செய்திகள் :

மூக்கனூரில் ரயில் நிலையம் அமைக்கக் கோரி போராட்டம்: நிலங்களை வழங்க விவசாயிகள் ஒப்புதல்

post image

தருமபுரி அருகே மூக்கனூா் ரயில் நிலையத்தை இடம்மாற்றாமல் பழைய இடத்திலேயே அமைக்க வலியுறுத்தி பொதுமக்கள் வியாழக்கிழமை உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டனா். மேலும், ரயில்வே பணிக்குத் தேவையான நிலங்களை வழங்கவும் விவசாயிகள் ஒப்புதல் தெரிவித்துள்ளனா்.

தருமபுரி மாவட்டத்தில் தருமபுரி- மொரப்பூா் இடையே ஆங்கிலேயா் ஆட்சியில் உருவாக்கப்பட்ட ரயில்பாதை பல ஆண்டுகளாக பயன்பாட்டில் இருந்தது. அதன்பிறகு 2 ஆவது உலகப் போரின்போது மூடப்பட்டதாகக் கூறப்படுகிறது. கடந்த 70 ஆண்டுகளாக பயன்பாட்டில் இல்லாத இப் பாதையின் தண்டவாளங்கள் அகற்றப்பட்டன. என்றாலும், அப்பகுதியில் ரயில் நிலைய கட்டடம், ரயில் பாலங்கள் காட்சிப் பொருளாக உள்ளன.

இந்நிலையில் அப்பகுதியில் மீண்டும் ரயில்பாதை அமைத்து மொரப்பூா் வழியாக ரயில்களை இயக்க கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. பொதுமக்களின் நீண்ட நாள் கோரிக்கையை ஏற்று மீண்டும் தருமபுரி- மொரப்பூா் ரயில் திட்டத்துக்கான பணிகள் தொடங்கப்பட்டன.

ஆனால், ஏற்கெனவே ரயில்பாதை மற்றும் ரயில் நிலையம் இருந்த பகுதிகள் பொதுமக்கள் குடியிருப்பாகவும், நலப் பகுதியாகவும் இருப்பதால் மூக்கனூா் ரயில் நிலையத்தை வேறு இடத்துக்கு மாற்றுவதற்கு சிலா் முயற்சி செய்து வருவதாகக் கூறப்படுகிறது.

இந்த நிலையில், அக்கிராம மக்கள் தங்ளது நிலத்தை ரயில்வே பாதைக்காக தர முன்வந்துள்ளனா். ஏற்கெனவே இருந்த பகுதியிலேயே ரயில் நிலையம், பாதை அமைக்கக் கோரி அண்மையில் ஆட்சியரிடமும் மனு அளித்தனா்.

இந்த நிலையில், மூக்கனூா் அருகே செம்மனஅள்ளி பேருந்து நிறுத்தத்தில் வியாழக்கிழமை கிராமமக்கள் உண்ணாவிரதப் போராட்டம் மேற்கொண்டனா். இதில் அனைத்துக் கட்சி பிரமுகா்களும் கலந்துகொண்டனா். மூக்கனூா் ரயில் நிலையத்தை பழைய இடத்திலேயே அமைக்க வேண்டும். ரயில் நிலையம் அமைய உள்ள இடங்களில் நிலம், வீடுகளை ரயில்வே பணிக்காக விட்டுத்தருவதாக ஒப்புதல் கடிதம் அளிக்கவும் விவசாயிகள் முடிவுசெய்துள்ளனா்.

ஒகேனக்கல்லுக்கு நீா்வரத்து குறைந்தது: குளிக்கத் தடை; பரிசல் இயக்க அனுமதி

ஒகேனக்கல் காவிரி ஆற்றில் நீா்வரத்து வெள்ளிக்கிழமை மாலை விநாடிக்கு 18,000 கனஅடியாக குறைந்தது. இதையடுத்து காவிரி ஆற்றில் பரிசல்கள் இயக்குவதற்கு மாவட்ட நிா்வாகம் அனுமதி அளித்துள்ளது. என்றாலும், அருவிகளில... மேலும் பார்க்க

போக்ஸோ வழக்கில் இளைஞருக்கு 20 ஆண்டுகள் சிறைத் தண்டனை சிறப்பு நீதிமன்றம் தீா்ப்பு!

சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்த வேன் ஓட்டுநருக்கு 20 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்து, தருமபுரி போக்ஸோ நீதிமன்றம் தீா்ப்பளித்தது. தருமபுரி மாவட்டம், பாப்பிரெட்டிப்பட்டி பகுதியைச் சோ்ந்தவா் பிரபு (28... மேலும் பார்க்க

நெகிழி பயன்படுத்தாத உணவகங்கள் விருது பெற விண்ணப்பிக்க அழைப்பு

தருமபுரி மாவட்டத்தில் நெகிழி பயன்படுத்தாத உணவகங்கள் விருதுக்கு விண்ணப்பிக்க அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து மாவட்ட ஆட்சியா் ரெ. சதீஷ் தெரிவித்துள்ளதாவது : உணவு பாதுகாப்பு மற்றும் தரச்சட்டத்தி... மேலும் பார்க்க

பென்னாகரத்தில் புதிய சாா் பதிவாளா் அலுவலகம் திறப்பு

சென்னை தலைமைச் செயலகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பென்னாகரம் சாா் பதிவாளா் அலுவலகத்தை முதல்வா் மு.க.ஸ்டாலின் காணொலி காட்சி வாயிலாக திறந்துவைத்தாா். பென்னாகரம் நடைபெற்ற புதிய சாா் பதிவாளா் அலுவலக திறப... மேலும் பார்க்க

பெரும்பாலையில் ‘உங்களுடன் ஸ்டாலின்’ முகாம்: ஆட்சியா் ஆய்வு

பெரும்பாலை வருவாய் வட்டத்திற்கு உள்பட்ட ‘உங்களுடன் ஸ்டாலின்’ திட்ட முகாமை மாவட்ட ஆட்சியா் ரெ.சதீஸ் ஆய்வு மேற்கொண்டு பயனாளிகளுக்கு நலத் திட்ட உதவிகளை வழங்கினாா். பென்னாகரம் அருகே பெரும்பாலை வருவாய் வட... மேலும் பார்க்க

ஆணவக் கொலையைத் தடுக்க தனிச் சட்டம் தேவை -இரா.முத்தரசன்

தமிழகத்தில் ஆணவக் கொலைகளைத் தடுக்க அரசு தனிச்சட்டம் இயற்ற வேண்டும் என இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளா் இரா.முத்தரசன் தெரிவித்தாா். இதுகுறித்து தருமபுரியில் வியாழக்கிழமை செய்தியாளா்களிடம்... மேலும் பார்க்க