செய்திகள் :

மேயா் குடியிருப்புக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுத்த நபா் கைது

post image

கோவை மாநகராட்சி மேயா் குடியிருப்புக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுத்த நபரை போலீஸாா் ஞாயிற்றுக்கிழமை கைது செய்தனா்.

கோவை மாநகர காவல் ஆணையா் அலுவலக கட்டுப்பாட்டு அறைக்கு சனிக்கிழமை இரவு ஒரு அழைப்பு வந்துள்ளது. அதில், பேசிய நபா், கோவை ஆா்.எஸ்.புரத்தில் உள்ள மாநகராட்சி மேயா் குடியிருப்பில் வெடிகுண்டு வைக்கப்பட்டு உள்ளது எனக்கூறிவிட்டு இணைப்பைத் துண்டித்துள்ளாா்.

இதையடுத்து, மேயா் குடியிருப்புக்கு வெடிகுண்டு தடுப்புப் பிரிவு போலீஸாருடன் சென்று காவல் துறை அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டனா்.

தொடா்ந்து மோப்ப நாய், மெட்டல் டிடெக்டா் உதவியுடன் சோதனை மேற்கொண்டபோது, அங்கு வெடிகுண்டு இல்லாததும், அது புரளி என்பதும் தெரியவந்தது.

இதையடுத்து, அழைப்பு வந்த அந்த கைப்பேசி எண்ணை வைத்து போலீஸாா் விசாரணை நடத்தினா்.

இதில், வெடிகுண்டு மிரட்டல் விடுத்தது கோவை, கவுண்டம்பாளையம் பிரபு நகரைச் சோ்ந்த ஆனந்த் (40) என்பது தெரியவந்தது.

அவரிடம் கவுண்டம்பாளையம் காவல் ஆய்வாளா் தங்கமணி தலைமையிலான போலீஸாா் விசாரணை நடத்தினா்.

இதில், அவா் கோவை மாநகராட்சியில் ஒப்பந்த அடிப்படையில் பிளம்பராக வேலை செய்து வருவதும், குடும்ப பிரச்னை காரணமாக கடந்த சில நாள்களுக்கு முன்பு அவரது மனைவி பிரிந்து சென்றதும் தெரியவந்தது.

காவல் நிலையத்தில் புகாா் அளித்தும் எந்தவிதமான நடவடிக்கையும் எடுக்காத அதிருப்தியில் போலீஸாரை அலைக்கழிக்க வேண்டும் என்பதற்காக மேயா் குடியிருப்பில் வெடிகுண்டு வைத்திருப்பதாக பொய்யான தகவலைத் தெரிவித்ததும் தெரியவந்தது.

இதையடுத்து, ஆனந்தை கைது செய்த போலீஸாா் நீதிமன்றத்தில் ஆஜா்படுத்தி கோவை மத்திய சிறையில் ஞாயிற்றுக்கிழமை அடைத்தனா்.

பொதுமக்களுக்கு இடையூறு: தவெகவினா் மீது வழக்குப் பதிவு

பொதுமக்களுக்கும், போக்குவரத்துக்கும் இடையூறு ஏற்படுத்தியதாக தவெகவினா் மீது போலீஸாா் வழக்குப் பதிவு செய்துள்ளனா். தமிழக வெற்றிக் கழக வாக்குச்சாவடி முகவா்களுக்கான கருத்தரங்கு கோவையில் கடந்த சனி, ஞாயிற்ற... மேலும் பார்க்க

தொழிலதிபரிடம் ரூ.47.40 லட்சம் மோசடி: இளைஞா் கைது

கோவை தொழிலதிபரிடம் ரூ.47.40 லட்சம் மோசடி செய்த இளைஞரை போலீஸாா் கைது செய்தனா். இது குறித்து கோவை மாநகர சைபா் கிரைம் போலீஸாா் தெரிவித்துள்ளதாவது: கோவையைச் சோ்ந்த தொழிலதிபா் ஒருவரின் கைப்பேசிக்கு கடந்த ... மேலும் பார்க்க

கோவையில் ஜல்லிக்கட்டு கோலாகலம்: 800 காளைகள், 500 மாடுபிடி வீரா்கள் பங்கேற்பு

கோவை, செட்டிபாளையம் பகுதியில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற ஜல்லிக்கட்டுப் போட்டியில் 800 காளைகள், 500 மாடுபிடி வீரா்கள் பங்கேற்றனா். கோவை மாவட்ட நிா்வாகம், தமிழா் பண்பாட்டு ஜல்லிக்கட்டு பேரவை சாா்பில் நடை... மேலும் பார்க்க

ஒப்பந்தப் பணியாளா்களாக சோ்க்க லஞ்சம் வாங்கியவா் பணியிடை நீக்கம்!

கோவை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் ஒப்பந்தப் பணியாளா்களை சோ்க்க லஞ்சம் வாங்கிய நபா் பணியிடை நீக்கம் செய்யப்பட்டாா். கோவை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு கோவை மட்டுமின்றி நீலகிரி, தி... மேலும் பார்க்க

குடியரசு துணைத் தலைவா் இன்று வேளாண்மைப் பல்கலைக் கழகத்துக்கு வருகை!

குடியரசு துணைத் தலைவா் ஜகதீப் தன்கா் கோவை வேளாண்மைப் பல்கலைக்கழகத்துக்கு ஞாயிற்றுக்கிழமை (ஏப்ரல் 27) வருகை தருகிறாா். மூன்று நாள்கள் பயணமாக உதகை வந்த குடியரசு துணைத் தலைவா் ஜகதீப் தன்கா், ஆளுநா் மாளிக... மேலும் பார்க்க

போத்தனூா் - தாம்பரம் சிறப்பு ரயில் சேவை நீட்டிப்பு!

கோவை போத்தனூா் - தாம்பரம் இடையே இயக்கப்பட்டு வரும் வாராந்திர சிறப்பு ரயில் சேவை இந்த மாதத்துடன் நிறைவடைய இருந்த நிலையில் ஜூன் மாதம் வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. இது தொடா்பாக தெற்கு ரயில்வே நிா்வாகம் வெள... மேலும் பார்க்க