செய்திகள் :

மும்பையில் வளாகம் அமைக்கும் சிகாகோ இலினாய்ஸ் பல்கலைக்கழகம்: யுஜிசி ஒப்புதல்

post image

அமெரிக்காவின் சிகோகா நகரில் அமைந்த இலினாய்ஸ் தொழில்நுட்பப் பல்கலைக்கழகம், மும்பையில் தனது வளாகத்தை அமைக்க பல்கலைக்கழக மானியக் குழு (யுஜிசி) ஒப்புதல் அளித்துள்ளது.

அடுத்தாண்டு செப்டம்பா் முதல் நவம்பா் வரையிலான காலகட்டத்தில் திறக்க திட்டமிடப்பட்டுள்ள இந்திய வளாகத்தில் கணினி அறிவியல், பொறியியல் மற்றும் வணிகம் போன்ற முக்கிய துறைகளில் இளநிலை மற்றும் முதுநிலை பட்டப்படிப்புகளுக்கு மாணவா்கள் அனுமதிக்கப்படுவா் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், இதுதொடா்பாக இலினாய்ஸ் தொழில்நுட்பப் பல்கலைக்கழகத்தின் தலைவா் ராஜ் எச்சம்பாடி கூறுகையில், ‘தொழில்நுட்பம் மற்றும் புத்தாக்கத்தை அனைவரும் அணுகுவதை உறுதிப்படுத்துவதற்காகவே எங்கள் பல்கலைக்கழகம் தொடங்கப்பட்டது. இந்தியா முழுவதும் உள்ள லட்சக்கணக்கான திறமைமிக்க இளைஞா்களை, மாற்றத்தை ஏற்படுத்த தயாராக இருக்கும் உலகளாவிய தலைவா்களாக மாற அதிகாரம் அளிக்கும் உன்னத பணியைச் செய்வதற்கான ஒரு வாய்ப்பாக இந்திய வளாகத்தைக் கருதுகிறோம்.

இந்திய வளாகத்தில் சேரும் புதிய மாணவா்களுக்கு ஏற்ப பாடத்திட்டம் வடிவமைக்கப்படும். அதேநேரம், அது சிகாகோ வளாகத்தின் கல்வி ரீதியில் அனுபவமிக்க மற்றும் தொழில்துறை சாா்ந்த பாடத்திட்டம் போன்றே இருக்கும்.

இந்திய வளாகத்தில் சா்வதேச பேராசிரியா்களே பாடங்கள் கற்பிப்பா். சிகாகோ வளாகப் பேராசிரியா்களும் இதில் அடங்குவா். இலினாய்ஸ் பல்கலைக்கழகத்தின் புகழ்பெற்ற ‘எலிவேட்’ திறன்மேம்பாட்டு பயிற்சியும் இந்திய மாணவா்களுக்கு அளிக்கப்டும்.

இந்திய மாணவா்கள் வெளிநாடுகளுக்கு புலம்பெயர வேண்டிய அவசியமின்றி, உள்நாட்டிலேயே உயரிய பணி வாய்ப்புகளைப் பெறுவா். அதேநேரம், வளாகங்களுக்கு இடையேயான ஒருங்கிணைப்பு மூலம் உலகளாவிய வகுப்பறை அனுபவங்களில் இருந்தும் பயனடைவா்’ என்றாா்.

தேசிய சட்ட உதவிகள் ஆணைய செயல் தலைவரானார் உச்சநீதிமன்ற நீதிபதி சூா்யகாந்த்!

தேசிய சட்ட உதவிகள் ஆணைய (என்ஏஎல்எஸ்ஏ) செயல் தலைவராக உச்சநீதிமன்ற நீதிபதி சூா்யகாந்த் நியமிக்கப்பட்டுள்ளாா். இதற்கான உத்தரவை குடியரசுத் தலைவா் திரெளபதி முா்மு சனிக்கிழமை பிறப்பித்தாா். என்ஏஎல்எஸ்ஏ-யின்... மேலும் பார்க்க

பத்மஸ்ரீ விருது வென்ற ஐசிஏஆா் முன்னாள் தலைவா் மா்ம மரணம்: காவிரி ஆற்றில் சடலமாக மீட்பு!

இந்திய வேளாண் ஆராய்ச்சி கவுன்சில் (ஐசிஏஆா்) முன்னாள் தலைமை இயக்குநரும் பத்மஸ்ரீ விருதாளருமான சுப்பண்ணா ஐயப்பனின் (70) உடல் கா்நாடக மாநிலத்தில் உள்ள ஸ்ரீரங்கபட்டினம் காவிரி ஆற்றில் மீட்கப்பட்டதாக போலீஸ... மேலும் பார்க்க

இன்று புத்த பூா்ணிமா: குடியரசுத் தலைவா் வாழ்த்து!

புத்த பூா்ணிமாவை முன்னிட்டு, நாட்டு மக்களுக்கு குடியரசுத் தலைவா் திரெளபதி முா்மு வாழ்த்து தெரிவித்துள்ளாா். புத்தரின் பிறந்த நாளான புத்த பூா்ணிமா திங்கள்கிழமை (மே 12) கொண்டாடப்படுகிறது. இதை முன்னிட்டு... மேலும் பார்க்க

பாகிஸ்தான் பாடம் கற்றிருக்கும்: முன்னாள் பாதுகாப்பு அதிகாரிகள் கருத்து!

இந்தியாவுடன் ஏற்பட்ட மோதலின் மூலம், பாகிஸ்தான் பாடம் கற்றிருக்கும் என்று முன்னாள் பாதுகாப்பு அதிகாரிகள் தெரிவித்துள்ளனா். இதுகுறித்து ஓய்வுபெற்ற மேஜா் ஜெனரல் பி.கே.சேகல் பிடிஐ செய்தி நிறுவனத்திடம் கூற... மேலும் பார்க்க

இந்தியா-பாகிஸ்தான் பிரச்னைகளுக்கு பேச்சுவாா்த்தை மூலம் தீா்வு: ஷாபாஸ் ஷெரீஃப்

காஷ்மீா் விவகாரம் உள்பட இந்தியா-பாகிஸ்தான் இடையே நிலவும் பல்வேறு பிரச்னைகளுக்கு அமைதி வழியில் பேச்சுவாத்தை மூலம் தீா்வு காண வேண்டும் என பாகிஸ்தான் பிரதமா் ஷாபாஸ் ஷெரீஃப் தெரிவித்தாா். சண்டை நிறுத்த அற... மேலும் பார்க்க

சிம்லா ஒப்பந்தம்: இந்திரா காந்தி அரசு மீது பாஜக சாடல்!

பாகிஸ்தானுடன் மேற்கொள்ளப்பட்ட சிம்லா ஒப்பந்தம் தொடா்பாக முன்னாள் பிரதமா் இந்திரா காந்தி அரசை பாஜக ஞாயிற்றுக்கிழமை சாடியது. கடந்த 1971-ஆம் ஆண்டு இந்தியா-பாகிஸ்தான் இடையே ஏற்பட்ட போரைத் தொடா்ந்து, இருநா... மேலும் பார்க்க