செய்திகள் :

மூன்று நாள்களாக இந்தியர்களை எதிர்த்து போராடும் ஆஸ்திரேலிய மக்கள்; கண்டிக்கும் அரசு - என்ன பிரச்னை?

post image

இந்தியர்களுக்கு எதிராக ஆஸ்திரேலியாவில் பெரும் போராட்டம் கடந்த ஞாயிற்றுக்கிழமையில் இருந்து நடந்து வருகிறது.

இந்தப் போராட்டம் ஆஸ்திரேலியாவில் குடியேறி இருக்கும் அனைத்து வெளிநாட்டு மக்களுக்கும் எதிரானது.

இருந்தாலும், இது இந்தியர்களுக்கு எதிரான போராட்டம் என்று பார்க்கப்படுவதற்கான காரணம்... ஆஸ்திரேலியர்களுக்கு அடுத்ததாக அந்த நாட்டில் அதிகமாக இருக்கும் மக்கள் தொகை இந்தியாவினுடையது ஆகும்.

இந்தியர்களின் மக்கள்தொகை

2021-ம் ஆண்டு ஆஸ்திரேலியாவில் எடுக்கப்பட்ட மக்கள்தொகை கணக்கெடுப்பில், அங்கே கிட்டத்தட்ட 9.76 லட்சம் இந்தியர்கள் இருப்பது தெரிய வந்துள்ளது.

ஆஸ்திரேலியாவின் மொத்த மக்கள்தொகையே 2.6 கோடி தான்.

இந்தியர்கள் போக, பிற நாட்டினரும் ஆஸ்திரேலியாவில் அதிகம் குடியேறி இருக்கின்றனர்.

போராட்டம் | March for Australia
போராட்டம் | March for Australia

என்னப் பிரச்னை?

இது தான் ஆஸ்திரேலிய மக்களின் கோபத்திற்கு காரணம்.

'மார்ச் ஃபார்‌ ஆஸ்திரேலியா' என்று பெயரிட்டு நடத்திவரும் போராட்டம் குறித்து போராட்டக்காரர்கள் கூறுவதாவது...

"ஆஸ்திரேலியாவிற்கு எதிராக வெளிநாட்டு மக்கள் உள்நாட்டில் செயலாற்றுகின்றனர். உள்நாட்டு மக்களைப் பிரிக்கும் வேலைகளில் ஈடுபடுகின்றனர்.

அதனால், ஆஸ்திரேலியாவின் சொந்த மக்களுக்காகவும், கலாச்சாரத்திற்காகவும், தேசத்திற்காகவும், அதன் எதிர்காலத்தின் உரிமைக்காகவும் இந்தப் போராட்டம்" என்று தெரிவிக்கின்றனர்.

இந்தப் போராட்டம் ஏதோ ஒரு பகுதியில் மட்டும் நடக்கவில்லை.

ஆஸ்திரேலியாவின் சிட்னி, மெல்போர்ன், பிரிஸ்பேன், கான்பெர்ரா, அடிலெய்டு, பெர்த் உள்ளிட்ட பகுதிகளில் ஆயிரக்கணக்கான மக்கள் வீதியில் இறங்கி போராடி வருகின்றனர்.

அதிக இந்தியர்கள் எப்படி?

இந்தப் போராட்டத்தின்போது சில பதாகைகளில் இந்தியர்களுக்கு எதிராக எழுதப்பட்டுள்ளது.

அவற்றில் முக்கியமான ஒன்று, '100 ஆண்டுகளில் ஆஸ்திரேலியாவிற்குள் கிரேக்கர்கள் மற்றும்‌ இத்தாலியர்கள் குடியேறியதை விட, கடந்த ஐந்து ஆண்டுகளில் அதிக இந்தியர்கள்‌ குடியேறி இருக்கிறார்கள்' என்பது ஆகும்.

'எப்படி இவ்வளவு இந்தியர்கள் ஆஸ்திரேலியாவில் குடியேறினர்' என்ற கேள்வி எழுவது நியாயமானது தான்.

ஆனால், ஆஸ்திரேலியாவில் இந்தியர்கள் இப்போது குடியேற தொடங்கவில்லை. 1800-ம் ஆண்டு காலக்கட்டத்திலேயே, கூலித் தொழிலாளர்களாக இந்தியர்களை ஆஸ்திரேலியாவிற்கு அழைத்து சென்றனர் பிரிட்டிஷார்கள்.

1970-களில் வெள்ளையர் அல்லாதவர்களின் குடியேற்றத்தைக் கட்டுப்படுத்திய இனவெறி கொள்கையான 'வெள்ளை ஆஸ்திரேலியா கொள்கை' ரத்து செய்யப்பட்ட பின்னர், அந்தக் காலக்கட்டத்தில் இந்திய இன்ஜினீயர்களும், 1990 காலக்கட்டத்தில் இந்திய ஐ.டி ஊழியர்களும் மெல்ல மெல்ல ஆஸ்திரேலியாவில் குடியேறத் தொடங்கினர்.

