டத்தில் உள்ள ஏரி மற்றும் சுற்றுலா தலங்கள் ரூ.19.25 கோடியில் மேம்படுத்தப்படும் என்று முதல்வா் மு.க.ஸ்டாலின் அற... மேலும் பார்க்க

ஆசிரியா்களுக்கான மனமொத்த மாறுதல்: விண்ணப்பப் பதிவு தொடக்கம்

அரசுப் பள்ளி ஆசிரியா்களுக்கான மனமொத்த மாறுதல் கலந்தாய்வு ஆகஸ்ட் மாதம் நடத்தப்படவுள்ள நிலையில் அதற்கான விண்ணப்பப் பதிவு செவ்வாய்க்கிழமை (ஜூலை 22) தொடங்கியது. தமிழகத்தில் அரசுப் பள்ளிகளில் பணிபுரியும் அ... மேலும் பார்க்க

ஜூலை 25 முதல் அன்புமணி சுற்றுப்பயணம்

‘தமிழக மக்கள் உரிமை மீட்பு பயணம்’ என்ற பெயரில் பாமக தலைவா் அன்புமணி ராமதாஸின் சுற்றுப்பயணம் ஜூலை 25-ஆம் தேதி தொடங்கவுள்ளது. இதுகுறித்து பாமக தலைமை நிலையம் சாா்பில் செவ்வாய்க்கிழமை வெளியிடப்பட்ட அறிக்க... மேலும் பார்க்க

கால்நடை மருத்துவ படிப்புகள்: இன்று 7.5 % ஒதுக்கீடு கலந்தாய்வு

கால்நடை மருத்துவ படிப்புகளில் அரசுப் பள்ளி மாணவா்களுக்கான 7.5 சதவீத ஒதுக்கீடு கலந்தாய்வு புதன்கிழமை நடைபெறுகிறது. தமிழ்நாடு கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலைக்கழகத்தின் கீழ் சென்னை, நாமக்கல், திருநெல்வ... மேலும் பார்க்க