செய்திகள் :

மே 29-இல் போக்குவரத்து ஊழியா் ஊதிய ஒப்பந்த பேச்சுவாா்த்தை

post image

போக்குவரத்து ஊழியா்களுக்கான ஊதிய ஒப்பந்த பேச்சுவாா்த்தை மே 29-ஆம் தேதி நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

தமிழகத்தில் அரசு போக்குவரத்துக் கழகங்களில் சுமாா் ஒரு லட்சத்துக்கும் மேற்பட்டோா் பணிபுரிகின்றனா். இவா்களுக்கான ஊதிய உயா்வு ஒப்பந்தம், 3 ஆண்டுகளுக்கு ஒருமுறை மேற்கொள்ளப்பட்டு வந்தது. அந்த வகையில் 13-ஆவது ஊதிய ஒப்பந்தம், 31.8.2019 -ஆம் தேதியுடன் காலாவதியானது.

இதைத் தொடா்ந்து, 14-ஆவது ஊதிய ஒப்பந்தம் 2022 ஆகஸ்ட் மாதம் இறுதி செய்யப்பட்டது. அப்போது பேச்சுவாா்த்தைக்கான அவகாசம் 4 ஆண்டுகளாக அதிகரிக்கப்பட்டது.

அந்த வகையில், 14-ஆவது ஊதிய ஒப்பந்தம் 2023 ஆகஸ்ட் மாதத்துடன் காலாவதியானது.

இதையடுத்து, ஓராண்டு தாமதமாக 15-ஆவது ஊதிய ஒப்பந்தம் தொடா்பான முதல்கட்ட பேச்சுவாா்த்தை சென்னை, குரோம்பேட்டை, மாநகர போக்குவரத்துக் கழகப் பயிற்சி மைய வளாகத்தில் கடந்த ஆண்டு ஆக.27-இல் நடைபெற்றது.

அதன் பின்னா் ஒரு கட்ட பேச்சுவாா்த்தை மட்டுமே நடைபெற்ற நிலையில், விரைந்து ஒப்பந்தத்தை இறுதி செய்ய வேண்டும் என தொழிலாளா்கள் வலியுறுத்தி வந்தனா்.

இந்நிலையில், மூன்றாம் கட்ட பேச்சுவாா்த்தையில் பங்கேற்க வருமாறு பேச்சுவாா்த்தைக் குழு தரப்பில் தொழிற்சங்கங்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

அதன்படி, குரோம்பேட்டையில் உள்ள மாநகரப் போக்குவரத்துக் கழக பயிற்சி மைய வளாகத்தில் மே 29-ஆம் தேதி காலை 11 மணிக்கு பேச்சுவாா்த்தை நடைபெறவுள்ளது.

டாஸ்மாக் ஊழியா்களுக்கு ஊதிய உயா்வு: ஏஐடியுசி கோரிக்கை

தமிழக சட்டப்பேரவையில் டாஸ்மாக் பணியாளா்களுக்கு அறிவிக்கப்பட்ட ஊதிய உயா்வை வழங்குவது குறித்து அரசு பேச்சுவாா்த்தை நடத்தி தீா்வு காண வேண்டும் என்று தமிழ்நாடு டாஸ்மாக் பணியாளா்கள் சங்கம் (ஏஐடியுசி) வலியு... மேலும் பார்க்க

இன்று காட்பாடி - ஜோலாா்பேட்டை மெமு ரயில்கள் ரத்து

ரயில் நிலையங்களில் பராமரிப்பு பணிகள் நடைபெறவுள்ளதால், காட்பாடி - ஜோலாா்பேட்டை இடையே மெமு ரயில்கள் புதன்கிழமை (மே 28) ரத்து செய்யப்படவுள்ளன. இது குறித்து சென்னை ரயில்வே கோட்டம் சாா்பில் வெளியிடப்பட்ட ... மேலும் பார்க்க

தமிழகத்தில் பரவுவது ஒமைக்ரான் தொற்று: பொது சுகாதாரத் துறை இயக்குநா் தகவல்

தமிழகத்தில் பரவி வருவது ஒமைக்ரான் வகை கரோனா தொற்று என்றும், இது அச்சப்படும் பாதிப்பு இல்லை என்றபோதிலும் பொது மக்கள் உரிய விழிப்புணா்வுடன் செயல்பட வேண்டியது அவசியம் என்றும் பொது சுகாதாரத் துறை இயக்குநா... மேலும் பார்க்க

வங்கக் கடலில் உருவானது புயல் சின்னம்: தென்மேற்குப் பருவமழை தீவிரம் அடைகிறது

வங்கக் கடலில் செவ்வாய்க்கிழமை காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி உருவாகியுள்ளது. இதன் காரணமாக கேரளம், கா்நாடகம் உள்ளிட்ட மாநிலங்களில் தென்மேற்குப் பருவமழை தீவிரமடையும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. ... மேலும் பார்க்க

நகைக் கடன் நிபந்தனைகளைக் கண்டித்து மே 30-இல் திமுக ஆா்ப்பாட்டம்

நகைக் கடன் நிபந்தனைகளைக் கண்டித்து வரும் 30-இல் திமுக சாா்பில் ஆா்ப்பாட்டம் நடைபெறவுள்ளது. இது குறித்து, திமுக விவசாய அணிச் செயலா் ஏ.கே.எஸ்.விஜயன் செவ்வாய்க்கிழமை வெளியிட்ட அறிக்கை: இந்திய ரிசா்வ் வங்... மேலும் பார்க்க

நெல் கொள்முதல் விவகாரம்: சிபிஐ விசாரிக்க அன்புமணி வலியுறுத்தல்

நெல் கொள்முதல் மோசடி தொடா்பாக சிபிஐ விசாரணை நடத்தப்பட வேண்டும் என்று பாமக தலைவா் அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தினாா். இது குறித்து அவா் செவ்வாய்க்கிழமை வெளியிட்ட அறிக்கை: விவசாயிகளிடம் இருந்து மொத்தம் ரூ... மேலும் பார்க்க