செய்திகள் :

முல்லான்பூரில் ஐபிஎல் பிளே-ஆஃப்ஸ் போட்டிகள்..! பாதுகாப்பு பணியில் 2,500 காவலர்கள்!

post image

ஐபிஎல் தொடரின் 18-ஆவது சீசனின் லீக் போட்டிகள் நேற்றுடன் (மே.27) நிறைவடைந்துள்ளன. அடுத்த கட்டமாக பிளே-ஆஃப்ஸ் போட்டிகள் (குவாலிஃபயர் 1, எலிமினேட்டர்) பஞ்சாபின் முல்லான்பூரில் நடைபெறவிருக்கின்றன.

இந்தியா-பாகிஸ்தான் மோதலின் காரணமாக ஐபிஎல் போட்டிகள் பாதியில் நிறுத்தப்பட்டு பின்னர் ஒரு வாரத்திற்கு பிறகு மீண்டும் தொடங்கப்பட்டன.

பஹல்காமில் நடந்த தீவிரவாத தாக்குதலுக்கு பதிலடியாக இந்திய ராணுவம் ஆபரேஷன் சிந்தூர் என்ற பெயரில் பதிலடி கொடுத்தது.

இந்தச் சண்டையில் பாகிஸ்தான் ராணுவம் பஞ்சாபை குறிப்பாக அமிர்தசரை குறிவைக்க முயற்சித்தது. இந்திய ராணுவத்தின் சாதுரியத்தினாலும் முன்னெச்சரிக்கை நடவடிக்கையினாலும் முறியடிக்கப்பட்டது.

இது குறித்து பஞ்சாபின் சட்டம் - ஒழுங்கு சிறப்பு டிஜிபி அதிகாரி அர்பித் சுக்லா கூறியதாவது:

முல்லான்பூரில் நாளை (மே.29), நாளை மறுதினம் (மே.30) முக்கியமான போட்டிகள் நடைபெறவிருக்கின்றன. அவை குவாலிஃபயர் 1, எலிமினேட்டர் போட்டிகள்.

இந்தியாவின் அனைத்து பாகங்களில் இருந்தும் மக்கள் இந்தப் போட்டியைப் பார்க்க ஆவலுடன் வருவார்கள்.

முல்லான்பூர் திடலைச் சுற்றிலும் விரிவான பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. இன்று (மே.28) அதற்கான ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.

முல்லான்பூரில் அரசிதழில் பதிவு பெற்ற 65 அதிகாரிகளுடன் 2,500க்கும் அதிகமான காவலர்கள் குவிக்கப்பட்டுள்ளார்கள்.

ஐபிஎல் போட்டிகளைப் பார்க்கவரும் ரசிகர்களுக்கு எந்தவித பிரச்னையும் இல்லாமல் பார்த்துக்கொள்வோம். அதே நேரத்தில், சோதனைகள் கடுமையாக இருக்கும். காவலர்களுக்கான மாக் ட்ரில் பயிற்சிகள் நேற்றும் இன்றும் இதற்கான மேற்கொள்ளப்பட்டன என்றார்.

ரோஹித் சர்மா அதிரடி; குஜராத் டைட்டன்ஸுக்கு 229 ரன்கள் இலக்கு!

குஜராத் டைட்டன்ஸுக்கு எதிரான போட்டியில் முதலில் விளையாடிய மும்பை இந்தியன்ஸ் அணி 5 விக்கெட்டுகளை இழந்து 228 ரன்கள் எடுத்துள்ளது.ஐபிஎல் தொடரில் சண்டீகரில் இன்று (மே 30) நடைபெற்று வரும் எலிமினேட்டர் போட்... மேலும் பார்க்க

ரோஹித் சர்மா அதிரடி; ஒரே போட்டியில் இரண்டு சாதனைகள்!

குஜராத் டைட்டன்ஸுக்கு எதிரான எலிமினேட்டர் போட்டியில் மும்பை இந்தியன்ஸ் அணி வீரர் ரோஹித் சர்மா இரண்டு சாதனைகளை படைத்துள்ளார்.ஐபிஎல் தொடரில் சண்டீகரில் இன்று (மே 30) நடைபெற்று வரும் எலிமினேட்டர் போட்டிய... மேலும் பார்க்க

எலிமினேட்டர்: மும்பை பேட்டிங்; பிளேயிங் லெவனில் 3 மாற்றங்கள்!

குஜராத் டைட்டன்ஸுக்கு எதிரான எலிமினேட்டர் போட்டியில் டாஸ் வென்ற மும்பை இந்தியன்ஸ் அணி பேட்டிங்கைத் தேர்வு செய்துள்ளது.ஐபிஎல் தொடரில் சண்டீகரில் இன்று (மே 30) நடைபெறும் எலிமினேட்டர் போட்டியில் மும்பை இ... மேலும் பார்க்க

ஐபிஎல் போட்டிகளில் 1000 ரன்களைக் கடந்த பில் சால்ட்!

ஐபிஎல் போட்டிகளில் 1000 ரன்களைக் கடந்து ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி வீரர் பில் சால்ட் அசத்தியுள்ளார்.ஐபிஎல் தொடரில் சண்டீகரில் நேற்று (மே 29) நடைபெற்ற குவாலிஃபையர் 1 போட்டியில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங... மேலும் பார்க்க

உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டிக்குத் தயாராக ஐபிஎல்லைவிட சிறந்த இடம் கிடையாது: ஜோஸ் ஹேசில்வுட்

உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டிக்குத் தயாராக ஐபிஎல் தொடரைவிட சிறந்த இடம் கிடையாது என ஆஸ்திரேலிய வேகப் பந்துவீச்சாளர் ஜோஸ் ஹேசில்வுட் தெரிவித்துள்ளார்.ஐபிஎல் தொடரில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அ... மேலும் பார்க்க

இறுதிப்போட்டியில் மீண்டும் ஆர்சிபியுடன் மோதுவோம்: பஞ்சாப் கிங்ஸ் பயிற்சியாளர்

ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூருவுக்கு எதிராக குவாலிஃபையர் 1 போட்டியில் ஏற்பட்ட தோல்வி குறித்து யோசிப்பதை தவிர்க்குமாறு பஞ்சாப் கிங்ஸ் அணியின் பந்துவீச்சு பயிற்சியாளர் ஜேம்ஸ் ஹோப்ஸ் தெரிவித்துள்ளார்.ஐபிஎல் ... மேலும் பார்க்க