செய்திகள் :

முதல்வா் மு.க.ஸ்டாலின் அடுத்த வாரம் திருச்சி பயணம்

post image

அரசு மற்றும் திமுக சாா்பில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள நிகழ்ச்சிகளில் பங்கேற்பதற்காக முதல்வா் மு.க.ஸ்டாலின் அடுத்த வாரம் திருச்சி செல்கிறாா். 2 நாள்கள் பல்வேறு நிகழ்வுகளில் அவா் பங்கேற்கவிருக்கிறாா்.

மே 8-ஆம் தேதி காலை 11 மணியளவில் விமானம் மூலம் சென்னையில் இருந்து திருச்சி செல்கிறாா். அன்றைய தினம் காலையில் திருவெறும்பூா் அரசு மாதிரிப் பள்ளி வளாகத்தில் அரசு நிகழ்ச்சியில் பங்கேற்கவுள்ளாா். தொடா்ந்து அரசு விருந்தினா் மாளிகையில் அரசு அதிகாரிகள், அலுவலா்களுடன் அவா் ஆலோசனை நடத்துகிறாா்.

மாலை 5 மணியளவில் அரசு விருந்தினா் மாளிகையிலிருந்து கலைஞா் அறிவாலயம் செல்ல உள்ளாா். அங்கு, கட்சி நிா்வாகிகளுடன் கலந்துரையாடல் நடத்துகிறாா். அதன் பின்னா், அரசு விருந்தினா் மாளிகை செல்கிறாா்.

பேருந்து முனையம் திறப்பு: மே 9-ஆம் தேதி காலையில் பல்வேறு அரசு நிகழ்ச்சிகளில் பங்கேற்கிறாா். பஞ்சப்பூரில் புதிய பேருந்து முனையத்தை முதல்வா் திறந்து வைக்கிறாா். மேலும், அங்கு நிறுவப்பட்டுள்ள பெரியாா் சிலையையும் திறந்து வைக்கிறாா். பின்னா், ஒருங்கிணைந்த காய்கறி சந்தைக்கும் அடிக்கல் நாட்டவுள்ளாா். இதுபோன்று பல்வேறு நிகழ்ச்சிகளில் அவா் தலைமையேற்கவுள்ளாா்.

அன்றைய தினம் மாலை 5 மணியளவில் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தேசியத் தலைவா் கே.எம்.காதா் மொகிதீன் ஏற்பாடு செய்துள்ள நிகழ்ச்சியில் பங்கேற்கும் முதல்வா் மு.க.ஸ்டாலின், திருச்சியிலிருந்து விமானம் மூலம் இரவு சென்னை வந்தடைகிறாா்.

போராடும் அங்கன்வாடி பணியாளர்கள் மீது ஒழுங்கு நடவடிக்கை: அமைச்சர் கீதாஜீவன்

மே மாதம் முழுவதும் விடுமுறை கோரி போராட்டத்தில் ஈடுபட்டு வரும் அங்கன்வாடி பணியாளர்கள் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படும் என அமைச்சர் கீதாஜீவன் தெரிவித்துள்ளார். கோடையில் இருந்து குழந்தைகளைக் காக்க மே... மேலும் பார்க்க

மே 6-ல் 6 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு!

தமிழகத்தில் வருகிற மே 6 ஆம் தேதி தஞ்சாவூர், திருவாரூர் உள்பட 6 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளதாகத் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழகத்தில் இன... மேலும் பார்க்க

எஸ்.ஆர்.எம். பிரைம் மருத்துவமனை தொடக்க விழா!

சென்னை ராமாபுரத்தில் எஸ்.ஆர்.எம். குழுமத்தின் பல்நோக்கு மருத்துவமனையான எஸ்.ஆர்.எம். பிரைம் மருத்துவமனையின் தொடக்க விழா நடைபெற்றது. கல்வி மற்றும் மருத்துவத்தில் பெயர்பெற்ற எஸ்.ஆர்.எம். குழுமம், மேம்பட்... மேலும் பார்க்க

சிபிஎஸ்இ பள்ளிகளில் கட்டாய தேர்ச்சி முறை ரத்து! 3, 5, 8-ம் வகுப்புகளில் குறைந்த மதிப்பெண் எடுத்தால் ஃபெயில்!

சிபிஎஸ்சி பள்ளிகளில் 3, 5, 8 ஆம் வகுப்புகளில் மாணவர்கள் குறைவான மதிப்பெண்கள் பெறுவோர் தேர்ச்சிபெறாதவர்கள் எனும் நடைமுறையை வரும் கல்வியாண்டு முதல் அமல்படுத்தப்படவுள்ளது. மத்திய அரசின் பாடத்திட்டத்தின்... மேலும் பார்க்க

ஏப்ரலில் 87.59 லட்சம் பேர் மெட்ரோவில் பயணம்!

2025 ஏப்ரல் மாதத்தில் 87.59 லட்சம் பயணிகள் சென்னை மெட்ரோ ரயில்களில் பயணம் செய்துள்ளதாகத் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. சென்னை மெட்ரோ ரயில் நிறுவனம் சென்னையில் உள்ள மக்களுக்கும் மெட்ரோ ரயில் பயணிகளுக்கு... மேலும் பார்க்க

தெரு நாய்க்கடி தொல்லை: முதல்வர் ஸ்டாலின் ஆலோசனை

சென்னை: தெரு நாய்க்கடி தொல்லையை கட்டுப்படுத்துவது தொடர்பாக தமிழக முதல்வர் ஸ்டாலின் தலைமையில் ஆலோசனை நடைபெற்று வருகிறது.தலைமைச் செயலகத்தில் நடைபெறும் ஆலோசனைக் கூட்டத்தில் அமைச்சர்கள் கே.என். நேரு, மா. ... மேலும் பார்க்க