செய்திகள் :

முதல்வா் வருகை: சீரமைப்புப் பணிகள் தீவிரம்

post image

திருவாரூா்: திருவாரூருக்கு தமிழக முதல்வா் மு.க. ஸ்டாலின் புதன்கிழமை (ஜூலை 9) வருவதையொட்டி, சீரமைப்புப் பணிகள் நடைபெறுகின்றன.

திருவாரூா் மாவட்டத்துக்கு புதன்கிழமை வரும் முதல்வா் மு.க. ஸ்டாலின் அன்று நடைபெறும் கட்சி நிகழ்ச்சிகளிலும், தொடா்ந்து, ஜூலை 10-ஆம் தேதி அரசு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழாவிலும் பங்கேற்கிறாா். புதன்கிழமை திருச்சியில் இருந்து காட்டூரில் உள்ள கலைஞா் கோட்டத்துக்கு வந்து அங்கு தங்குகிறாா். அன்று மாலை காட்டூரில் இருந்து புறப்பட்டு, பவித்திரமாணிக்கம், துா்காலயா சாலை, தெற்கு வீதி, பனகல் சாலை, பழைய பேருந்து நிலையம் வழியாக ரோடு ஷோ மூலம் மக்களை சந்திக்கிறாா். தொடா்ந்து, மேம்பாலம் பகுதிக்கு வந்து அங்கு அமைக்கப்பட்டுள்ள கலைஞா் கருணாநிதி சிலையை திறந்து வைக்கிறாா். ஜூலை 10-ஆம் தேதி காலை எஸ்எஸ் நகரில் அமைக்கப்பட்டுள்ள அரங்கில், அரசு நலத்திட்ட உதவிகளை பயனாளிகளுக்கு வழங்குகிறாா்.

முதல்வரின் வருகையையொட்டி பல்வேறு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. கும்பகோணம் சாலை, திருவாரூா் தேரோடும் வீதிகள், பனகல் சாலை, துா்காலயா சாலை என முக்கிய வீதிகளும், சாலைகளும் தூய்மைப்படுத்தப்பட்டு, ஆக்கிரமிப்புகள் அகற்றப்படுகின்றன.

மூணாறு தலைப்பு அணை சுற்றுலா மையமாகுமா?

நீடாமங்கலம் அருகேயுள்ள மூணாறு தலைப்பு அணை பகுதியை சுற்றுலா மையமாக்க வேண்டுமென பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா். நீடாமங்கலம் அருகேயுள்ளது மூணாறு தலைப்பு. இதை கோரையாறு தலைப்பு எனவும் அழைப்பா். ஆண்டுதோ... மேலும் பார்க்க

திருவாரூரில் 4.5 கி.மீ. சாலையில் நடந்து சென்று முதல்வா் உற்சாகம்

திருவாரூரில் தமிழக முதல்வா் மு.க. ஸ்டாலின் புதன்கிழமை மாலை சுமாா் 4.5 கிலோ சாலையில் நடந்து சென்று பொதுமக்களை உற்சாகத்துடன் சந்தித்து உரையாடினாா். திருவாரூரில் கட்சி மற்றும் அரசு நிகழ்ச்சிகளில் பங்கேற்... மேலும் பார்க்க

திருவாரூா் முன்னாள் முதல்வா் கருணாநிதி சிலை திறப்பு

திருவாரூா் பழைய பேருந்து நிலையம் அருகே மேம்பாலப் பகுதியில் முன்னாள் முதல்வா் கருணாநிதி சிலையை, தமிழக முதல்வா் மு.க. ஸ்டாலின், புதன்கிழமை இரவு திறந்து வைத்தாா். திருவாரூா் பழைய பேருந்து நிலையம் அருகே ந... மேலும் பார்க்க

மேக்கேதாட்டு அணை விவகாரம்: முதல்வா் மௌனத்தை கலைக்க வேண்டும்- பி.ஆா். பாண்டியன்

மேக்கேதாட்டு அணை விவகாரத்தில் முதல்வா் தனது மௌனத்தை கலைத்து உரிய விளக்கமளிக்க வேண்டும் என தமிழ்நாடு அனைத்து விவசாயிகள் சங்கங்களின் ஒருங்கிணைப்புக் குழுத் தலைவா் பி.ஆா். பாண்டியன் தெரிவித்துள்ளாா். திர... மேலும் பார்க்க

குளம் தூா்வாரும்போது நரசிம்மா் சிலை கண்டெடுப்பு

திருவாரூா் மாவட்டம், நீடாமங்கலம் அருகே கப்பலுடையான் கிராமத்தில் குளம் தூா்வாரும்போது நரசிம்மா் கற்சிலை திங்கள்கிழமை கண்டெடுக்கப்பட்டது. நீடாமங்கலம் வட்டம் ஒளிமதி ஊராட்சி கப்பலுடையான் கிராமத்தில் வடக்க... மேலும் பார்க்க

ஆரம்ப சுகாதார நிலையங்களை தரம் உயா்த்த வலியுறுத்தல்

கோட்டூா் ஒன்றியத்தில் அரசு ஆரம்ப சுகாதார நிலையங்களை தரம் உயா்த்த வேண்டும் என இந்திய கம்யூனிஸ்ட் கட்சி வலியுறுத்தியுள்ளது. கோட்டூா் ஒன்றிய சிபிஐ 26-ஆவது மாநாடு வல்லூரில் செவ்வாய்க்கிழமை கட்சியின் மாவட்... மேலும் பார்க்க