போராட்டம் | March for Australia
போராட்டம் | March for Australia

2006-ம் ஆண்டு அப்போதைய ஆஸ்திரேலிய அரசு, இந்திய மாணவர்களுக்கு எளிதாக குடியுரிமைப் பெற வழி செய்தது. இதன் விளைவே, தற்போதைய நிலை ஆகும்.

அதிக வெளிநாட்டினர் குடியேறும் டாப் நாடுகளில் ஆஸ்திரேலியாவும் ஒன்று. இங்கு இருக்கும் எளிய சட்டதிட்டங்கள் தான் வெளிநாட்டினர் அங்கே அதிகம் குடியேறுவதற்கான காரணம் ஆகும்.

இதனால், இந்தியர்கள் தவிர்த்து, பிற நாட்டினரும் ஆஸ்திரேலியாவில் அதிகம் குடியேறி உள்ளனர்.

அரசாங்கம் என்ன சொல்கிறது?

ஆஸ்திரேலிய அரசாங்கமோ, இந்தப் போராட்டங்களைக் கண்டித்து, "இனவெறி மற்றும் இன மையவாதம் அடிப்படையிலான தீவிர வலதுசாரி செயல்பாடுகளுக்கு இந்த நாட்டில் இடம் கிடையாது" என்று கடுமையாக எச்சரித்துள்ளது.

ஆஸ்திரேலியாவில் இருக்கும் இந்தியர்களின் பாதுகாப்பை இந்திய அரசு உறுதி செய்ய வேண்டும். விரைவில் ஆஸ்திரேலிய அரசாங்கத்திடம் இந்திய அரசாங்கம் பேச்சுவார்த்தை நடத்த வேண்டும்.

'GST சீர்திருத்தங்கள் சிறு வணிகங்கள் செழிக்க உதவும்' - நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன்

சென்னை, நந்தம்பாக்கம் வர்த்தக மையத்தில் நடந்த தனியார் வங்கியின் நிகழ்ச்சியில் பேசிய மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன், "தனியார் துறை வங்கிகள் இந்தியாவின் தேச கட்டமைப்புக்கு முக்கிய பங்கு வகிக்கின... மேலும் பார்க்க

France: "தினமும் 100 ராணுவ வீரர்களுக்கு சிகிச்சை"- மருத்துவமனைகளை போருக்கு தயார் செய்வது ஏன்?

ஐரோப்பாவில் இன்னும் ஒரு வருடத்துக்குள் மிகப்பெரிய அளவில் போர் வெடிக்க வாய்ப்புகள் இருப்பதனால், இதுவரை இல்லாத வகையில் மருத்துவமனைகளை தயாராக இருக்கும்படி கூறியுள்ளது பிரான்ஸ் அரசு. ரஷ்யா மற்றும் உக்ரைன்... மேலும் பார்க்க

ADMK : மதிக்காத EPS விலகும் செங்கோட்டையன்? | TVK : Vijay -க்கு Srilanka அரசு பதிலடி |Imperfect Show

* அரசு மாளிகையை காலி செய்த ஜகதீப் தன்கர்?* வெள்ள பாதிப்பு- பஞ்சாப் முதல்வருடன் மோடி பேச்சு!* ஜம்மு காஷ்மீரில் வெள்ள பாதிப்புகளை பார்வையிட்ட அமித் ஷா?* மோடி இது குறித்து ஒரு வார்த்தைக்கூட பேசவில்லை...... மேலும் பார்க்க

"வெள்ள நீரை வீட்டில் சேமியுங்கள்; அணை கட்ட 10 வருடங்கள் ஆகும்" - பாகிஸ்தான் அமைச்சர் யோசனை

பாகிஸ்தானில் பெய்த வரலாறு காணாத பருவமழையால், 150 மில்லியன் மக்கள் தொகை கொண்ட அந்நாட்டின் முக்கிய கோதுமை உற்பத்தி மாகாணமான பஞ்சாப் மாகாணம் வெள்ளத்தில் மூழ்கியிருக்கிறது.அந்நாட்டு ஊடக தகவலின்படி, கனமழை ... மேலும் பார்க்க

'லேப்டாப் எங்க... தாலிக்கு தங்கம் எங்க..?' - கொந்தளித்த எடப்பாடி பழனிசாமி

மக்களை காப்போம் தமிழகத்தை மீட்போம் என்ற பெயரில் எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி பிரசார பயணத்தை மேற்கொண்டு வருகிறார். அந்தவகையில் மதுரை மேலூரில் எடப்பாடி பழனிசாமி பேசுகையில் இந்தியா கூட்டணியையு... மேலும் பார்க்க