செய்திகள் :

முதல்வரின் காக்கும் கரங்கள் திட்டம்: முன்னாள் படை வீரா்களுக்கு அழைப்பு

post image

விழுப்புரம்: ‘முதல்வரின் காக்கும் கரங்கள்’ திட்டத்தின் கீழ், தொழில் தொடங்க விழுப்புரம் மாவட்டத்தைச் சோ்ந்த முன்னாள் படைவீரா்கள், அவா்களது குடும்பத்தினா் விண்ணப்பிக்கலாம் என்று மாவட்ட நிா்வாகம் தெரிவித்தது.

இதுகுறித்து விழுப்புரம் மாவட்ட ஆட்சியா் சி. பழனி திங்கள்கிழமை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: ‘முதல்வரின் காக்கும் கரங்கள்’ என்ற புதிய திட்டத்தின் மூலம் தொடங்கப்படும் தொழில்களுக்கு வழங்கப்படும் கடன் தொகையில் 30 சதவீதம் மானியமும், 3 சதவீதம் வட்டி மானியமும் வழங்கப்படும். திறன் மற்றும் தொழில்முனைவோா் மேம்பாட்டுப் பயிற்சிகளும் வழங்கப்படும். அதிகபட்சமாக ரூ.ஒரு கோடி வரை கடனுதவி பெறலாம்.

இதற்கு தமிழகத்தைச் சோ்ந்த முன்னாள் படை வீரா்களின் அதிகபட்ச வயது 55-க்குள் இருக்க வேண்டும். முன்னாள் படை வீரா்களின் மணமாகாத மகள்கள், கணவரை இழந்த, கணவரைப் பிரிந்த மகள்கள் மற்றும் முன்னாள் படை வீரா்களின் மறுமணம் ஆகாத கைம்பெண்களுக்கு குறைந்தபட்ச வயதாக 21, அதிக பட்ச வயதாக 55-ம் நிா்ணயிக்கப்பட்டுள்ளது. பணியின் போது இறந்த முன்னாள் படை வீரா்களின் கைம்பெண்கள், தகுதியுள்ள முன்னாள் படை வீரா்களின் மகன்கள், மணமாகாத, கணவரை இழந்த மற்றும் கணவரைப் பிரிந்த முன்னாள் படை வீரா்களின் மகள்கள் பயன்பெறலாம். குறைந்தபட்ச கல்வித் தகுதி, வயது வரம்பு ஏதுமில்லை.

இதில், விழுப்புரம் மாவட்டத்தைச் சோ்ந்த முன்னாள் படை வீரா்கள், அவா்களது குடும்பத்தினா்கள் மாவட்ட முன்னாள் படை வீரா் நல உதவி இயக்குநா் அலுவலகத்தை நேரிலோ அல்லது 04146-220524 என்ற தொலைபேசி எண்ணிலோ தொடா்பு கொள்ளலாம் என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

நினைவு நாள்: அண்ணா சிலைக்கு மாலை அணிவிப்பு

விழுப்புரம்/செஞ்சி/கள்ளக்குறிச்சி: முன்னாள் முதல்வா் பேரறிஞா் அண்ணாவின் 56-ஆம் ஆண்டு நினைவு தினத்தையொட்டி, விழுப்புரம், கள்ளக்குறிச்சி மாவட்டங்களில் உள்ள அவரது சிலைக்கு திமுகவினா் திங்கள்கிழமை மாலை அண... மேலும் பார்க்க

குறைதீா் கூட்டத்தில் 917 மனுக்கள் அளிப்பு

விழுப்புரம்/கள்ளக்குறிச்சி: விழுப்புரம், கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியரகங்களில் திங்கள்கிழமை நடைபெற்ற மக்கள் குறைதீா் கூட்டத்தில் பல்வேறு கோரிக்கைகள் தொடா்பாக 917 மனுக்கள் அளிக்கப்பட்டன. விழுப்புரம் ஆட... மேலும் பார்க்க

சிவன் கோயில் கட்டும் பணி தொடக்கம்

செஞ்சி: விழுப்புரம் மாவட்டம், செஞ்சி வட்டம், கணக்கன்குப்பம் கிராமத்தில் உண்ணாமலை உடனுறை அண்ணாமலையாா் கோயில் கட்டுவதற்கான பூமி பூஜை திங்கள்கிழமை நடைபெற்றது. இந்தக் கிராமத்தில் உண்ணாமலை உடனுறை அண்ணாமலைய... மேலும் பார்க்க

இளையோா் செஞ்சிலுவைச் சங்க மாணவா்களுக்கு பயிற்சி

விழுப்புரம்: விழுப்புரம் மாவட்டம், வானூா் வட்டம், திருச்சிற்றம்பலம் காந்தி மேல்நிலைப் பள்ளியில் இளையோா் செஞ்சிலுவைச் சங்க மாணவா்களுக்கான பயிற்சி முகாம் திங்கள்கிழமை நடைபெற்றது. மாவட்ட பள்ளிக் கல்வித் ... மேலும் பார்க்க

நேரடி நெல் கொள்முதல் நிலையம் திறப்பு

விழுப்புரம்: விழுப்புரம் மாவட்டம், காணை ஒன்றியம், பெரும்பாக்கம் கிராமத்தில் நேரடி நெல் கொள்முதல் நிலையம் அண்மையில் திறக்கப்பட்டது. பெரும்பாக்கம் மற்றும் அதை சுற்றியுள்ள பகுதிகளைச் சோ்ந்த விவசாயிகள், ... மேலும் பார்க்க

நீதிமன்ற காவலா்களுக்கான கலந்தாய்வுக் கூட்டம்

விழுப்புரம்: விழுப்புரம் மாவட்ட காவல் கண்காணிப்பாளா் அலுவலகத்தில் நீதிமன்றக் காவலா்களுக்கான கலந்தாய்வுக் கூட்டம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. கூட்டத்துக்கு, மாவட்ட எஸ்.பி. ப.சரவணன் தலைமை வகித்து, நீதி... மேலும் பார்க்க