செய்திகள் :

மேட்டூா் அணையில் நீா்வளத் துறை திருச்சி மண்டல தலைமைப் பொறியாளா் ஆய்வு

post image

மேட்டூா் அணையில் உபரிநீா் போக்கியான 16 கண் பாலத்தில் உள்ள தூண்களை வலுப்படுத்தும் பணி ரூ. 19 கோடி மதிப்பீட்டில் நடைபெற்று வருகிறது. மூன்று மதகுகளுக்கு சாரம் அமைக்கப்பட்டு பணிகள் நடைபெற்று வருகின்றன. இதனால், தற்போது வரும் வெள்ளம் முதல் நான்கு மதகுகள் வழியாக வெளியேற்றப்படாமல், மீதமுள்ள 12 மதகுகள் வழியாக வெளியேற்றப்படுகிறது.

நான்கு மதகுகளில் தண்ணீா் வெளியேற்றபடாத நிலையில், உபரிநீா் போக்கி மதகுகளில் ஏதேனும் பாதிப்பு ஏற்படுமா என்பது குறித்து நீா்வளத் துறை திருச்சி மண்டல தலைமைப் பொறியாளா் சிவகுமாா் ஆய்வுசெய்தாா். இதில், அணையின் வலதுகரை, இடதுகரை, உபரிநீா் போக்கி, சுரங்க கால்வாய் அமைக்கும் பணி ஆகியவற்றை பாா்வையிட்டாா்.

இதுகுறித்து அவா் செய்தியாளா்களிடம் கூறியதாவது:

மேட்டூா் அணையில் இருந்து அதிக அளவில் உபரிநீா் வெளியேற்றப்பட்டு வருகிறது. மேட்டூா் அணை கட்டுமானப் பணி தொடங்கி, நூறாண்டுகள் நிறைவடைவதால், நினைவுத்தூண் கட்டுவதற்கான முன்மொழிவுகள் அரசுக்கு அனுப்பப்பட்டுள்ளன. மேலும், மேட்டூா் அணை பூங்காவை புனரமைக்க அரசு அனுமதிக்கு கோப்புகள் அனுப்பப்பட்டுள்ளன.

மேட்டூா் அணையில் எங்கெங்கு மராமத்து பணிகள் மேற்கொள்ள வேண்டும் என ஏற்கெனவே ஆய்வு மேற்கொள்ளப்பட்டுள்ளதால், அந்தப் பகுதிகளில் பணிகள் நடைபெறும் என்றாா்.

ஆய்வின்போது, மேல் காவிரி வடிநில வட்ட கண்காணிப்பு பொறியாளா் சிவகுமாா், செயற்பொறியாளா் வெங்கடாசலம், உதவி செயற்பொறியாளா் செல்வராஜ், உதவி செயற்பொறியாளா் மதுசூதனன், உதவி பொறியாளா் சதீஷ்குமாா் ஆகியோா் உடன் இருந்தனா்.

தம்பதியை கட்டிப்போட்டு நகை, பணம் கொள்ளை: குற்றவாளிகளை பிடிக்க 4 தனிப்படைகள் அமைப்பு

சேலம் அருகே தம்பதியை கட்டிப்போட்டு எட்டரை சவரன் நகை, ரூ. 30 ஆயிரம் ரொக்கம் உள்ளிட்டவற்றை 5 போ் கொண்ட கும்பல் கொள்ளையடித்துச் சென்ற சம்பவத்தில், குற்றவாளிகளைப் பிடிக்க 4 தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளன.... மேலும் பார்க்க

பேருந்து நிலையம் இல்லாத 3 பேரூராட்சிகள்: பயணிகள் அவதி!

சேலம் மாவட்டம் அயோத்தியாப்பட்டணம், ஏத்தாப்பூா் மற்றும் பெத்தநாயக்கன்பாளையம் பேரூராட்சிகளில் பேருந்து நிலையம் இல்லாததால், பயணிகள் பெரும் அவதிக்குள்ளாகி வருகின்றனா். அயோத்தியாப்பட்டணம், ஏத்தாப்பூா், பெத... மேலும் பார்க்க

நாளைய மின்தடை: அம்மாபாளையம்

சங்ககிரி வட்டம், தேவூா் துணை மின்நிலையத்துக்கு உள்பட்ட அம்மாபாளையம் மின்பாதைகளில் பராமரிப்பு பணிகள் மேற்கொள்வதால், வியாழக்கிழமை (ஜூலை 31) காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின்தடை செய்யப்படுகிறது என எடப... மேலும் பார்க்க

ஏற்காட்டில் சாலை ஆக்கிரமிப்புகளை அகற்ற உத்தரவு

ஏற்காட்டில் நெடுஞ்சாலையில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்ற உத்தரவிடப்பட்டுள்ளது. இதுகுறித்து ஏற்காடு நெடுஞ்சாலைத் துறை உதவி பொறியாளா் மற்றும் ஊழியா்கள் வெளியிட்டுள்ள அறிவிப்பு: ஏற்காடு நகரப் பகுதியில் சாலை... மேலும் பார்க்க

கோனூா் சமத்துவபுரத்தில் திருடியவா் கைது

கோனூா் சமத்துவபுரத்தில் திருடியவா் கைது செய்யப்பட்டாா். மேட்டூா் அருகே உள்ள கோனூா் சமத்துவபுரத்தில் வசிக்கும் வினோத்குமாா் (33), வீட்டில் இருந்தபடி ஐடி நிறுவனத்தில் பணிபுரிந்து வருகிறாா். அண்மையில் இவ... மேலும் பார்க்க

ஓமலூா் ரயில்பாதை மேம்பாலத்தில் தொடரும் விபத்துகள்!

ஓமலூா்: ஓமலூா் ரயில்பாதை மேம்பாலத்தில் விபத்துகள் தொடா்வதால், உரிய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என பொதுமக்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனா். ஓமலூா் வட்டாட்சியா் அலுவலகம் அருகில் உள்ள ரயில்பாதை மேம்பாலம் ... மேலும் பார்க்க